Skip to main content

எடப்பாடியா? ஓ.பி.எஸ்ஸா?எடப்பாடியை வீழ்த்த ஓபிஎஸ்ஸிற்கு உதவிய திமுக... எதிர்பாராத அதிர்ச்சியில் அதிமுக!

Published on 23/03/2020 | Edited on 23/03/2020

சென்னை பரங்கி மலை கண்டோன்மெண்ட் தேர்தல் மத்திய அரசின் பாதுகாப்புத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. கண்டோன்மெண்ட் போர்டுக்கு 5 வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடக்கும். மொத்தமுள்ள 15 கவுன்சிலர் பதவிகளில் பாதுகாப்புத் துறையினருக்கு 8 இடங்களும் பொதுமக்களுக்கு 7 இடங்களும் ஒதுக்கப்படும்.

இதில், 8 இடங்களைக் கொண்ட பாதுகாப்புத்துறையினருக்கு தலைவர் பதவியும், 7 இடங்களில் போட்டியிடும் பொது மக்களுக்கு துணைத் தலைவர் பதவியும் கொடுக்கப்படுகிறது. இந்த 8 பேரி லிருந்து தலைவர் பதவிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்படுவார். ஆனால், பொதுமக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 7 இடங்களுக்கும் தேர்தல் நடக்கும்.

 

dmk



ஐந்து வருடங்களுக்கு முன்பு நடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் பதவிக் காலம் 2020 பிப்ரவரியில் முடிவுக்கு வந்தது. அந்த வகையில் கடந்த மாதம் கண்டோன்மெண்ட் போர்டுக்கு தேர்தல் நடந்திருக்க வேண்டும். ஆனால், தேர்தலை 6 மாதங்களுக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள். அதேசமயம், தள்ளிவைக்கப் பட்ட 6 மாதங்களுக்கும் தற்போதைய கவுன்சிலர்களே தொடர்வார்கள் என்றும், ஆனால் துணைத்தலைவரை மட்டும் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் எனவும் முடிவு செய்யப் பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதன் முடிவுகள்தான் எதிர்பாராத அதிர்ச்சியை அ.தி.மு.க.வுக்கும் தி.மு.க.வுக்கும் தந்திருக்கிறது. காரணம், முதல்வர் எடப்பாடியை வீழ்த்த ஓ.பி.எஸ். தரப்புக்கு தி.மு.க. உதவியிருப்பதுதான்.

 

admk



இதுகுறித்து ஓ.பி.எஸ். ஆதரவாளர்களிடம் விசாரித்த போது, "கண்டோன்மெண்ட் போர்டுக்கான கடந்த தேர்தலில் மொத்தமுள்ள 7 இடங்களில் 6 இடங்களை அ.தி.மு.க.வும், 1 இடத்தை தி.மு.க.வும் கைப்பற்றியது. இதில் எடப்பாடியின் ஆதரவாளரான அ.தி.மு.க.வின் தேன்ராஜா துணைத்தலைவராக ஜெயித்திருந்தார். தற்போது தேர்தல் நடக்காமல் தள்ளிவைக்கப்பட்டிருக்கும் நிலையில், துணைத்தலைவருக்கான தேர்தல் மட்டும் கடந்த வாரம் நடந்தது. மீண்டும் தேன்ராஜா போட்டியிட் டார். ஆனால், அவரை எதிர்த்து அ.தி.மு.க.வில் ஆனந்த குமார் களத்தில் குதித்தார். இவர் ஓ.பி.எஸ்.சின் ஆதரவாளர். இதனால் எடப்பாடியா? ஓ.பி.எஸ்.சா? என்கிற டென்ஷன் இருந்தது. அ.தி.மு.க.வில் உள்ள 6 கவுன்சிலர்களில் தேன்ராஜாவும் ஆனந்தகுமா ரும் போட்டியிடுவதால் இருவரும் தலா 3 வாக்கு களை பெறக்கூடிய சூழல்.


அதனால் தி.மு.க.விடமுள்ள ஒரே கவுன்சிலரான விஜயசங்கரின் ஓட்டுதான் துணைத்தலைவர் யார் என்பதை தீர்மானிப்பதாக இருந்தது. இந்த நிலையில், ஓ.பி.எஸ். ஆதரவாளரான ஆனந்தகுமாரை, தி.மு.க. கவுன்சிலர் விஜயசங்கர் ஆதரித்து வாக்களிக்க, 4 வாக்குகளைப் பெற்று துணைத்தலைவர் பதவியை கைப்பற்றினார் ஆனந்த குமார். ஓ.பி.எஸ்.சின் மகன் ரவீந்திரநாத், தி.மு.க.வில் பேச வேண்டியவர்களிடம் பேசியதால் இதனை சாதிக்க முடிந்தது. எடப்பாடியின் ஆதரவாளரை தி.மு.க.வின் உதவியால் தோற்கடித்துள்ளார் ஓ.பி.எஸ். ஆதரவாளர்''‘என்கிறார்கள்.

இதற்கிடையே, அ.தி. மு.க.வை ஆதரித்து வாக்களித்த விஜயசங்கரை துரோகி என திட்டித்தீர்த்து வருகிறார்கள் கண்டோன்மெண்ட் நகர தி.மு.க.வினர்.


 

 

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.

Next Story

“மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
We will achieve great success says CM MK Stalin 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக சார்பில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18ஆவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளடங்கிய 102 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை அறிவித்த நாளிலிருந்து உடன்பிறப்புகளாம் நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, வெற்றியை உறுதி செய்து, தேர்தல் பணியில் தி.மு.க.வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.

மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் எழுச்சிகரமாகத் தொடங்கிய உங்களில் ஒருவனான என்னுடைய பரப்புரைப் பயணம் ஏப்ரல் 17 அன்று தமிழ்நாட்டின் தலைநகருக்குள் அடங்கிய தென்சென்னை - மத்திய சென்னை தொகுதிகளில் மக்களின் உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் நிறைவடைந்திருக்கிறது. நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு, வாக்குகளாகப் பதிவாகி, வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று கழகத்தினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான், இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும். 

We will achieve great success says CM MK Stalin 

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைக் கழகத் தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயலாற்றுவதுடன், வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக்கூடிய பாக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள். முழுமையான போர் வீரர்கள். இதில் வாக்குச்சாவடி முகவர்கள், மாற்று முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

அதற்கான பயிற்சியினை நமது கழகச் சட்டத்துறையின் உதவியுடன் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று மறக்காமல் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்ட விரும்புகிறேன். காகித வாக்குச் சீட்டுக்குப் பதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதால், நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறைய உள்ளன. அவை நம் தி.மு.கழகத்தின் சட்டத்துறை சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலமாக உங்களிடம் கையேடாக வழங்கப்பட்டிருக்கும். 

We will achieve great success says CM MK Stalin 

அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும். பாக முகவர்கள் உள்ளிட்ட கழகத்தின் தேர்தல் பணிகளை மேற்கொள்வோர் இவை ஒவ்வொன்றையும் உறுதி செய்யவேண்டும். வாக்குப்பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால்தான் வாக்கு எண்ணிக்கையின்போது கழகக் கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும். விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.