Skip to main content

எடப்பாடியா? ஓ.பி.எஸ்ஸா?எடப்பாடியை வீழ்த்த ஓபிஎஸ்ஸிற்கு உதவிய திமுக... எதிர்பாராத அதிர்ச்சியில் அதிமுக!

Published on 23/03/2020 | Edited on 23/03/2020

சென்னை பரங்கி மலை கண்டோன்மெண்ட் தேர்தல் மத்திய அரசின் பாதுகாப்புத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. கண்டோன்மெண்ட் போர்டுக்கு 5 வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடக்கும். மொத்தமுள்ள 15 கவுன்சிலர் பதவிகளில் பாதுகாப்புத் துறையினருக்கு 8 இடங்களும் பொதுமக்களுக்கு 7 இடங்களும் ஒதுக்கப்படும்.

இதில், 8 இடங்களைக் கொண்ட பாதுகாப்புத்துறையினருக்கு தலைவர் பதவியும், 7 இடங்களில் போட்டியிடும் பொது மக்களுக்கு துணைத் தலைவர் பதவியும் கொடுக்கப்படுகிறது. இந்த 8 பேரி லிருந்து தலைவர் பதவிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்படுவார். ஆனால், பொதுமக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 7 இடங்களுக்கும் தேர்தல் நடக்கும்.

 

dmk



ஐந்து வருடங்களுக்கு முன்பு நடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் பதவிக் காலம் 2020 பிப்ரவரியில் முடிவுக்கு வந்தது. அந்த வகையில் கடந்த மாதம் கண்டோன்மெண்ட் போர்டுக்கு தேர்தல் நடந்திருக்க வேண்டும். ஆனால், தேர்தலை 6 மாதங்களுக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள். அதேசமயம், தள்ளிவைக்கப் பட்ட 6 மாதங்களுக்கும் தற்போதைய கவுன்சிலர்களே தொடர்வார்கள் என்றும், ஆனால் துணைத்தலைவரை மட்டும் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் எனவும் முடிவு செய்யப் பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதன் முடிவுகள்தான் எதிர்பாராத அதிர்ச்சியை அ.தி.மு.க.வுக்கும் தி.மு.க.வுக்கும் தந்திருக்கிறது. காரணம், முதல்வர் எடப்பாடியை வீழ்த்த ஓ.பி.எஸ். தரப்புக்கு தி.மு.க. உதவியிருப்பதுதான்.

 

admk



இதுகுறித்து ஓ.பி.எஸ். ஆதரவாளர்களிடம் விசாரித்த போது, "கண்டோன்மெண்ட் போர்டுக்கான கடந்த தேர்தலில் மொத்தமுள்ள 7 இடங்களில் 6 இடங்களை அ.தி.மு.க.வும், 1 இடத்தை தி.மு.க.வும் கைப்பற்றியது. இதில் எடப்பாடியின் ஆதரவாளரான அ.தி.மு.க.வின் தேன்ராஜா துணைத்தலைவராக ஜெயித்திருந்தார். தற்போது தேர்தல் நடக்காமல் தள்ளிவைக்கப்பட்டிருக்கும் நிலையில், துணைத்தலைவருக்கான தேர்தல் மட்டும் கடந்த வாரம் நடந்தது. மீண்டும் தேன்ராஜா போட்டியிட் டார். ஆனால், அவரை எதிர்த்து அ.தி.மு.க.வில் ஆனந்த குமார் களத்தில் குதித்தார். இவர் ஓ.பி.எஸ்.சின் ஆதரவாளர். இதனால் எடப்பாடியா? ஓ.பி.எஸ்.சா? என்கிற டென்ஷன் இருந்தது. அ.தி.மு.க.வில் உள்ள 6 கவுன்சிலர்களில் தேன்ராஜாவும் ஆனந்தகுமா ரும் போட்டியிடுவதால் இருவரும் தலா 3 வாக்கு களை பெறக்கூடிய சூழல்.


அதனால் தி.மு.க.விடமுள்ள ஒரே கவுன்சிலரான விஜயசங்கரின் ஓட்டுதான் துணைத்தலைவர் யார் என்பதை தீர்மானிப்பதாக இருந்தது. இந்த நிலையில், ஓ.பி.எஸ். ஆதரவாளரான ஆனந்தகுமாரை, தி.மு.க. கவுன்சிலர் விஜயசங்கர் ஆதரித்து வாக்களிக்க, 4 வாக்குகளைப் பெற்று துணைத்தலைவர் பதவியை கைப்பற்றினார் ஆனந்த குமார். ஓ.பி.எஸ்.சின் மகன் ரவீந்திரநாத், தி.மு.க.வில் பேச வேண்டியவர்களிடம் பேசியதால் இதனை சாதிக்க முடிந்தது. எடப்பாடியின் ஆதரவாளரை தி.மு.க.வின் உதவியால் தோற்கடித்துள்ளார் ஓ.பி.எஸ். ஆதரவாளர்''‘என்கிறார்கள்.

இதற்கிடையே, அ.தி. மு.க.வை ஆதரித்து வாக்களித்த விஜயசங்கரை துரோகி என திட்டித்தீர்த்து வருகிறார்கள் கண்டோன்மெண்ட் நகர தி.மு.க.வினர்.


 

 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்