Skip to main content

ஸ்டாலின் குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த அதிமுக அமைச்சர்!

Published on 26/08/2019 | Edited on 26/08/2019

நீதிமன்றங்களின் தொடர்ச்சியான கேள்விகளாலும் கண்டனங்களாலும் உள்ளாட்சித் தேர்தலை நவம்பர் மாதத்திற்குள் நடத்த தயாராகிறது மாநில தேர்தல் ஆணையம். உள்ளாட்சித் தேர்தலுடன் நாங்குநேரி விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களையும் சேர்த்து நடத்தலாமா என்பது பற்றி மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகளும், தலைமைத் தேர்தல் ஆணைய அதிகாரிகளும் சமீபத்தில் ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். இதுகுறித்து அரசின் யோசனையையும் கேட்கப்பட்டுள்ளது.
 

dmk



தமிழகத்தில் 14 மாநகராட்சிகள், 122 நகராட்சிகள் உள்பட பேரூராட்சி, நகர மற்றும் கிராம பஞ்சாயத்து உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பதவிகளுக்கு தேர்தல் நடக்கவிருக்கிறது. இவற்றிற்கான வார்டு வரையறையுடன் தாழ்த்தப்பட்டவர்கள் பொது, தாழ்த்தப்பட்டவர்கள் பெண்கள், பழங்குடியினர் பொது, பழங்குடியினர் பெண்கள், பெண்கள், பொது என 6 வகையாக இடஒதுக்கீட்டின்படி வார்டு பதவிகள் பிரிக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அந்த வகையில், சென்னை மாநகராட்சியின் மேயர் பதவி பொது எனவும், தூத்துக்குடி மாநகராட்சியின் மேயர் பதவி தாழ்த்தப்பட்டவருக்கு எனவும் வகைப்படுத்தப்பட்டு அறிவித்திருந்தது தேர்தல் ஆணையம். தூத்துக்குடியை பொது மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும் எனக் கோரி வருகின்றனர் நாடார் சமுதாய அமைப்பினர்.


நம்மிடம் பேசிய தமிழ்நாடு நாடார் மகாஜன சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சதீஷ்மோகன், பொதுப்பிரிவில் இருந்த தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவியையும், தூத்துக்குடி ஒன்றிய தலைவர் பதவியும் தலித் சமுகத்தினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் தலித் சமூகத்தினர் 10 சதவீதத்திற்கும் குறைவாகத்தான் இருக்கிறார்கள். சென்னை, சேலம், தஞ்சை மாநகராட்சிகளில் தலித்துகள் 15 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் நிலையில் அவற்றில் ஒன்றை தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யாமல் தூத்துக்குடியை ஒதுக்கியது அநீதியானது''‘என போர்க்கொடி உயர்த்துகிறார். இந்த நிலையில்தான், உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலினை களமிறக்க தி.மு.க. தலைமை முடிவு செய்திருப்பதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணிக்கு தகவல் கிடைக்கவே, கடந்த வாரம் ஒரு ஆலோசனைக் கூட்டத்தை தனது வீட்டில் நடத்தினார். அமைச்சருக்கு நெருக்கமான அதிகாரிகள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டு பல யோசனைகளைத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து விசாரித்தபோது, ‘தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதியை நாங்குநேரி அல்லது விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் களமிறக்குவது பற்றிய யோசனை கட்சி மேலிடத்திடம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவை இரண்டும் சாதி வாக்குகளின் அடிப்படையில் வெற்றியை நிர்ணயிக்கும் தொகுதிகள் என்பதால், சென்னை மேயர் பதவிக்கு நிறுத்தலாமா என ஆரம்பகட்ட ஆலோசனை நடந்துள்ளது. இவையெல்லாம் அமைச்சர் வேலுமணி வீட்டு ஆலோசனையில் எதிரொலிக்க, "உதயநிதி போட்டியிடுவதை தடுத்து ஸ்டாலினுக்கு அதிர்ச்சியை தருவதில்தான் உங்களின் வியூகம் இருக்கிறது. சென்னை மாநகராட்சி அ.தி.மு.க. வசம் இருப்பதுதான் உங்களுக்கு நல்லது' என யோசனை தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, தூத்துக்குடியை தலித்களுக்கு ஒதுக்கியதில் நாடார் சமூகம் அதிருப்தியில் இருப்பதால் அந்த மாநகராட்சியை பொது பிரிவுக்கும், பொதுப் பிரிவிலுள்ள சென்னை மாநகராட்சியை தலித் பிரிவுக்கும் மாற்றினால் போதும். உதயநிதி போட்டியிடுவதை தடுத்து ஸ்டாலின் குடும்பத்துக்கு அதிர்ச்சியை கொடுப்பதோடு நாடார் சமூகத்தின் ஆதரவும் அ.தி.மு.க.வுக்கு அதிகரிக்கும் என சொல்லப்பட, இதனை முதல்வர் எடப்பாடியின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார் வேலுமணி. வெளிநாடு செல்வதற்கு முன்பு அமைச்சரவை கூட்டத்தை கூட்டவிருக்கும் எடப்பாடி, அதில் இப்பிரச்சனையை விவாதிப்பார்'' என்கிறார்கள் அ.தி.மு.க. சீனியர்கள். 

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். 

Next Story

“எடப்பாடி செய்த சதியை முறியடிக்கத் தயாராக இருக்கிறேன்” - ஓ.பி.எஸ்.ஸின் பிரத்யேக பேட்டி

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
ready to defeat tready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPShe conspiracy of EPS says Exclusive interview with OPS

தேனி பாராளுமன்றத் தொகுதியில் பி.ஜே.பி. கூட்டணி சார்பில் அ.ம.மு.க. வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடுவதால் ஓ.பி.எஸ்.ஸின் முழு ஆதரவும் டிடிவிக்கு இருக்கிறது. அதோடு டிடிவியும் நான் போட்டி போடுகிறேன் என்று தெரிந்து தான் இத்தொகுதியை ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகன் ஓ.பி.ஆர்.ரும் எனக்காக விட்டுக் கொடுத்தும் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு ஓபிஎஸ்ஸும் டி.டி.வி.யும் தேர்தல் களத்தில் நெருக்கமாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான நேற்று 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய டிடிவி தினகரன் மதியத்துக்கு மேல் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதாக இருந்தது. இந்த விஷயம் ஓபிஎஸ்-க்கு தெரியவே, மதியம் ஒன்னேகால் மணிக்கு எல்லாம் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் நின்று கொண்டு டிடிவியை வரவேற்க காத்துக் கிடந்தார். அவருடன் ஆதரவாளர்களான செல்லமுத்து மற்றும் சையதுகான் ஆகியோர் இருந்தனர்.

ad
ஓபிஎஸ் உடன் நமது நிருபர்

அப்போது நாம் முன்னாள் முதல்வரான ஓபிஎஸ்ஸிடம் சென்று நம்மை நக்கீரன் நிருபர் என்று அறிமுகப்படுத்திய உடனே ஆசிரியர் நல்லா இருக்காரா? என்று கேட்டார். அதைத் தொடர்ந்து நாமும் ஆசிரியர் நலமாக இருக்கிறார் என்று கூறியவாறே தொகுதியின் தேர்தல் பணி எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டபோது, “நான் போட்டி போடும் அந்த தொகுதியில் பிரதமர் மோடி தான் போட்டிப் போடுவதாக இருந்ததால் அங்குள்ள கட்சியினர் தொகுதியை ஒரு கட்டுக்கோப்பாக பிரதமருக்காக தயார் செய்தும் வைத்திருந்தனர். ஆனால் பிரதமர் இங்கே போட்டி போடவில்லை என்பதால் என்னையத்தான் நிற்க சொன்னார். அதன்பேரில் தான் போட்டி போடுகிறேன்” என்றவரிடம் அத்தொகுதியில் முக்குலத்தோர் சமூக ஓட்டுக்கள் அதிகமாக இருக்கிறதா என்று கேட்டபோது, அத்தொகுதியில் மொத்தம் பதினாறு லட்சம் ஓட்டுகள் இருக்கிறது. இதில் சிறுபான்மை சமூக ஓட்டுகள் இரண்டு லட்சம் இருப்பதாக தெரிகிறது. அதுபோல் முக்குலத்தோர் சமூக ஓட்டுகள் ஆறு லட்சத்திற்கு மேல் இருப்பதாக தெரிகிறது. மீதி மற்ற சமூக மக்கள் இருக்கிறார்கள் என்றவரிடம், உங்களுடைய வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு என்னுடைய வெற்றி உறுதி இறைவன் இருக்கிறார்” என்றார்.

உங்களை பெயரிலேயே ஐந்து சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “நான் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே எடப்பாடி செய்த சதி. அதையும் முறியடிக்க தயாராக இருக்கிறேன்” என்றார். தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் கூட டிடிவிக்கு மறைமுகமாக சப்போர்ட் பண்ண இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறதே என்று கேட்டதற்கு சிரித்துக் கொண்டே “அதுவும் நடக்கலாம் நான் சொன்னது போல் தமிழகம் முழுவதுமே அ.தி.மு.க. படுதோல்வி அடையும்” என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.

ready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPS

அப்போது தேர்தல் பிரச்சார வாகனத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் இரண்டேகால் மணிக்கு டிடிவி வந்தார். அவரை ஓபிஎஸ் சால்வை அணிவித்து வரவேற்றார். அதன்பின் ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் மரத்தடியிலேயே நின்றார். அப்போது பயனாளிகளுக்காக போடப்பட்டிருந்த இரும்பு சேரில் ஓ.பி.எஸ் உடன் வந்த இருவரும் உட்கார்ந்து இருந்தனர். அதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியான ஆட்சியரிடம் தாக்கல் செய்துவிட்டு வந்தார். வந்தவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியும் கொடுத்தார். அதுவரை ஓபிஎஸ் டிடிவியுடனே நின்றுவிட்டு டிடிவியை பிரச்சார வேனில் திரும்ப வழியனுப்பி விட்டுத்தான் திரும்பினார்.