Advertisment

"அவர் வராமல் நான் தலைமை ஏற்பதற்கு வருந்துகிறேன்!" - கலங்கிய பேராசிரியர் 

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல்நலக்குறைவு காலமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்இன்று (07 மார்ச்2020)அதிகாலை ஒரு மணி அளவில் அவர் காலமானார்.

Advertisment

kalaignar perasiriyar

மறைந்த அன்பழகன், கலைஞரின் நெடுங்கால நண்பராவார். பேரறிஞர் அண்ணாவால் திமுக தொடங்கப்பட்ட காலத்திலிருந்து கலைஞரின் மறைவு வரை இருவரும் இணைந்துசெயலாற்றினர். "1942ஆம் ஆண்டில்அண்ணாவால் அறிமுகம் செய்யப்பட்ட அண்ணா பல்கலைக்கழகமாணவராக இவரை நான் அறிந்தேன். நான் தொடங்கியதமிழ் மாணவர் மன்றத்தின் ஆண்டுவிழாவில் கலந்துகொள்ள வந்தார். அந்த விழாவிற்குநான் அழைத்திருந்த பலர் வரவில்லை. நாங்கள் இருவரும் சேர்ந்துஅந்த விழாவை நடத்தினோம். அன்று முதல் தொடர்கிறது எங்கள் நட்பு" என்று கலைஞர்குறிப்பிட்டிருக்கிறார். வயதால் கலைஞரை விட மூத்தவரான அன்பழகன் கலைஞரின் தலைமையை ஏற்று அவருக்கு உறுதுணையாக செயல்பட்டவர்.

கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம், கலைஞரின் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபொழுது திமுகவின் பொதுகுழுக்கூட்டம் நடைபெற்றது. அதற்குத் தலைமையேற்று நடத்திய அன்பழகன், "கலைஞர் தலைமையேற்று நடத்தவேண்டிய இந்தக் கூட்டத்தை அவர் வராமல்நான் தலைமையேற்று நடத்தும்நிலை வந்ததற்காக மிகுந்த வருத்தப்படுகிறேன்" என்று கூறியே தனது பேச்சைதொடங்கினார். அந்தக் கூட்டத்தில்தான் ஸ்டாலின், செயல்தலைவராக அறிவிக்கப்பட்டு அதை பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரித்துதீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இப்படி, சந்தித்து நண்பரான அன்றிலிருந்து இறுதிவரைபேராசிரியர், கலைஞரின் நண்பராகதிராவிடஇயக்கத்தின் செயல்வீரராக, தன்னை முன்னிலை படுத்திக்கொள்ளாமல் கொள்கைக்காகவும் இயக்கத்துக்காகவும் வாழ்ந்தார்.

Advertisment

anbalagan kalaignar
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe