Skip to main content

முன்னாள் மேயர் சம்பவத்தில் இன்னும் என்னென்ன மர்மங்கள் புதைந்துள்ளதோ? அதிர்ச்சி ரிப்போர்ட் !

Published on 01/08/2019 | Edited on 01/08/2019

உமா மகேஸ்வரி படுகொலை ஆதாயக் கொலைதான் என அறிவித்த நெல்லை கமிஷனர் பாஸ்கரன், அதன் அடிப்படையிலேயே ஏ.சி. ஒருவரின் தலைமையில் தனிப்படைகளை அமைத்தார். அந்தப் படையிலிருந்த மேலப்பாளையம் இன்ஸ்பெக்டர் பர்ணபாஸ், பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டர் நாகராசன், க்ரைம் இன்ஸ்பெக்டர் பெரியசாமி ஆகியோர் அடங்கிய தனிப்படையும் அதே கோணத்தில்தான் கொலையாளிகளைத் தேட ஆரம்பித்தது.

 

nellai



இந்தக் கோணத்தில் விசா ரணை செல்வதைப் பார்த்து டி.ஜி.பி. அலுவலகம் டென்ஷனானதையும் அதன்பின் விசாரணையின் கோணத்தை மாற்றியதையும் கடந்த இதழில் எழுதியிருந்தோம். மேலும் இந்தக் கொலை வேலையில் ஒரு பெண் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அந்தப் பெண்ணைத் தேடி ஒரு டீம் மதுரைக்கு விரைந்துள்ளதாகவும் எழுதியிருந்தோம்.
 

nellai



அந்தப் பெண் நெல்லை மாவட்ட தி.மு.க. துணைச்செயலாளரான சீனியம்மாள்தான் என தகவல் பரவ ஆரம்பித்ததும் பதறிவிட்டார் சீனியம்மாள். ""நடக்க முடியாத நிலையில மதுரையில் என் மகள் வீட்டில் தங்கி சிகிச்சை எடுத்துக்கிட்டிருக்கேன். கட்சி நிகழ்ச்சிகளில் உமா மகேஸ்வரியை பார்ப்பதோடு சரி, மத்தபடி எனக்கும் அவருக்கும் தனிப்பட்ட உறவோ, பகையோ கிடையாது''’என மீடியாக்களுக்கு ஓப்பனாக பேட்டி கொடுத்தார்.

 

dmk



தங்கள் வேலை முடிந்ததும் கொலை யாளிகள், வீட்டின் பல இடங்களில் தடயங்களை அழித்துவிட்டுச் சென்றுள்ளனர். கொலை நடந்த மறுநாள் உமா மகேஸ்வரி ரத்தவெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதுபோல இரண்டு போட்டோக்கள் வாட்ஸ்-அப்களில் உலா வந்தன. அவற்றில் ஒரு போட்டோ குப்புறக் கிடப்பது போலவும் மற்றொன்று மல்லாந்த நிலையிலும். இந்த போட்டோக்களை ரிலீஸ்பண்ணியது யாராக இருக்கும் என்ற மண்டைக் குடைச்சலில் இருக்கிறார் கமிஷனர் பாஸ்கரன்.

 

incident



இதற்கிடையே நெல்லை கே.டி.சி. நகர் பாலத்திலிருந்து டி.ஐ.ஜி. பங்களா நோக்கிச் செல்லும் சாலையிலுள்ள கமர்ஷியல் காம்ப்ளக்சை தன்னுடைய அண்ணன் வழி உறவினர் ஒருவரின் பெயரில் எழுதி வைத்திருக்கிறார் உமா மகேஸ்வரி. இதனால் முருக சங்கரனின் உறவினர் வழியில் உறுமலும் பொருமலும் ஆரம்பித்திருந்ததையும் கவனத்தில் கொண்டு விசாரணை போய்க் கொண்டிருந்தது.


இப்படி பல கோணங்களிலும் விசாரணை போய்க்கொண்டிருந்த நிலையில்தான், உமா மகேஸ்வரியின் வீட்டிற்கு அருகே இருக்கும் பெந்தே கொஸ்தே சர்ச்சில் இருந்த சி.சி.டி.வி. கேமராவின் ஃபுட்டேஜ், போலீசுக்கு கை கொடுத்தது. அந்த ஃபுட்டேஜில் வெள்ளை நிற ஸ்கார்பியோ கார் ஒன்று பதினைந்து நாட்களுக்குள் மூன்று முறை சர்ச் அருகே நிறுத்தப் பட்டிருந்தது. இதை வைத்து அந்த ஸ்கார்பியோவின் உரிமையாளரின் செல்போன் டவர் சிக்னலை டிரேஸ் பண்ணியதில் சிக்கியவர்தான் சீனி யம்மாளின் மகன் கார்த்திகேயன். இவர் மீது கயத்தாறு போலீஸ் ஸ்டேஷனிலும் நெல்லை மாவட்டம் பணவடலி சத்திரம் ஸ்டேஷனிலும் வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குகள் உள்ளனவாம்.


கார்த்திகேயன் கக்கிய தகவல்படி, கொலை ஆயுதங்கள் தாமிரபரணி ஆற்றில் புதைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்துகொண்டு, 29-ஆம் தேதி மாலை, ஆயுதப் புதையலை எடுக்க புறப்பட்டது தனிப்படை. இதற்கிடையே இந்தக் கொலை வழக்கின் தன்மை கருதி, சி.பி.சி.ஐ.டி.க்கு வழக்கை மாற்றி 29-ஆம் தேதி மாலை உத்தரவிட்டார் டி.ஜி.பி. திரிபாதி. முன்னாள் மேயர் + கணவர் + பணிப்பெண் படுகொலையில் இன்னும் என்னென்ன மர்மங்கள் புதைந் துள்ளதோ?

 

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy befell the young man who climbed the Velliangiri mountain

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது டிரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, கீழே இறங்கியபோது 7 வது மலையில் திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் (வயது 31) என்பவர் கடந்த 18 ஆம் தேதி தவறி விழுந்தார். இதனால் அவரின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவால் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய 7 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக் உயர்ந்துள்ளது. முன்னதாக சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.