Skip to main content

சிம்பிளாக முடிந்த திமுக வேலுவின் மருத்துவமனை திறப்பு விழா! காரணம் என்ன?

Published on 03/09/2020 | Edited on 03/09/2020
Tiruvannamalai

 

 

திருவண்ணாமலை அடுத்த சோ.புத்தியந்தல் கிராமத்தில் அருணை கல்வி குழுமத்தின் பள்ளி, பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக், மகளிர் கலை அறிவியல் கல்லூரி, இருபாலர் கலை அறிவியல் கல்லூரி, நர்சிங் கல்லூரி, பார்மஸி கல்லூரி போன்ற கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதனை திமுக முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளருமான எ.வ.வேலுவின் குடும்ப அறக்கட்டளை நடத்திவருகிறது.

 

தற்போது சில வருடங்களாக பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கை இல்லாததால் வருமானம் இல்லாமல் மூடப்பட்டு வருகின்றன. அதன்படி வேலுவின் ஒரு பொறியியல் கல்லூரியும் மூடப்பட்டது. இதனால் வேலுவின் பார்வை மருத்துவக்கல்லூரி மீது திரும்பியது. வேலு குடும்பத்தின் நீண்ட நாள் கனவு மருத்துவக்கல்லூரி. அதற்கு இதுதான் சரியான தருணம் என முடிவு செய்து களத்தில் இறங்கினார்.

 

கடந்த ஓராண்டாக இதற்கான அனுமதிக்காக டெல்லி, மும்பை, குஜராத், சென்னை, சேலம் என வலம் வந்து மூன்று இலக்க கோடிகளை வாரி தந்து அதிகாரிகள், மத்திய – மாநிலத்தில் ஆட்சியில் உள்ள பாஜக – அதிமுக பிரமுகர்களுக்கு கப்பம் கட்டி அனுமதி வாங்கினார். பொறியியல் கல்லூரியாக செயல்பட்டு வந்த சில கட்டடங்களை மருத்துவமனைக்கு தகுந்தார்போல் மாற்றுவது, புதிய கட்டடங்களில் சில கட்டி மருத்துவக்கல்லூரி தொடங்க பொதுமுடக்கமான கரோனா காலத்திலேயே பணிகள் ரகசியமாக நடந்தன. அந்த கட்டிடங்கள் கட்டப்பட்டு கடந்த ஆகஸ்ட் 31ந்தேதி புறநோயாளிகள் பிரிவு மருத்துவமனையை வேலுவின் மனைவி சங்கரிவேலு திறந்து வைத்தார்.

 

இந்த நிகழ்ச்சி குறித்து கடைசி நேரத்தில் முகநூல் மற்றும் வாட்ஸ்அப் மூலமாக தகவல் பரப்பினர். திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நெருக்கமானவர் என அறியப்படும் வேலு, எல்லாவற்றையும் பெரியதாக, ஆடம்பரமாக, பந்தாவாக செய்யும் வேலு, தனது கனவான மருத்துவக்கல்லூரிக்கான மருத்துவமனை தொடக்க விழாவை இப்படி சிம்பிளாக முடித்துவிட்டாரே என பலரும் ஆச்சர்யம் அடைந்தனர்.

 

இதுகுறித்து திமுக நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, திமுக தலைவர் ஸ்டாலினிடம் திறந்து வைக்க வருமாறு கேட்டார். அதற்கு அவர் கரோனா காலத்தில் பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்வதில்லை எனச்சொன்னார். வீடியோகால் வழியாக திறந்து வைக்க கேட்டும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. அதற்கு காரணம், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தொடங்க அனுமதி பெற எடுக்கப்பட்ட வழிகள், அவர் சந்தித்த நபர்கள், கட்டங்களுக்கு அனுமதி பெற செய்யப்பட்ட விதிமுறை மீறல்கள் போன்றவை குறித்த தகவல்கள் தெரிந்து திமுக தலைவர் அதிருப்தியாகிவிட்டார். அந்த காரணங்களாலே திறப்பு விழாவில் கலந்து கொள்ளாமல் தட்டி கழித்துவிட்டார், இதனால் வேலு அதிர்ச்சியாகிவிட்டார். இது கரோனா காலம் அதனால் தலைவர்கள் யாரையும் அழைக்கவில்லை எனச்சொல்லி, தன் மனைவியை வைத்து புறநோயாளிகள் பிரிவை திறந்துவிட்டார் என்றார்கள்.

 

வேலுவுக்கு நெருக்கமான திமுக வட்டாரங்களோ, டிசம்பர் மாதம் மருத்துவமனை கட்டடங்களை திறந்துவைக்க திமுக தலைவர் ஒப்புதல் தந்துள்ளார். அப்போது பிரமாண்டமாக விழா நடைபெறும் என்கிறார்கள்.

 

பல சர்ச்சைகளுக்கிடையே அருணை மருத்துவமனை தொடங்கப்பட்டுவிட்டது. அடுத்ததாக மருத்துவக்கல்லூரிக்கான அனுமதி கிடைக்கவேண்டும். இதற்கான வேலைகளில் தீவிரமாக உள்ளார் வேலு.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.