Skip to main content

தி.மு.க. நிர்வாகியை எச்சரித்த மு.க.ஸ்டாலின்! சென்னை தி.மு.க.வில் திகு! திகு! 

Published on 14/08/2020 | Edited on 14/08/2020

 

mks

 

தென்சென்னை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுடன் காணொளி காட்சி மூலம் 13.8.2020 அன்று ஆலோசனை நடத்தினார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். மாவட்டச் செயலாளர் மா.சுப்ரமணியன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் ஸும் செயலியில் இணைந்திருந்தனர். சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து நிர்வாகிகளிடன் கலந்துரையாடினார் ஸ்டாலின். மாவட்டத்தில் நடந்து வரும் பணிகள் குறித்து நிர்வாகிகள் எடுத்துச் சொன்னார்கள். 

 

கே.கே.நகர் தனசேகரனுக்கு பேசும் வாய்ப்பு வந்த போது, "நிறைய நிர்வாகிகள் உங்களோட(ஸ்டாலின்) பேச நினைக்கிறார்கள். ஆனா, அவங்களுக்கு வாய்ப்பு கொடுக்க மாட்டேங்கிறாங்க" என வருத்தத்தில் இருப்பதுபோல பேசியிருக்கிறார். உடனே ஸ்டாலின், "அப்படி எதுவும் இல்லையே யாருக்கு வாய்ப்பு கிடைக்கலைன்னு ரெண்டு பேரைச் சொல்லுங்க" என தனசேகரனிடம் கேட்க, "பேரெல்லாம் வேண்டாம் தளபதி" என அவர் இழுக்க, "கட்சியோட தலைவர் நான் கேட்கிறேன். சொல்லுங்க" எனச் சொல்லியும் பெயர்களைச் சொல்லவில்லை தனசேகரன். 

 

உடனே கோபமான ஸ்டாலின், "நிகழ்ச்சியை தலைமைதான் ஏற்பாடு செய்திருக்கிறது. இதில் எல்லோரிடமும் நான் பேசுகிறேன். எல்லோருக்கும் வாய்ப்பும் தரப்படுகிறது. அப்புறம் எப்படி வாய்ப்புத் தரலைன்னு உங்கக்கிட்டே சொல்வாங்க. இதா பாருங்க, தனசேகர், உங்களைப் பத்தி நிறைய புகார் வருது. போனா போகிறதுன்னு விட்டு வெச்சிருக்கேன். கு.க.செல்வம் இஷ்யூவால நீங்க தப்பிச்சிக்கிட்டு இருக்கீங்க. உங்க மேல வர்ற புகாரை சொன்னா தாங்கமாட்டீங்க. உங்க ஏரியாவுல கட்சி ஆஃபிசையே இழுத்துப் பூட்டி வெச்சுருக்கீங்க. பார்த்து நடந்துக்குங்க!" எனக் கோபமாக எச்சரிக்கை செய்திருக்கிறார் ஸ்டாலின். 

 

பதில் பேசாமல் அமைதியாக இருந்துள்ளார் தனசேகரன். தனசேகரனுக்கு விழுந்த டோஸ், மாவட்ட நிர்வாகிகளிடன் எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள் தி.மு.க. நிர்வாகிகள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Next Story

அமைச்சர் காரில் தேர்தல் பறக்கும் படை சோதனை

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Election Air Force Test in Ministerial Car

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரின் காரை மடக்கி தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அரியலூர் அஸ்தினாபுரம் பகுதியில் வந்த அமைச்சர் சிவசங்கரின் காரை மடக்கி தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் நேற்றைய தினம் நீலகிரியில் திமுகவின் நாடாளுமன்ற வேட்பாளர் ஆ. ராசாவின் காரில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.