Skip to main content

போராட்டம் என தி.மு.க. அறிவிக்க, அ.தி.மு.க. தரப்பிலும் கண்டனங்கள் வெளிப்பட...

Published on 04/07/2019 | Edited on 04/07/2019

எங்கேயோ இருக்கிற மாரியாத்தா என்மேல வந்து ஏறு ஆத்தா என்பதைப்போல புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, டுவிட்டரில் தெரிவித்த கருத்தை எதிர்த்து தமி ழகத்தின் சட்டமன்றத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆகியோர் பேசிய பேச்சுகளை அவைக்குறிப்பிலிருந்து சட்டப்பேரவை சபாநாயகர் நீக்கி வைத்துள்ளார்.

 

dmk



இந்தியாவின் ஆறாவது மிகப்பெரிய நகரமான சென்னை, முன்பு வெள்ளத்தில் தத்தளித்தது. தற்பொழுது வறட்சியின் கோரப்பிடியில் சிக்கிய முதல் நகரமாக மாறியுள்ளது. மக்களின் சுயநல எண்ணமும் கோழைத்தனமான அணுகு முறையும், ஊழல் அரசியல், அலட்சிய அதிகாரம், மோசமான ஆட்சி இவையே தமிழகத்தில் இந்த அளவுக்கு வறட்சி ஏற்பட காரணம்'' என டுவிட்டரில் கருத்து பதிவிட்டிருக்கிறார் கிரண்பேடி.

 

admk



அதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில், "நரேந்திர மோடி தண்ணீரை சேமிப்பதன் அவசியத்தைப் பற்றி மன் கீ பாத்தில் பேசியுள்ளார். தண்ணீரை எப்படி சேமிப்பது என்பதற்கு புதுச்சேரி மிகச்சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. இங்கு பண்டைக்காலம் முதல் பிரெஞ்சு ஆளுகைக்குட்பட்ட காலம், சுதந்திர இந்தியா என அனைத்து காலகட்டத்திலும் தண்ணீர் சேமிப்பு சிறப்பாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது'' என எழுதியுள்ளார் புதுவை ஆளுநர்.

 

kiran bedi



இந்தக் கருத்து பா.ஜ.க.வுக்கு எதிராக வாக்களித்த தமிழக மக்களை, பா.ஜ.க.வுக்கு ஆதரவாக வாக்களித்த வடஇந்தியாவைச் சேர்ந்தவரான கிரண்பேடி கிண்டலடிக்கிறார் என தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பலைகளை உருவாக்கியது. "தமிழக மக்களை கோழைகள், சுயநலமிக்கவர்கள் என தமிழர்களின் வீரம் மிக்க வரலாறு தெரியாமல் கிரண்பேடி விமர்சித்தது தவறு. கவர்னரான அவரை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும்'' என்கிறார் தி.மு.க. தலைவர் ஸ்டாலின்.

 

admk



கிரண்பேடி சொல் வதுபோல பாண்டிச்சேரியில் குடிநீர் பிரச்சினை இல்லையா? என புதுச் சேரி மார்க்சிஸ்ட் தலைவர் ராஜாங்கத்திடம் கேட்டோம். புதுவையில் 430 ச.கி.மீட்டரில் 87 ஏரிகள் உள்ளன. அவை அனைத்தும் வறண்டுவிட் டன. பல இடங்களில் நிலத்தடி நீரை நம்பித்தான் நாங்கள் வாழ்கிறோம். கடற்கரைப் பகுதிகளில் பத்து கிலோமீட்டர் அளவிற்கு கடல் நீர் உள்ளே புகுந்துவிட்டது. பாகூர், கிருமாம்பாக்கம் பகுதிகளில் அரசு தான் தண்ணீர் கொடுக்கிறது. அதிலும் மாசு உள்ள தென்று மக்கள் போராடுகிறார்கள்'' என்றார்.


அ.தி.மு.க.வைச் சேர்ந்த எம்.எல்.ஏ.வான அன்பழகன், "இந்த கிரண்பேடி ஒரு விளம்பரப் பிரியர். தமிழக மக்கள் ஒன்றுதிரண்டு ஜல்லிக்கட்டுக்காகப் போராடும்போது அதற்கு எதிராக கருத்து தெரிவித்து விமர்சனத்துக்குள்ளானார். ஏழைப் பெண்களுக்கு பெரும் பயனளிக்கும் இலவச திருமணஉதவித் திட்டத்தையும், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தைப் பற்றியும் தவறாகப் பேசி வாங்கி கட்டிக் கொண்டார். புதுவை முதல்வர் நாராயணசாமி, கவர்னருக்கு எதிராக உண்ணா விரதம் இருந்தபோது அவரது நிறத்தை வைத்து "காக்கை' என வர்ணித்து மாட்டிக்கொண்டார். புதுவையில் சிறையில் உள்ளவர்களை குற்றப் பரம்பரையினர் எனக் கூறி கண்டனத்துக்குள் ளானார்'' என்கிறார் வரிசையாக.


கிரண்பேடிக்கு எதிராகப் போராட்டம் என தி.மு.க. அறிவிக்க, அ.தி.மு.க. தரப்பிலும் கண்டனங்கள் வெளிப்பட... "தமிழகத்தில் எழுந்த எதிர்ப்புகளைப் பார்த்து, "நான் மக்களின் கருத்தை எதிரொலித்தேன்' என்கிறார் கிரண்பேடி. தமிழக மக்களை சுயநலவாதிகள், கோழைத்தனமானவர்கள் என எந்த மக்கள் சொன்னார்கள். கிரண்பேடி பதில் சொல்வாரா?'' என கொந்தளிக்கிறார்கள் தமிழகத்திலும் புதுவையிலும் பா.ஜ.க. கூட்டணியை வீழ்த்திய பொது மக்கள். கிரண்பேடியை பா.ஜ.க. தூண்டிவிடுவதாக காங்கிரஸ் அரசு சந்தேகப்படுகிறது.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். 

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.