Skip to main content

பாஜகவின் அதிர வைத்த திட்டத்தால் திமுக, காங்கிரஸ் இடையே நடந்த குழப்பம்... வெளிவராத அதிர்ச்சி தகவல்!

Published on 20/01/2020 | Edited on 20/01/2020

நீறுபூத்த நெருப்பாக இருந்த தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி உறவு வெளிப்படையாக வெடிக்கத் துவங்கியிருக்கிறது. நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கான தேர்தல் விரைவில் நடக்கவிருக்கும் சூழலில், கூட்டணி நீடிக்குமா? என்பதே அரசியல் ஹாட் டாபிக்.

 

dmk



நடந்து முடிந்துள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் இட ஒதுக்கீடு தொடர்பாக தி.மு.க.வுக்கும் காங்கிரசுக்கும் முட்டல் மோதல் வெடித்தன. தி.மு.க. மீதுள்ள அதிருப்தியை காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமியும் கூட்டறிக்கை மூலம் பகிரங்கமாக வெளிப்படுத்தினர். இது, தி.மு.க.வில் கொந்தளிப்பை ஏற்படுத்த, "காங்கிரஸ் தலைமையின் அனுமதியில்லாமல் இப்படி பேச முடியாது' என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கட்சியின் சீனியர்கள் வலியுறுத்தியதையடுத்து, காங்கிரஸ் மீதுள்ள கோபத்தை வெளிப்படுத்த சோனியா தலைமையில் ஒருங்கிணைக்கப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்தார் மு.க.ஸ்டாலின்.

 

dmk



இந்த நிலையில் டெல்லிக்கு வரவழைக்கப்பட்ட கே.எஸ்.அழகிரியிடம் தேர்தலில் நடந்தது குறித்து விவாதித்தார் சோனியாகாந்தி. இதனைத் தொடர்ந்து பேசிய அழகிரி, "தி.மு.க.வும் காங்கிரசும் எப்போதும் இணைந்த கரங்களாக இருக்கும். நாங்கள் கொடுத்தது அறிக்கையே அல்ல. கூட்டணியில் எந்த பிரிவும் கிடையாது' என்றார். ஆனாலும் இதை தி.மு.க. தலைமை ஏற்கவில்லை. கூட்டணியிலிருந்து காங்கிரசை வெளியேற்ற துடிக்கிறது. அதனை நிரூபிப்பதுபோல, "தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி உறவு பழைய நிலைக்குத் திரும்புமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்'' என தெரிவித்திருக்கிறார் கட்சியின் முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு.

 

dmk



கட்சியின் பொருளாளரான துரைமுருகன், "காங்கிரஸ் விலகிச்சென்றால் செல்லட்டும். அதனால் எங்களுக்கு எந்த நட்டமும் இல்லை. ஓட்டுகள் பாதிக்காது. இருந்தால் தானே பாதிக்கிறதுக்கு'' என கடுமையாகத் தாக்கினார். தி.மு.க. சீனியர்களின் இப்படிப் பட்ட கருத்துக்களால் அதிர்ச்சியடைந்துள்ளது காங்கிரஸ் மேலிடம். ஸ்டாலினின் அனுமதியுடன்தான் தி.மு.க. தலைவர்கள் அப்படிப் பேசுவதாக சோனியாவிடம் சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கிடையே ஸ்டாலினிடம் பேசும் தி.மு.க. மா.செ.க்கள், "காங்கிரசை கழட்டி விடுங்கள்' என அழுத்தமாக வலியுறுத்தி வருகின்றனர். இதனால், 21-ந்தேதி நடக்கும் தி.மு.க.வின் செயற்குழுக் கூட்டத்தில் காங்கிரசுடனான கூட்டணி பற்றி விரிவாக விவாதிக்கப்படும் என அறிவாலயத் தரப்பிலிருந்து தகவல்கள் கசிகின்றன.

 

dmk



இந்த நிலையில், கே.எஸ்.அழகிரியின் கருத்தறிய அவரை தொடர்புகொண்டபோது நமது அழைப்பை எடுக்கவில்லை. சிவகங்கை எம்.பி.யும் ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரத்திடம் நாம் பேசியபோது, "இந்த ஞானம் வேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கு முன் துரைமுருகனுக்கு ஏன் தோன்றவில்லை? தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கவே நாங்கள் விரும்புகிறோம்''’ என்பதோடு முடித்துக் கொண்டார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் என பலரும், "தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேறலாம். தி.மு.க.வுக்கு அடிமையாக நாம் இருக்க வேண்டியதில்லை' என மிக காட்டமாக சோனியாவுக்கும் ராகுலுக்கும் தகவல்களை அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.


இதுகுறித்து காங்கிரசின் முன்னாள் தலைவர் ஒருவரிடம் நாம் விவாதித்தபோது, "கூட்டணியிலிருந்து காங்கிரசை வெளியேற்ற நினைப்பது தி.மு.க.வின் அஜெண்டா இல்லை; அது, பா.ஜ.க.வின் அஜெண்டா. ஓரிரு மாதத்திற்கு முன்பு பா.ஜ.க. தலைமையிலிருந்து தி.மு.க. சீனியர் எம்.பி.க்கள் மூன்று பேருக்கு, "காங்கிரசை எதற்காக தூக்கிச் சுமக்கிறீர்கள்? காங்கிரசை கழட்டி விடுங்கள். பா.ஜ.க.வை கடுமையாக விமர்சிப்பதையும் குறைத்துக்கொள்ள வேண்டாம்' என்கிற தகவல்களை பாஸ் செய்தது.

பிரதமர் மோடியை சில மாதங்களுக்கு முன்பு டி.ஆர்.பாலு சந்தித்தபோதும் காங்கிரசுக்கு எதிரானவைகள் பேசப்பட்டிருக்கின்றன. அதன் எதிரொலிதான் இப்போது காங்கிரசுக்கு எதிராக மெல்ல மெல்ல வெடிக்கத் துவங்கியிருக்கிறது. தி.மு.க.வை விட்டால் எங்களுக்கு அ.தி.மு.க., தினகரனின் அ.ம.மு.க., ரஜினி, கமல் என கூட்டணி வைக்க வாய்ப்புகள் அதிகமுள்ளன. ஆனா, தி.மு.க.வுக்கு? லோக்சபாவில் 38 இடங்களில் தி.மு.க. கூட்டணி ஜெயிக்க காங்கிரஸ்தான் முக்கிய காரணம். காங்கிரசை கழட்டிவிடுவதன் பலனை இனிவரும் தேர்தலில் தி.மு.க. உணரும்' என்கிறார் மிக காட்டமாக.


காங்கிரஸ் தலைவரின் இத்தகைய கருத்துக்கள் குறித்து தி.மு.க. எம்.பி.க்கள் சிலரிடம் பேசியபோது, "காங்கிரசுக்கு எதிரான தி.மு.க.வின் அதிருப்திக்கு பா.ஜ.க.தான் காரணம் என சொல்வது அபத்தம். கூட்டணி தர்மத்தை பாதுகாப்பதில் தி.மு.க.வுக்கு நிகர் வேறு எந்த கட்சியும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி தர்மத்தை மீறி துரோகமிழைத்தது காங்கிரஸ்தான். இதற்கு பல ஆதாரங்களை சுட்டிக்காட்ட முடியும். மாநகராட்சி, நகராட்சி தேர்தல்களில் அதிக சீட் வாங்க இப்படிப்பட்ட நாடகத்தை காங்கிரஸார் நடத்துகின்றனர். இதற்கு தி.மு.க. இடம் கொடுக்காது. தேவைப்பட்டால் காங்கிரசுடனான கூட்டணியை முறித்துக்கொள்ள ஸ்டாலின் தயங்கமாட்டார்'' என விவரிக்கிறார்கள்.


 

 

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

“தேர்தல் அறிக்கையை விளக்க வேண்டும்” - பிரதமரை சந்திக்க நேரம் கேட்ட கார்கே

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Kharge asked for time to meet PM for Election report should be explained

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளில் நாளை (26-04-24) நடைபெறவிருக்கிறது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இதற்கிடையே, இந்தத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அந்தத் தேர்தல் அறிக்கை மூலம் காங்கிரஸ் பலரின் கவனத்தையும் தங்கள் பக்கம் ஈர்த்துள்ளது.

அதே வேளையில், இந்தத் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்து சர்ச்சையாக பேசியிருந்தார். இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்கு கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. இதற்கு, காங்கிரஸ் உள்பட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், பிரதமர் மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

Kharge asked for time to meet PM for Election report should be explained

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர், “பிரதமர் பயன்படுத்திய மொழியால் அதிர்ச்சியோ ஆச்சரியமோ இல்லை. முதல் கட்டத் தேர்தலில் பா.ஜ.க.வின் மோசமான செயல்பாட்டைப் பார்த்து நீங்களும், உங்கள் கட்சியைச் சேர்ந்த மற்ற தலைவர்களும் இப்படிப் பேசத் தொடங்குவீர்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. சூழலில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு சில வார்த்தைகளைப் பற்றிக் கொள்வதும், வகுப்புவாத பிளவை உருவாக்குவதும் உங்கள் வழக்கமாகிவிட்டது. . தாழ்த்தப்பட்ட ஏழைகள் மற்றும் அவர்களின் உரிமைகள் பற்றி காங்கிரஸ் பேசி வருகிறது. ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் மீது உங்களுக்கும் உங்கள் அரசாங்கத்திற்கும், எந்த அக்கறையும் இல்லை என்பதை நாங்கள் அறிவோம்.

உங்கள் அரசாங்கம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக வேலை செய்கிறது. நீங்கள் வரிகளைக் குறைத்தீர்கள், அதே நேரத்தில் சம்பளம் பெறும் வர்க்கம் அதிக வரிகளை செலுத்துகிறது. உணவு மற்றும் உப்புக்கு கூட ஏழைகள் ஜி.எஸ்.டி செலுத்துகிறார்கள். மேலும், பணக்கார கார்ப்பரேட், ஜி.எஸ்.டி பணத்தைத் திரும்பக் கோருகின்றனர். அதனால்தான், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான சமத்துவமின்மையைப் பற்றி நாங்கள் பேசும்போது, நீங்கள் அதை இந்து மற்றும் இஸ்லாமியர்களுடன் வேண்டுமென்றே சமன் செய்கிறீர்கள். 

எங்களின் தேர்தல் அறிக்கை இந்திய மக்களுக்கானது. அவர்கள் இந்துவாக இருந்தாலும், இஸ்லாமியராகவும் இருந்தாலும், கிறிஸ்தவராக இருந்தாலும், சீக்கியராக இருந்தாலும், ஜெயின் அல்லது பௌத்தராக இருந்தாலும் சரி. சுதந்திரத்திற்கு முந்தைய உங்களின் கூட்டாளிகளான முஸ்லிம் லீக் மற்றும் காலனி ஆதிக்கவாதிகளை நீங்கள் இன்னும் மறக்கவில்லை என்று நினைக்கிறேன்.

எங்களின் தேர்தல் அறிக்கையில் கூட எழுதப்படாத விஷயங்கள் குறித்து உங்கள் ஆலோசகர்களால் உங்களுக்கு தவறான தகவல் கொடுக்கப்படுகிறது. பிரதமராக நீங்கள் பொய்யான அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்பதற்காக எங்கள் தேர்தல் அறிக்கையை விளக்குவதற்காக உங்களை நேரில் சந்திக்க இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.