Skip to main content

“தமிழிசை திமுகவில் இணைந்துவிடுவாரா...?” - சிவ ஜெயராஜ் சவால்

Published on 16/12/2022 | Edited on 16/12/2022

 

dmk advocate siva jeyaraj talks about tamilisai and narendra modi 
 சிவ ஜெயராஜ் 

 

திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி கடந்த 14ம் தேதி இளைஞர் நலன்  மற்றும்  விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக்கொண்டார். அமைச்சர் உதயநிதி பதவியேற்புக்கு வாரிசு அரசியல் என எதிர்க் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், வழக்கறிஞரும் திமுக செய்தித் தொடர்பு இணைச் செயலாளருமான சிவ ஜெயராஜ் நக்கீரன் யூடியூப் சேனலுக்கு நேர்காணல் அளித்தார். அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்வி பதில்கள் கீழே.

 

சில அரசியல் கட்சிகள் குறுக்கு வழியில் அரசியல் செய்து ஆட்சிக்கு வர நினைக்கிறது என்று பிரதமர் மோடி பேசியிருக்கிறாரே?

 

dmk advocate siva jeyaraj talks about tamilisai and narendra modi 

இந்த நாட்டோட அதிகப்படியான அடுத்த கட்சி  எம்எல்ஏக்களை வாங்கி ஆட்சி அமைத்த கட்சி பாஜகதான். அதிகப்படியான வாக்குறுதிகள் தேர்தலில் கொடுத்துவிட்டு மக்களை நடுத்தெருவில் நிறுத்தியது பாஜகதான். அமெரிக்க டாலருக்கு இணையாக இந்திய மதிப்பு எவ்வளவு உள்ளது. பொருளாதாரத்தில் இந்தியா எத்தனையாவது  இடத்தில் உள்ளது என்பதைப் பார்க்க வேண்டும். நீங்கள் ஏழு  முறை குஜராத்தில் ஆட்சியில் இருக்கலாம். குஜராத்தை விட மருத்துவ வசதியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. இந்தியாவில் குஜராத்தில் மின்சார வசதி கொடுக்க முடியாத கிராமங்கள் இருக்கின்றன. தமிழகம்  தன்னிறைவு அடைந்த மாநிலம்.  தமிழகம் மருத்துவத்தில், சுகாதாரத்தில், கல்வியில்  தன்னிறைவு அடைந்ததற்குக் காரணம் கலைஞரும், ஸ்டாலினும், திராவிட மடல் ஆட்சியும்தான்.

 

அரசியலில் தலையிடவில்லை., ஆளுநர் வேலையை மட்டுமே பார்ப்பதாக ஆளுநர் தமிழிசை சொல்கிறாரே?

 

இந்திய அரசியலமைப்பு சட்டம்  201வது  பிரிவு தெளிவாகச்  சொல்கிறது. ஆளுநர்களின் அதிகாரம் பற்றி உச்சநீதிமன்றம் பேரறிவாளன் வழக்கில்,  "மாநில அமைச்சரவையின் சுருக்கெழுத்தார்தான் ஆளுநர்" என்று சொல்லுகிறது.  இவர்களுக்கு அரசியலும், அரசியலமைப்பு சட்டமும் தெரியவில்லை. தமிழிசை ரெண்டு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால்   கவர்னர் பதவி கிடைத்தது. அதேபோன்று எல். முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவி. ஆளுநர்களை வைத்து இரட்டை அரசாங்கம் நடத்த நினைக்கிறார்கள். எழுத்துரிமை இல்லை, பேச்சுரிமை இல்லை என்று நினைத்தால் அரசியலுக்கு வந்து பேசுங்க. ஆளுநராக இருக்கும்போது ஆட்சியில் தலையிடக் கூடாது. தமிழிசையால் தெலுங்கானாவில் எதையும் செய்ய முடியவில்லை. தெலுங்கானாவில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். அந்த நிலைமை ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் ஏற்படும்.

 

திராவிட மாடல்; கலைஞரின் மகன் ‘மாடல்’ எனும் சொல்லுக்கு மாற்றாக உரிய தமிழ்ச் சொல்லை வைக்க வேண்டும் என தமிழிசை கூறுகிறார்.

 

மாடல் எனும் சொல்லுக்கு உரிய தமிழாக்கம் செய்துவிட்டால் தமிழிசை திமுகவில் இணைந்து விடவா போகிறார். பாமர மக்களுக்கும் எங்கள் அரசினுடைய சாதனையை வெளிப்படுத்த, எங்க அரசின் மாடல் என்ன என்று புரிய வைக்கத்தான் திராவிட மாடல் என்று சொல்லுகிறோம். அவங்க அப்பா குமரி அனந்தன், சித்தப்பா வசந்தகுமார் என ஒரே  குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் அரசியலில் இருக்கிறார்கள். அவர் வாரிசு அரசியல் பற்றி பேசலாமா. ஓபிஎஸ் அவர் மகன்களான ரவீந்திர குமார், ஜெயபிரதீப் ஆகியோரை பக்கத்துல வச்சுக்கிட்டு திமுகவின் வாரிசு அரசியல் பற்றி பேசுகிறார். இந்தியாவில் எந்தக் கட்சி வாரிசு அரசியல் பண்ணல ஒரு கட்சியைக் காட்டுங்கள். வாரிசு அரசியலால் தமிழ்நாட்டுக்கும், மக்களுக்கும் என்ன பாதிப்பு இருக்கிறது; ஏதும் இல்லையே.

 

 

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.