Skip to main content

இந்தியாவில் பட்டாசின் வரலாறு... 

Published on 06/11/2018 | Edited on 04/02/2020
diwali history

 

இந்தியா முழுவதும் பரவலாக பெரும்பாலான மக்களால் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகை, தீபாவளி. தீபாவளி என்றாலே புத்தாடை, இனிப்பு, பட்டாசு தான் பிரதானம். இதில் இன்று பெரும் பேசுபொருளாக உள்ளது பட்டாசு. சுற்றுசூழல் பாதிப்பு, சீன இறக்குமதி, உள்ளூர் உற்பத்தியாளர்கள் பாதிப்பு என பல்வேறு அரசியலை கொண்டுள்ள பட்டாசின் வரலாறு சுவாரசியம் நிறைந்தது.

சீனாவில் ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் போரில் பயன்படுத்திக் கொண்டிருந்த ஒரு வித வெடிமருந்தில் இருந்து பரினமித்ததே இந்த பட்டாசு. இது சீனாவில் புத்தாண்டு மற்றும் நிலவு திருவிழாவின் பொழுது பெருமளவு பயன்படுத்தபட்டது. சீன நம்பிக்கையின்படி பட்டாசுகள் தீய சக்தியை விரட்டுவதாக நம்பப்படுகிறது.வரலாற்று ஆய்வாளர் பரசுராம் கோடேவின் ஆய்வுப்படி, 13 ஆம் நூற்றாண்டில் சீனாவிலிருந்து அரேபியர்களின் மூலம் பட்டாசு இந்தியாவிற்கு வந்ததாக கூறப்படுகிறது. 13  ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் விஜயநகர அரசன் இரண்டாம் தேவரையாவின் அரண்மனையில் பெர்சிய நாட்டு தூதரால்  முதன்முதலில் பட்டாசுகள் கொண்டு விழா நடத்தப்பட்டது.

பின்னர் முகலாய மன்னர்கள் பட்டாசு தயாரிக்கும் கலையை சீனாவிடம் தெரிந்துகொண்டு இந்தியாவில் பட்டாசு செய்ய ஆரம்பித்தனர். ஆரம்ப காலத்தில் போர்க்களத்தில் ஆயுதமாக பயன்படுத்தபட்ட வெடிமருந்து பின் அவர்கள் அரன்மனை விழாக்களில் பெருமளவு வெடிக்கப்பட்டது. பட்டாசு வெடிப்பது பெருமையாக கருதப்பட்டது, இதற்காக பெரும் தொகை செலவிடப்பட்டது. தரையில் மட்டும் வெடிக்கும் பட்டாசுகள் இருந்த காலத்தில்,அவர்கள் ஐரோப்பாவிலிருந்து வானில் சென்று வெடிக்கும் ராக்கெட்களை வாங்கி உபயோகபடுத்தினர்.

இப்படி இருந்த நிலையில் 18 ஆம் நூற்றாண்டு முதல் தான் தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் வழக்கம் ஆரம்பித்ததாக வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. விளக்கு கொண்டு வீடுகள் ஒளியேற்றப்பட்டது போல் ராக்கெட் கொண்டு வானும் ஒளியூட்டப்பட்டது. அந்த காலகட்டத்தில் பெரும்பாலும் சீனா மற்றும் ஐரோப்பாவிலிருந்து பட்டாசு இறக்குமதி செய்யப்பட்டது. பின்னர் இந்தியாவில் கல்கத்தா மற்றும் சிவகாசியில் பட்டாசு ஆலைகள் தொடங்கப்பட்டன. இதில் சிவகாசி இன்றுவரை இந்தியாவின் முக்கிய பட்டாசு உற்பத்தியாளராக திகழ்கிறது.

என்னதான் பட்டாசு சீனாவில் தோன்றியிருந்தாலும், அது பல நூற்றாண்டுகளாக இந்திய தேசம் மற்றும் பன்பாட்டுடன் ஒன்றிவிட்டது. இந்நிலையில், வருடம் முழுவதும் இயங்கும் தொழிற்சாலைகள் ஏற்படுத்தாத மாசினையா இந்த ஒரு நாளில் பட்டாசுகள் ஏற்படுத்திவிடபோகின்றன என்பதை இதற்கு கட்டுப்பாடு விதித்தவர்கள் சற்று யோசித்து பார்க்க வேண்டும்.

 

 

 

Next Story

பாஜக வெடித்த பட்டாசு; இரண்டு குடிசைகள் எரிந்து நாசம்; மக்கள் போராட்டம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
BJP burst firecrackers; Two huts were destroyed by fire; People's struggle

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் நாகையில் பாஜக வேட்பாளர் பிரச்சாரத்தின்போது வெடிக்கப்பட்ட பட்டாசு இரண்டு குடிசைகள் மீது பட்டு, பற்றி எரிந்துள்ளது. இதனால் குடிசை வீடுகள் இரண்டு முற்றிலும் சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்தப் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இந்நிலையில் அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துபூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Next Story

பட்டாசு ஆலையில் வெடி விபத்து; பலி எண்ணிக்கை அதிகரிப்பு

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
passed away toll rises to 10 in firecracker factory incident

விருதுநகர் அருகே உள்ள முத்துசாமி புரத்தில் விஜய் என்பவருக்கு சொந்தான பட்டாசு ஆலை இயங்கி வந்துள்ளது. இந்த நிலையில் இன்று வழக்கம் போல பட்டாசு ஆலையில் வேலைகள் நடந்துவந்த நிலையில் மதியம் 12 மணியளவில் திடீரென பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த நேரத்தில் கிட்டத்தட்ட 30 பேர் அங்கு பணியாற்றியதாக கூறப்படுகிறது. 

இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதில் 7 பேரில் உடல் அடையாளம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் தீயை அணைத்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பட்டாசுக்கு மருந்து கலக்கும் போது ஏற்பட்ட உராய்வின் மூலம் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் போலீசார் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.