Skip to main content

குற்றாலநாத சுவாமிக்கு இஸ்லாமியர் வழங்கிய பழமையான செப்புப்பட்டயங்கள் கண்டுபிடிப்பு

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

Discovery copper plates for eternal ceremonial worship given Muslims Ranganatha Swami

 

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் குற்றாலநாதர் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் இருந்த 5 - பழமையானச் செப்புப்பட்டயங்கள் கண்டறியப்பட்டுள்ளன என்று இந்து சமய அறநிலையத் துறையின் சுவடித் திட்டப் பணியின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் சு.தாமரைப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.                

 

கண்டறியப்பட்ட செப்புப்பட்டயங்கள் குறித்து அவர் கூறியதாவது:  இந்து சமய அறநிலையத் துறையின் அமைச்சர் பி.கே.சேகர்பாபு இந்துசமய அறநிலையத்துறையின் கீழுள்ள 46,090 கோயில்களில் உள்ள அரிய பழஞ்சுவடிகளையும் செப்புப்பட்டயங்களையும், செப்பேடுகளையும் திரட்டிப் பராமரித்து, பாதுகாத்து நூலாக்கம் செய்ய சுவடித் திட்டப் பணிக்குழு ஒன்றை அமைத்துள்ளார். இத்திட்டப்பணியின் பொறுப்பாளராக இந்துசமய அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையர் சி. ஹரிப்ரியாவின் வழிகாட்டுதலின் படி, இச்சுவடித்திட்டப் பணிக்குழுவினர் இதுவரை தமிழ்நாட்டிலுள்ள 676 திருக்கோயில்களில் கள ஆய்வு செய்து செப்பேடுகள் 9ம், செப்புப்பட்டயங்கள் 29 - ம், வெள்ளி ஏடுகள் 2 - ம், தங்க ஏடு 1- ம் கண்டுபிடித்துள்ளனர்.

 

இந்நிலையில், இச்சுவடிக் குழுவினர் குற்றாலநாதர் சுவாமி கோயிலில் இருந்த 5 - புதிய செப்புப்பட்டயங்களைக் கண்டறிந்துள்ளனர். அச்செப்பு பட்டயங்களைப் படி எடுத்து ஆய்வு செய்த போது, செப்புப்பட்டயங்களில் 2 செப்புப்பட்டயங்கள் அழகன் பெருமாள் பாண்டியன் மற்றும் சீவலவரகுணராம பாண்டியன் ஆகியோர் பேரில் குற்றாலநாதர் சுவாமிக்கு சாயரட்சை கட்டளை வழங்கியது குறித்தும் 1 செப்புப்பட்டயம் அசாதுவாலாசாய்பு, இசுமாலி ராவுத்தர் முதலான பலர் குற்றாலநாதர் சுவாமிக்கு நித்திய விழா பூசை கட்டளைக்கு தானம் வழங்கியது குறித்தும் கூறுகின்றன. மீதமுள்ள மூன்று செப்பேடுகளில் ஒரு செப்பேட்டில் திருஞானசம்பந்தர் திருக்குற்றாலம் குறித்துப் பாடிய திருப்பதிகப் பாடல்கள் 11 அமைந்து காணப்படுகின்றன. மற்றொரு, செப்பேட்டில் திருநாவுக்கரசர் பாடிய திருஅங்கமாலை பதிகம் எழுதப்பட்டுள்ளது. இதில் 12 பாடல்கள் அமைந்து காணப்படுகின்றன. இறுதியில் குமரகுருபர சுவாமிகள் எழுதிய ஒரு பாடல் காணப்படுகிறது. இப்பட்டயம் கி.பி.1959 ஆம் ஆண்டு எழுதப்பட்டுள்ளது.

 

Discovery copper plates for eternal ceremonial worship given Muslims Ranganatha Swami

 

இறுதியில் ஸ்ரீ காசிமடம் திருப்பனந்தாள் என்ற குறிப்பு காணப்படுகிறது. பிறிதோர் செப்புப்பட்டயத்தில் மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையின் 20 பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. இறுதியில் குமரகுருபர சுவாமிகள் எழுதிய பாடல் ஒன்றும் காணப்படுகிறது. செப்பேடு கி.பி.1958ல் எழுதப்பட்டுள்ளது. இறுதியில் காசிமடம் திருப்பனந்தாள் என்ற குறிப்பும் காணப்படுகிறது. அழகன் பெருமாள் பராக்கிரமப்பாண்டியன், பாண்டியர்கள் மதுரையில் வீழ்தப்பட்ட பின்பு தென்பாண்டி நாட்டுப் பகுதிகளில் சிற்றரசர்களாகப் பாண்டியர் குலத்தவர் ஆட்சி செய்து வந்துள்ளனர். அவ்வாறு ஆட்சி செய்து வந்த பாண்டியர்களில் தென்காசி பாண்டியர்கள், வள்ளியூர் பாண்டியர்கள், செங்கோட்டை பாண்டியர்கள், கயத்தாறு பாண்டியர்கள், நடுவக்குறிச்சி பாண்டியர்கள், கரிவலம்வந்த நல்லூர் பாண்டியர்கள், புலியூர் பாண்டியர்கள் என பலர் ஆட்சி செய்துள்ளனர். இவர்கள் வரலாறு குறித்து ஓலைச்சுவடிகளும் கல்வெட்டுகளும் பட்டயங்களும் கூறுகின்றன. இவர்கள்  ஆட்சி செய்த காலம் கி.பி. 14 - 18 ஆம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலம் என்று அறிஞர் பெருமக்கள் தெரிவிக்கின்றனர்.

 

குற்றாலநாதர் கோயிலில் உள்ள 2 செப்பேடுகள் அழகன்பெருமாள் பாண்டியன், சீவல வரகுணராம பாண்டியன் ஆகியோர் பெயரில் குற்றாலநாதர் சுவாமி கோயிலுக்கு வழங்கப்பட்ட சாயரட்சை கட்டளை குறித்து பேசுகின்றன. முதல் செப்பேட்டில் சாயரட்சை கட்டளையை நிறுவியவர்கள் பிள்ளைமார் சமூகத்தவர் என்று கூறப்பட்டுள்ளது. அதில் சாயரட்சை கட்டைளைக்கு வருடம் 1 க்கு பல்லக்குகாரர் பொன் 1ம், குதிரைச்சுருட்டிக்காரர் பணம் 5ம், தொழில்செய்து வருவோர் பணம் 2ம், கொத்துக்கார் பணம் 1ம் வழங்கியதாகக் கூறப்பட்டுள்ளது. பிறிதோர் செப்புப்பட்டயத்தில் சாயரட்சை கட்டளையை உபய ராணுவத்தாரும் குடிமை செய்தொழிலாளிகளும் இணைந்து ஏற்படுத்தியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டளைக்கு வருடம் 1க்கு பல்லக்குகாரர் பணம் 10, குதிரை சுருட்டிக்காரர் பணம் 3, ராணுவம் பணம் 1, குடிபடை பணம் 1 என்ற விகிதத்தில் பணம் வழங்கப்பட்டுள்ளது.  பிள்ளைமார் சமூகத்தவர் ஏற்படுத்திய சாயரட்சை கட்டளை விவரம் அடங்கிய செப்பேடு கி.பி.1753 ஆம் ஆண்டு எழுதப்பட்டுள்ளது. உபய ராணுவத்தார் படை எழுதிக் கொடுத்த சாயரட்சை கட்டளை விவரம் அடங்கிய செப்பேடும் கி.பி. 1753 ஆம் ஆண்டு எழுதப்பட்டுள்ளது. மேலும், இவ்விருக்கட்டளைகளையும் காசி மடத்தவர் பரிபாலனம் செய்துவரவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

அழகன்பெருமாள் பராக்கிரமப்பாண்டியனின் காலம் கி.பி. 1473 – 1506 வரை என்று அறிஞர்கள் கூறுகின்றனர். இந்த அழகன்பெருமாள், பராக்கிரமப்பாண்டியனின் வரலாற்றை ‘அழகன்பெருமாள் கதை’ என்னும் ஓலைச்சுவடி தெளிவாக எடுத்துரைக்கிறது. அதாவது, தென்காசியிலிருந்து ஆட்சி செய்த குலசேகரப்பெருமாள் பாண்டியனுக்கு பொன்னின் பெருமாள், தன்மப்பெருமாள் என்ற இரண்டு ஆண்மக்கள் இருந்தனர். மூத்தவன் பொன்னின்பெருமாள் தென்காசி ஆட்சிபீடத்தில் அமர்கிறான். இளையவன் தன்மப்பெருமாள் புலியூரிலிருந்து ஆட்சி செய்கிறான். பொன்னின்பெருமாளுக்கு குலசேகரப்பெருமாள், வீரபாண்டியன் என்ற இரண்டு புதல்வர்கள் பிறந்தனர். தன்மப்பெருமாளுக்கு அழகன்பெருமாள், சீவலமாறன், சின்னத்தம்பி ஆகிய மூன்று புதல்வர்கள் பிறந்தனர். அழகன்பெருமாளும் அவன் தம்பியரும் பல்வேறு போர்கலைகளைக் கற்று மிகப்பெரிய வீரர்களாகத் திகழ்ந்தனர். இந்நிலையில், அழகன்பெருமாளும் அவன் தம்பியரும் வளர்ந்து ஆளான போது அரியணை ஏறிய குலசேகரப்பாண்டியனிடம் இளமுறைக்கூறு (இளைய வாரிசுமுறை பங்கு) கேட்டனர்.  இதனால் கோபம் கொண்ட குலசேகரப் பாண்டியனின் தம்பி வீரபாண்டியனும் அமைச்சர் இராசகுலத்தேவனும் அழகன்பெருமாளையும் அவன் தம்பியரையும் அழித்தொழிக்க முடிவு செய்தனர்.  பல்வேறு சதித்திட்டங்களைத் தீட்டி அவர்களைக் கொலைசெய்ய முயன்றனர் ஆனால் இயலவில்லை.

 

இறுதியில் இராசகுலத்தேவன், “உங்கள் அண்ணன் குலசேகரப்பாண்டியன் சீமையிலும் படைப்பரிவாரத்திலும் கருவூலத்திலும் பாதியைத் தர ஒத்துக்கொண்டான். நீங்கள் உங்கள் அண்ணனைக் காணவாருங்கள்” என்று நயவஞ்சகமாக அழைத்தான்.  அதனை உண்மை என நம்பிய அழகன்பெருமாளும் அவன் தம்பி சீவலமாற பாண்டியனும் குலசேகரப் பாண்டியனைக் காணப் புறப்பட்டு வந்தனர். வரும் வழியில் அமைச்சர் இராசகுலத்தேவன் அவர்களிடம் இருந்த ஆயுதத்தை முதலில் வஞ்சமாகப் பறித்தான். பின்பு அவர்கள் இருவரையும் கொலைசெய்வதற்காக ஏற்படுத்தப்பட்டிருந்த இலங்கம் போன்ற ஒரு இருட்டு அறைக்குள் பிடித்து தள்ளி அறையை சங்கிலியால் பூட்டினான். அறைக்குள்ளே மறைந்திருந்த அறுபது மல்லர்கள் அழகன்பெருமாள் மீதும் அவன் தம்பி சீவலமாற பாண்டியன் மீதும் பாய்ந்தனர். அழகன்பெருமாளும் சீவலமாற பாண்டியனும் வீரயுத்தம் செய்து இறுதியில் இருவரும் மடிந்தனர்.  அண்ணன்மார் இறந்ததை அறிந்த சின்னதம்பியும் தன் உயிரை வாளூன்றிப் பாய்ந்து மாய்த்துக்கொள்ளுகிறான்.  தம்பியர் சூழ்ச்சியால் கொல்லப்பட்டதை ஒற்றன் மூலம் அறிந்து குலசேகரப் பாண்டியன் இராசகுலத்தேவனை வெட்டிக்கொன்று விட்டு தன் உயிரைக் மாய்த்துக்கொள்ளுகிறான். அழகன் பெருமாளும் அவன் தம்பியரும் சூழ்ச்சியால் கொல்லப்பட்டை அறிந்து கயத்தாறு வெட்டும்பெருமாள் பாண்டியன் தென்காசி மீது படையெடுத்து வெற்றி பெற்றான்.

 

மாபலி என்பவனைத் தென்காசியில் அரியணையில் அமரச்செய்தான் என்று ஓலைச்சுவடி குறிப்பிடுகிறது.  மேற்சுட்டிய அழகன்பெருமாள் பாண்டியனையே செப்புப்பட்டயங்கள் குறிப்பிடுகின்றன. மேலும், அழகன்பெருமாள் பாண்டியனை செப்புப்பட்டயங்கள் கோசடிலவன், மாறன், திரிபுவனசக்கரவர்த்தி, கோனேரிமைகொண்டான், ஸ்ரீபெருமாள் என்றெல்லாம் விதந்து பேசுகிறது. மேற்சுட்டிய, இரண்டு செப்புப்பட்டயங்களும் சீவல வரகுணராம பாண்டியன் பற்றியும் குறிப்பிடுகின்றன. சீவல என்பது ‘ஸ்ரீ வல்லவன்‘ என்ற சொல்லின் மருவு ஆகும். வரகுணராம பாண்டியன் தன் பெயருக்கு முன் சீவல எனும் அடைமொழியையும் பெயருக்குப் பின்னால் குலசேகரன் என்ற மூதாதையர் மரபுவழிப் பெயரையும் இணைத்து பயன்படுத்தியதாகவும் பட்டயத்தின் வழி அறிய முடிகிறது. வரகுணராம பாண்டியன் கி.பி. 1613 – 1618 காலகட்டத்தில் ஆட்சி செய்ததாக கல்வெட்டுகள் வழி அறிய முடிகிறது. குற்றாலநாத சுவாமிக்கு இஸ்லாமியர் வழங்கிய நித்திய விழாப் பூசை கட்டளை பற்றி, நெல்லையப்பர் கோயிலில் உள்ள கி.பி. 1751 ஆம் ஆண்டு எழுதப்பட்ட செப்புப்பட்டயம் ஒன்று உள்ளது.                

 

இச்செப்புப்பட்டயத்தில் லாலுகான்சவான்சாயுபு என்பவன் திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் நித்திய பூசைக்கு தானம் வழங்கிய செய்தி கூறப்பட்டுள்ளது. அதுபோல, குற்றாதநாதர் சுவாமி கோயிலுக்கு கி.பி. 1848 ஆம் ஆண்டு நித்திய விழா பூசை மற்றும் திருநெல்வேலி காந்தியம்மன் சிறுகாலப் பூசைக்கான கட்டளைக்கு அசாதுவாலசாயுபும் இசுமாலிராவுத்தரும் வேறு சிலரும் சேர்ந்து தானப்பட்டயம் எழுதிக் கொடுத்துள்ளனர். அதில், புடவைசாற்று மற்றும் இறங்குசாற்று கச்சை ஒன்றுக்கு கால்மாகாணியும் (1/64) நடைக்கான திரையாடை ஒன்றுக்கு மாகாணிப் பணமும் (1/16) சின் ஒன்றுக்கு அரை மாகாணி (1/32) வீதமும் வழங்கப்பட்டுள்ளது.  இது ஆண்டுதோறும் 10 மாதங்களுக்குத் தொடார்ச்சியாக வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.  இந்தக் கட்டளைப் பூசை தொடர்ந்து நடத்துவதற்கு தென்காசி, ஆயம்பேட்டை, செங்கோட்டை, புளியறை, பண்பிளி, கடையநல்லூர், சிவராமப்பேட்டை, சுரண்டை முதலான இடங்களில் இருந்த சந்தைத் துறைகளிருந்து வரும் வரித்தொகை வழங்கப்பட வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று பேராசிரியர் சு.தாமரைப்பாண்டியன் தெரிவித்தார்.

 

 

 

Next Story

ஊருக்குள் சிக்கிய அதிமுகவினர்; வேட்பாளரை லெஃப்ட் ரைட் வாங்கிய பெண்!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
woman demanded justice after rejecting AIADMK candidate from Tenkasi constituency

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி மிக வலுவாக இருந்து வருகிறது. இந்தக் கூட்டணியில் காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உள்ளன. ஆனால் எதிர்க்கட்சியான அதிமுக, பாஜகவோடு இருந்த கூட்டணியை முறித்துக்கொண்டது. இதன் காரணமாக நடக்க இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு வலுவான கூட்டணியை கட்டமைக்க எடப்பாடி பழனிசாமி முயற்சி மேற்கொண்டு வந்தார்.

அதன்படி அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக, புதிய தமிழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகித்து வருகின்றனர். பின்னர் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து, தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. மத்தியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் உள்ள பாஜக, வருகின்ற தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. அதே சமயத்தில், பாஜகவை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து வருகிறது. இதற்காக பல்வேறு கட்சிகள் சேர்ந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளது. ஆனால், தமிழகத்தில் பாஜகவோடு கூட்டணியில் இருந்த அதிமுக தற்போது அதனுடன் இருந்த உறவை முறித்துக்கொண்டு பாஜகவிற்கு எதிராக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறது. இவ்வாறு தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக தலைமையிலான இரண்டு பெரிய கட்சிகளுமே பாஜக வை வீழ்த்த வேண்டும் என தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் வேட்பாளர் பிரச்சாரத்தில் ஈடுபடும் போது தொகுதியில் உள்ள பொதுமக்கள் வேட்பாளர்களிடம் தொகுதி பிரச்சனைகளை கூறி வாக்கு வாதத்தில் ஈடுபடும் சம்பவங்களும் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் பசுபதி,  திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த அவர், வாணியம்பாடியில் உள்ள பெருமாள்பேட்டை, கதர்பேட்டை, கச்சேரி சாலை, உள்ளிட்ட பல்வேறு  பகுதிகளில்  தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்குள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் ஒரு கடையில் துணிகளுக்கு இஸ்திரி போட்டும், அங்குள்ள தர்பூசணி கடையில் தர்பூசணி பழம் விற்பனை செய்தும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் உதயேந்திரம் பகுதியில் வாக்கு சேகரிக்க சென்றுள்ளார். மதிய நேரத்தில் வாட்டி வதைக்கும் வெயிலில் தனது கட்சி தொண்டர்கள் மற்றும் வாணியம்பாடி தொகுதியின் அதிமுக எம்எல்ஏ செந்தில்குமார் ஆகியோருடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு வந்த பெண்ணொருவர், எம்.எல்.ஏ செந்தில்குமாரை நிறுத்தியுள்ளார்.

அங்கு நின்ற அவரிடம் ஆவேசமாக பேசிய அந்தப் பெண், நான் இங்குள்ள பேரூராட்சி அலுவலகத்தில் பணியாற்றி வந்தேன். என்னை முன்னாள் அமைச்சர் கேசி.வீரமணி பணியில் சேர்த்து விட்டார். பின்னர் அதிமுகவை சேர்ந்தவர்களால் எனக்கு வேலை போனது. ஏன் என்னை வேலையை விட்டு தூக்கி விட்டீர்கள் எனக் கேட்டால் வாய் பேசுகிறேன் என்கிறார்கள். நான் எதற்காக வாய் பேசுகிறேன் என்று அவர்களுக்குத் தெரியுமா?... என அவரின் ஆதங்கத்தை கொட்டி தீர்த்துள்ளார்.

அதற்கு பதில் அளித்த அதிமுக  எம்.எல்.ஏ இந்த பேரூராட்சியில் திமுககாரர் தானே தலைவராக உள்ளார்... என்று மடக்கியுள்ளார். ஆனாலும் அவரை விடாமல் பேசிய அந்தப் பெண், எனக்கு வேலை போன போது, அதிமுகவினர் தான் இருந்தார்கள். எனக் கூறி கொந்தளித்துள்ளார். அப்போது அங்கு வந்த சில அதிமுக தொண்டர்கள் அந்தப் பெண்ணை சமாதானப்படுத்த முயன்றுள்ளனர். ஆனால், அவர்களுக்கு உடனே பதிலடி கொடுத்த அந்தப் பெண், சார்... எனக்கும் உங்களுக்கும் பேச்சு இல்ல... நான் எம்.எல்.ஏ விடம்தான் பேசுகிறேன்.... உங்களிடம் பேசவில்லை... என எச்சரித்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியுள்ளது. அப்போது செய்வதறியாது தவித்து நின்ற அதிமுக எம்.எல்.ஏ, ஒருவழியாக அந்தப் பெண்ணிடம் சமாதானமாகப் பேசிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

Next Story

காவலர்கள் தாக்குதலால் டிரைவர் மரணம்? மக்களின் போராட்டத்தால் தென்காசியில் பதற்றம்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
struggle of people claiming that driver was incident by policemen in Tenkasi
வேன் டிரைவர் முருகன்

தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் அருகேயுள்ள வடக்குபுதூரைச் சேர்ந்த வேன்டிரைவர் முருகன் கடந்த மார்ச் 8 அன்று (மஹாசிவராத்திரி) அச்சம்பட்டியிலிருந்து பொது மக்களை வேனில் ஏற்றிக் கொண்டு பஞ்சஸ்தலங்கள் செல்வதற்காக சங்கரன்கோவில் டவுண் பஜார் வழியாக வந்திருக்கிறார். அதுசமயம் எதிர்பாராத விதமாக வேன் முன்னே சென்ற ஆட்டோ ஒன்றில் மோதியதால், வேன்டிரைவர் முருகனும் ஆட்டோ ஓட்டுனரும் தர்க்கத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதனால் மெயின் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நகர முடியாமல் நீண்ட தொலைவிற்கு ப்ளாக் ஆகியது போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனால் அந்தப் பகுதியில் பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் சம்பவ இடம் வந்தவர்கள் முருகனை தாக்கியுள்ளதாகத் தெரிகிறது. இதனால் மயக்கமடைந்த முருகனை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இதையறிந்த முருகனின் உறவினர்கள் சங்கரன்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இரவு முழுக்க சாலை மறியலில் ஈடுபட்டனர்.

struggle of people claiming that driver was incident by policemen in Tenkasi

போலீசார் தாக்கியதால்தான் முருகன் இறந்ததாகக் கூறி பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட அவரது உடலை வாங்க மறுத்துப் போராட்டம் நடத்திவருகின்றனர். சம்பவத்திற்கு காரணமான காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முருகனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்திற்கும் உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். அது வரை உடலை வாங்கப் போவதில்லை என்று கூறி அவரது உறவினர்கள் வடக்குபுதூர் கிராமத்தில் 6வது நாளாகப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். உடன் மார்க்சிஸ்ட் கட்சியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அறிவிக்கப்பட்டதன்படி மார்ச் 13 அன்று சங்கரன்கோவில் நகரின் தேரடித் திடலில் ஆர்ப்பாட்டம் நடத்துகிற வகையில் காலை 10.30 மணியளவில் நகரைச் சுற்றியுள்ள வடக்குபுதூர், காந்திநகர், அச்சம்பட்டி, புளியம்பட்டி நெடுங்குளம், அழகாபுரி, சீவலராயநேந்தல், அழகுநாச்சியார்புரம், அழகநேரி என 32 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து பங்கேற்றனர். அதுசமயம் ஒரு பகுதியினர் நகரின் முக்கியத் தடுப்புகள், தடைகளைப் போட்டு வாகனங்களைத் தடுத்தும் மறியலில் ஈடுபட்டனர். பதற்றம் காரணமாக பாதுகாப்பு பணிக்கென்று போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் நகரம் இறுக்கமானது. இதனிடையே சங்கரன்கோவில் அருகேயுள்ள மருதப்பபுரம் கிராமத்தில் எதிர்பாராத வகையில் வைக்கோல் படப்பு தீப்பிடித்து எரிந்ததால் அதனை அணைக்கிற வகையில் அந்த வழியாக வந்த சங்கரன்கோவிலின் தீயணைப்பு நிலைய வாகனத்தை நகருக்குள் விடாமல் ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுக்க தீயணைப்பு வாகனம் வேறு வழியாகச் சென்றது.

struggle of people claiming that driver was incident by policemen in Tenkasi

நேரம் செல்லச் செல்ல வேறு சில பகுதிகளிலிருந்தெல்லாம் மக்கள் பிரதானச் சாலையை நோக்கி திரண்டு வர அது சமயம் அந்தப் பகுதியிலிருந்த கடைகளை அடைக்கச் சொல்லி கற்களை வீசவே, பதற்றமடைந்த வியாபாரிகள் பீதியில் கடைகளை அடைத்தனர்.  ஆபத்தான நிலையை அறிந்த தென்காசி மாவட்ட எஸ்.பி.யான சுரேஷ்குமார் மறியல் நடந்த பழைய பேருந்து நிலைய பகுதிக்கு வந்தவர் அவர்களை சமாதானப் படுத்தியிருக்கிறார். ஆனாலும் ஒரு பகுதியினர் அவரைச் சூழ்ந்து கொண்டவர்கள் அரைமணி நேரத்திற்கும் மேலாக அங்கிருந்து செல்ல விடாமல் முற்றுகையிட்டனர்.

struggle of people claiming that driver was incident by policemen in Tenkasi

தொடர்ந்து அவர்களிடம் பேசிய எஸ்.பி, முருகன் இறந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டதாக கூறியவர் பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். மறியல், ஆர்ப்பாட்டம் என நகரம் துண்டிக்கப்பட, சுற்றுப்பட்டுக் கிராமங்களிலோ, பதற்றமும் பரபரப்பும் இறங்கியபாடில்லை.