Skip to main content

எஸ்.வி சேகர் போகாத கட்சி... பாஜகவுக்கு வேலையே இதுதான்- கலாய்க்கும் லியோனி!

Published on 14/11/2019 | Edited on 14/11/2019


திருவள்ளுவர் தொடர்பான சர்ச்சைகள் தற்போது எழுவரும் நிலையில், அதுதொடர்பாகவும் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்பாகவும் நம்முடைய கேள்விகளுக்கு திமுகவை சேர்ந்த ஐ.லியோனி பதிலளித்துள்ளா். அவரின் அதிடியான பதில்கள் வருமாறு,

திருவள்ளுவர் தொடர்பான சர்ச்சைகளை பாஜகவினர் தற்போது கிளப்பியுள்ளனர். திருவள்ளுவருக்கு காவிச்சாயம் பூசி தங்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். மேலும் பாரதியாருக்கும் காவிச்சாயம் பூசுவோம் என்று தெரிவித்துள்ளா்கள். அயோத்தி தீர்ப்பு கூட அவர்கள் விரும்பியது போல அமைந்துள்ளது. இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

வள்ளுவருக்கு காவிச்சாயம் பூசியதை போல ஒரு முட்டாள்தானமான நிகழ்வு வேறொன்றும் இருக்க போவதில்லை. இது வள்ளுவனுக்கு செய்யும் மிகப்பெரிய அவமானம். நாம் பள்ளிகளில் கம்பராமாயணம் உள்ளிட்ட பல நூல்களை படித்திருப்போம். அது இந்து சமயம் தொடர்பான நூல்கள் என்று நம்மிடம் நமது ஆசிரியர்கள் தெரிவித்து இருப்பார்கள். ஆனால் திருகுறளை இந்து நூல் என்று எந்த தமிழாசிரியராவது நம்மிடம் கூறியிருக்கிறார்களா? இவ்வாறு விஷமத்தனமான கருத்துக்களை மதவாதிகள் பரப்புகிறார்கள். இந்த எஸ்.வி சேகர், நாராயணன் போன்ற ஆட்கள் தற்போது திருவள்ளுவரை பற்றி பேசுகிறார்கள். எஸ்.வி சேகர் இல்லாத கட்சி என்றால் அது நாம் தமிழர் கட்சியும், சமத்துவ மக்கள் கட்சியும் தான். அந்த கட்சிகளுக்கு இவர் எதுக்கு போகவில்லை என்றால் அவர் அரசியலை விட்டு போன பிறகு இந்த கட்சிகள் எல்லாம் ஆரம்பிக்கப்பட்டது. இல்லை என்றால் அந்த கட்சிகளுக்கு அவர் போய்விட்டு வந்திருப்பார். இவர் திருவள்ளுவர் ஒரு இந்து துறவி என்று சொல்கிறார். அவரை ஒரு மதத்தோடு ஒப்பிடுவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். எங்கே குமரியில் உள்ள சிலைக்கு காவி அடிங்களேன் பார்க்கும். அவ்வளவு பெரிய சிலைக்கு நீங்கள் எப்போது ஆடை தைத்து போடுவீர்கள். அவர் எவ்வளவு பெரிய உயரத்தில் இருக்கிறார். நீங்கள் இன்னும் இவ்வளவு கீழானவர்களாக இருக்கிறீர்கள். அடையாளங்களை வைத்து அரசியல் செய்வது பாரதிய ஜனதா என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. 

அயோத்தி விவகாரத்தில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பை வழங்கியுள்ளார்கள். அதனை நாம் எல்லோரும் மதிக்க வேண்டும். அதனை விமர்சனம் செய்ய வேண்டியதில்லை. இந்த தீர்ப்பின் மூலம் சகிப்புதன்மை அதிகரித்துள்ளதை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. அதுவே தேசம் எப்போதும் போல இருப்பதற்கு காரணம். அதனை நினைத்து நாம் பெருமை படவேண்டும். ஆனால் ஒரு நாட்டில் சிறுபான்மை சமூகம் ஒடுக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்பட்டதாக கூறக் கூடாது. அது நாட்டிற்கும் ஜனநாயகத்துக்கும் பெரிய ஆபத்தை விளைவிக்கும்.  இதே அந்த இடத்தில் மசூதி கட்டலாம் என்று தீர்ப்பு கூறப்பட்டிருந்தால் பிரதமர் உள்ளிட்டவர்கள் இந்த தீர்ப்பை கொண்டாடி இருப்பார்களா? அப்படி எதுவும் நடந்திருக்காது. அதனை ஏற்க கூட மாட்டார்கள். 

 

h



சென்னை ஐஐடியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனை எப்படி பார்க்கிறீர்கள்?

கேரளாவை சேர்ந்த அந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாதிரியான தற்கொலைகள் மதத்தின் பெயரால் தில்லி பல்கலைக்கழகத்தில் கூட சில மாதங்களுக்கு முன் நடைபெற்றது. மதத்தின் பெயராலும், ஜாதியின் பெயராலும் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் வேட்டையாடப்படுவது கொடூரமானது. அதனை மத்திய, மாநில அரசுகள் தடுக்க முயற்சி எடுக்க வேண்டும்.  எனவே , அந்தமாதிரியான சம்பவம் இனி நடைபெறாமல் மாணவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். 
 

 

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.