Skip to main content

தினகரன்' அலுவலக எரிப்பு! நீதிக்கு துணைநின்ற நக்கீரன்! நீதியரசர்கள் பாராட்டு!

Published on 28/03/2019 | Edited on 28/03/2019

தமிழகத்தையே பதற வைத்த மதுரை "தினகரன்' பத்திரிகை   ஊழியர்கள் எரித்துக் கொல்லப்பட்ட  வழக்கில், தி.மு.க. தொண்டரணி அமைப்பாளர் அட்டாக்பாண்டி  உள்ளிட்ட  9 குற்றவாளிகளுக்கு  எதிராக  பத்திரிகை  ஊடகங்கள்  சாட்சி  சொல்லாத  நிலையில்... ஆசிரியர் நக்கீரன்கோபால்,  அப்போதைய  இணையாசிரியர் காமராஜ் அளித்த  சாட்சியங்கள்  கொடூரக் குற்றவாளிகளுக்கு  ஆயுள் தண்டனை  பெற்றுத் தந்திருப்ப தோடு நீதியரசர்களின் பாராட் டையும் பெற்றிருக்கிறது.  
 

attackpandya


 

attackpandya



கலைஞரின் அரசியல் வாரிசு யார்? என்றக் கருத்துக் கணிப்பை 2007 மே 9-ந் தேதி வெளியிட்டது சன் டி.வி. குழுமத் தின் பத்திரிகையான தினகரன். இதனால், ஆத்திரம் அடைந்த அழகிரி ஆதரவாளரும் தி.மு.க. தொண்டரணி அமைப்பாளருமான அட்டாக்பாண்டி தலைமையிலான அடியாட்கள்  தினகரன் பத்திரிகை மீது நடத்திய தாக்கு தல் மற்றும் பெட்ரோல் குண்டு வீச்சினால் கம்ப்யூட்டர் ஆபரேட்டர்களான கோபி, வினோத், காவலாளி முத்துராமலிங்கம் ஆகிய அப்பாவி ஊழியர்கள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்கள். தாக்குதல் மற்றும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட பிரத்யேக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் நக்கீரனில் முதலில் வெளியானது. தினகரன் பத்திரிகையில் செய்தி வெளியாகவே நக்கீரன் எடுத்த புகைப்படங்கள்தான் உதவின. அதன்பிறகு, பல்வேறு பத்திரிகை ஊடகங்களிலும் வெளியாகி தமிழகத்தையே பதறவைத்தது. அரசியலில் எதிரும் புதிருமாக இருக்கும் ஜெயா டி.வி. நிறு வனத்தினர் உட்பட அனைத்து ஊடகங்களும் அக்கொடூர கொலைக்குற்றவாளிகளுக்கு எதிராக சாட்சி சொல்ல மறுத்த தோடு, பலர் பிறழ் சாட்சிகளாகி விட்டார்கள். 

 

attack pandya



இந்நிலையில்தான், பத்தி ரிகை ஊழியர்களை எரித்துக் கொன்ற வழக்கின் மேல்முறை யீட்டு மனுவில், அட்டாக்பாண்டி உள்ளிட்ட 9 குற்றவாளிகளுக்கு ஆயுள்தண்டனையும் ஓய்வுபெற்ற டி.எஸ்.பி. ராஜாராமுக்கு 5 வருட சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்த நீதிபதிகள் பி.என். பிரகாஷ், புகழேந்தி ஆகியோ ரைக்கொண்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை, "தினகரன் பத்திரிகை அலுவலகத்தின் மீதான தாக்குதல் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என அலறிய, சம்பவத்தில் இறந்துபோன உடல்களைப் பார்த்து முதலைக்கண்ணீர் வடித்த, மெழுகுவத்தி ஏந்தி ஊர்வலம் சென்ற பத்திரிகையாளர்கள், நீதிமன்றம் அழைப்பாணை கொடுத்தும் சாட்சி சொல்ல முன்வராத நிலையில்... அரசுத்தரப்பு சாட்சிகளான நக்கீரன்கோபால், நக்கீரன் (அப்போதைய) இணையாசிரியர் காமராஜ் (தற்போது இவர் பணியில் இல்லை) இருவரும் நீதிமன்றத்துக்கு வந்து "பத்திரிகையில் வெளியான புகைப்படம் வீடியோக்கள் உண்மைதான்' என்று சொன்ன சாட்சியம்தான் அரசுத்தரப்புக்கு வலுவான சான்றாக அமைந்துள்ளது'’ என்று குறிப்பிட்டு பாராட்டியிருக்கிறது.


இத்தீர்ப்பை வரவேற்று தனது கருத்தை தெரிவித்த உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சுதந்திரம், “மற்ற அனைத்துப் பத்திரிகை ஊடக நிருபர்கள், புகைப்படக்காரர்கள்,  ஜெயா டி.வி. வீடியோகிராபர்கள் உட்பட,  சாட்சி  சொல்ல முன்வராத  நிலையில்...  நக்கீரன்  மட்டும்  சாட்சி சொன்னது வழக்குக்கு வலுவாக அமைந்தது. பாராட்டத்தக்கது. "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே'’ என்பதை அவர்கள் நிரூபித்திருக்கிறார்கள்''’என்று சுட்டிக்காட்டி பாராட்டி யுள்ளார்.

 

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

“ஜெயிச்ச கையோட வேற கட்சிக்கு போயிடாதீங்க...” - செல்லூர் ராஜு கிண்டல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Don't go to another party after winning'- Sellur Raju teased

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் வேட்பாளர்கள் அறிமுகம் நடைபெற்று வரும் நிலையில், மதுரையில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மருத்துவர் சரவணனை ஆதரித்து  மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசிக்கொண்டிருந்தபோது வேட்பாளர் சரவணன் கைகூப்பியபடி சிரித்தார். அதைப் பார்த்த செல்லூர் ராஜு,  'வலிக்கிற மாதிரி ஊசி போட்டுடாதீங்க. வலிக்காமல் ஊசி போடுங்க. தலைமை சொல்லிவிட்டால் அந்த கட்டளை தான் எல்லாமே. வேறு எதுவும் கிடையாது. இது சாமி என்றால் சாமி. சாமி இல்லை இது சாணி என்றால் சாணி. நம்மைப் பொறுத்தவரை மதித்தால் மதிப்பு, மரியாதை கிடைக்கும். மரியாதை கொடுக்கவில்லை என்றால் மிதிப்போம்' எனப் பேசியவர், வேட்பாளர் சரவணன் பல்வேறு கட்சிகளுக்கு சென்று வந்தவர் எனக் குறிப்பிட்டு பேசியதோடு 'ஜெயித்த பிறகு வேறு கட்சிக்கு போய் விடக்கூடாது' என கிண்டலாகப் பேசினார்.