Skip to main content

ஒரு தமிழரின் டைரிக் குறிப்பு! - உலகமெங்கும் பாதுகாக்கப்படும் பொக்கிஷம்

Published on 30/03/2018 | Edited on 30/03/2018

மார்ச் 30 -   நாட்குறிப்பு மன்னர் ஆனந்தரங்கம் பிறந்த நாள் 

 

Anandarangam


உலகில் பலரும் டைரி என்கிற நாட்குறிப்பை எழுதுகிறார்கள். அதில் பலர் தங்களது அனுபவங்களை எழுதுகிறேன் என்கிற பெயரில் வீட்டின் மளிகை செலவு கணக்கையும், காதல் விவகாரத்தையும், அலுவலக வேலைகள் பற்றியும் பெரும்பாலான பதிவுகள் எழுதுகிறார்கள். அதையும் தாண்டி பலர் எழுதிய டைரி குறிப்புகள், உலகின் பொக்கிஷங்களாக விளங்குகின்றன. அதில் ஒருவர் இந்தியாவின் நாட்குறிப்பு மன்னர் என புகழப்படும் ஆனந்தரங்கம். இவரது நாட்குறிப்புகள் உலகத்தின் பல நாட்டு நூலகங்களில் உள்ளன. அந்தளவுக்கு முக்கியமானவர் ஒரு தமிழர்.
 

சென்னை பெரம்பூரில் 1709 மார்ச் 30ந்தேதி பிறந்தவர் ஆனந்தரங்கம். இவர் பிறந்த மூன்று வயதாகும்போதே இவரது தாயார் இறந்துவிட்டார். இவரது தந்தை திருவேங்கடம் தான் இவரை வளர்த்து படிக்க வைத்தார்.
 

படித்து முடித்ததும் புதுவையை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். பிரெஞ்ச் அரசாங்கத்தில் பணியாளராக வேலைக்கு சேர்ந்தார். அப்போது இந்திய அலுவலர்களில் அவர் முக்கியமானவராக இருந்தார். பாண்டிச்சேரி ஆளுநர் ஜோசப் பிரான்சிஸ் டூப்ளக்ஸ் என்பவரின் மொழி பெயர்ப்பாளராக நீண்ட காலமாக இருந்த கனகராயர் என்பவர் இறந்துவிட்டார். இதனால் டுப்ளக்ஸ் தனது ஆட்சியிலன் கீழ் இருந்த மன்னர்களிடம் பேச மொழி பெயர்ப்பாளர் இல்லாமல் தடுமாறினார். அப்போது பிரெஞ்ச், ஆங்கிலம், உருது, தெலுங்கு உட்பட பல மொழிகள் அறிந்தவராக விளங்கிய ஆனந்தரங்கம் 1747ல் மொழிபெயர்ப்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.

 

diary in museum

 

பிரெஞ்ச் கவர்னரின் மொழிபெயர்ப்பாளராக மாறியவர் படிப்படியாக அரசின் திவானாக பதவி உயர்வு பெற்றார். அதோடு, மன்னர்கள் அவருக்கு பட்டங்களையும் பொருள்களையும் தந்து நட்பை பெற்றனர். மன்னர்களின் நட்புகள், ஆனந்தரங்கத்தை வணிகத்தில் ஈடுபட வைத்தது. பிரெஞ்ச்காரர்கள் உதவியுடன் ஆனந்தப்புரவி என்கிற பெயரில் பாய்மரக்கப்பல் வாங்கி வணிக ரீதியாக வைத்திருந்தார் ஆனந்தரங்கம். அந்தக் கப்பல் வழியாக அக்கால தமிழகத்தில் பிரபலமாக இருந்த சேலை வகைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து சம்பாதிக்கும் வணிகராக இருந்தார். அது மட்டுமல்ல மது உற்பத்தி செய்து விற்பனை செய்யவும் தொடங்கியிருந்தார்.
 

ஆனந்தரங்கம் மொழி பெயர்ப்பாளராக சேர்ந்தது முதல் நாட்குறிப்பு எழுத துவங்கினார். தமிழின் முதன் முதலில் குருவப்பா என்பவர் தான் டைரியை வங்கினார். அவரை பார்த்தே ஆனந்தரங்கம் நாட்குறிப்பை எழுத துவங்கினார். ஆனந்தரங்கத்தின் நாட்குறிப்புகள் தான் இன்று வரை கிடைத்துள்ளன. அதனால் அவையே தமிழில் எழுதப்பட்ட முதல் நாட்குறிப்பாகிறது. அவருக்கு முன்பு எழுதிய ஆனந்தரங்கத்தின் மாமா குருவப்பாவின் நாட்குறிப்புகள் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
 

ஆனந்தரங்கம் நாட்குறிப்பு என்பது, அவரின் தனிப்பட்ட தகவல்களில்லை. அன்றைய பிரெஞ்ச் அரசாங்கத்தின் செயல்பாடுகள், நிர்வாகம், போர்முறை, அரசியல், வியாபாரம் போன்றவை ஆளுநரின் கீழ் எப்படி செயல்பட்டன, ஆளுநர் எப்படி செயல்பட்டார் என்பதை தினசரி நிகழ்ச்சிகள் குறித்து எழுதிவைத்திருந்தார். அதோடு, அக்கால மக்களின் செயல்பாடுகள், சாதி அமைப்புகள், திருமண முறைகள், மக்களின் பழக்க வழக்கங்கள் போன்றவற்றையும் பதிவு செய்துவைத்திருந்தார். அதனால் தான் அது காலம் கடந்து இன்றும் வியந்து பார்க்கப்படுகிறது.

 

Anandarangam pillai museum

புதுச்சேரியில் உள்ள ஆனந்தரங்கம் இல்லம் 


பிரெஞ்ச் அரசாங்கத்தில் ஆளுநரின் மொழி பெயர்ப்பாளராக மட்டுமில்லாமல் பொதுமக்களின் புகார்களை விசாரித்து ஆளுநருக்கு பதிலாக தீர்ப்பு வழங்குபவராகவும் விளங்கினார். அதோடு ஆளுநர் அனந்தரங்கம் நெருக்கமான நட்பையும் பேனினார்.
 

செங்கல்பட்டில் வசித்து வந்த சேஷாத்திரி என்பவரின் மகள் மங்கதா என்பவரை திருமணம் செய்துக்கொண்டு வாழ்க்கை நடத்தினார் ஆனந்தரங்கம். இவருக்கு 3 மகள்கள், 2 மகன்கள் என்பது குறிப்பிடதக்கது. தமிழ் மீது பற்றுக்கொண்டு தனது பிள்ளைகளுக்கு தமிழ் பெயரே சூட்டினார். அதோடு, அக்காலத்தில் வாழ்ந்த தமிழ் அறிஞர்களுக்கு பல உதவிகளை செய்துள்ளது அவரது நாட்குறிப்புகள் மூலமாகவும், அந்தத் தமிழறிஞர்கள் வழியாகவும் உறுதியும் செய்யப்படுகிறது.
 

சுமார் 28 ஆண்டுகள் பிரெஞ்ச் அரசாங்கத்தின் மொழிபெயர்ப்பாளராக கோலோச்சிய ஆனந்தரங்கம் 1761 ஜனவரி 10ந்தேதி மறைந்தார். இறக்கும்போதும் அவர் அந்தப் பணியில் இருந்தார். அவர் மறைந்து சுமார் 80 ஆண்டுகளுக்கு பிறகு 1846ல் அர்மோன் கலுபா என்கிற பிரெஞ்சம் அரசாங்கத்தின் வருவாய்த்துறை அதிகாரி, ஆனந்தரங்கம் வீட்டில் இருந்த அவரது நாட்குறிப்புகளை தேடியெடுத்து தொகுத்தார். அவர் எழுதியவற்றை அதன்பின் பிரெஞ்சம் அரசாங்கம் பிரெஞ்ச் மொழியில் மொழி பெயர்த்து வியந்தது. அந்த நாட்குறிப்புகள் தற்போது பாரிஸ் நகரத்தில் உள்ள தேசிய நூலகத்திலும் சென்னை ஆவணக் காப்பகத்திலும் உள்ளது. அந்த ஆவணங்கள் முதலில் ஆங்கிலம், பின்னர் பிரெஞ்சம், அதன்பின்னர் தமிழில் நூலாக வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

உலகின் முதல் நாட்குறிப்பு எழுதியவர் என குறிப்பிடப்படுபவர் சாமுவேல் பெப்ஸ். இந்தியாவின் முதல் நாட்குறிப்பு எழுதியவர் ஆனந்தரங்கம் என்பது தமிழகத்துக்கு பெருமை.

குறிப்பு : படத்தில் இருக்கும் டைரி அசலானது அல்ல 

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; இந்தியா வெளியிட்ட அறிக்கை!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
India is of the opinion that peace should return to the Israel-Iran issue

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுடன் தூதரகங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளன. இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் ஏற்பட்டது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.