Skip to main content

ஆளுங்கட்சி ஆதரவில் மாணவிகளை சீரழித்து வீடியோ எடுத்த பாலியல் கேங்!

Published on 11/03/2019 | Edited on 11/03/2019

ர் அறை. அதனுள்...

""டேய்... நான் உன்ன நம்பித்தானே இங்கே வந்தேன்... இவங்ககூட இருக்கவா வந்தேன்?'' என அரை நிர்வாணக் கோலத்தில் கட்டிலில் உட்கார வைக்கப்பட்டிருக்கும் இளம் பெண்ணின் கதறல் கேள்வி, அந்த வீடியோவைப் பார்க்க நேரிடும் எவரையும் குலைநடுங்க வைத்துவிடும்.

காதல் வலை வீசி, அந்தப் பெண்ணை அழைத்துவந்த சபரிராஜன் என்கிற ரிஸ்வந்த், தன் முதுகுக்குப் பின்னால் ரகசியமாய் செல்போனில் படம் எடுத்துக்கொண்டிருக்கும் நண்பர்களை சைகைமூலம் அழைக்கிறான். அந்த இளம்பெண் கையெடுத்துக் கும்பிட்டு... "என்னைய விட்ரு...' என கதறும்போதே, சபரிராஜனின் நண்பனான திருநாவுக்கரசு டீம் நுழைகிறது. தலையிலடித்துக்கொண்டு அழுகிறார் அந்த இளம்பெண்.

அதற்கடுத்த வீடியோவில் லெக்கின்ஸ் பேன்ட்டோடு இருக்கும் அந்த இளம்பெண், "அண்ணா பெல்ட்டால அடிக்காதீங்க அண்ணா... நான் கழட்டிடுறேன்'' எனத் துடிதுடித்தபடி அழுவது இதயத்தை இரு துண்டாக்குகிறது.
kovai-video
"இந்த வீடியோக்கள் வெறும் சாம்பிள்தான். நெறைய வீடியோஸ் போலீஸ்கிட்ட இருக்கு. இவனுக நெறைய பொண்ணுகளை இப்படித் துன்புறுத்தியிருக்கானுங்க. அதுல முக்கியமானவன் திருநாவுக்கரசு'' என கோவை -பொள்ளாச்சியை சேர்ந்த ஓர் இளம்பெண் நம்மிடம் கதறியபடியே சொன்னார்.

பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலையத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரியிடம் பேசினோம். ""மொத்தம் ஆயிரத்து நூறு வீடியோக்கள். ஏராளமான போட்டோக்கள். எல்லாம் கிராமத்துலயிருந்து இங்கே பொள்ளாச்சி டவுனுக்கு படிக்க வர்ற பொண்ணுக. கடைகள்ல வேலை செய்யற பொண்ணுகளையெல்லாம் காதல்ங்கற பேர்ல நம்பவச்சு கோட்டூர்புரம் பகுதியில இருக்கற சின்னப்பம்பாளையம் பண்ணை வீட்டுக்கு கூட்டிட்டுப் போயி பத்துக்கும் மேற்பட்ட பசங்க பண்ணுன அக்கிரமம்தான் வீடியோவா பதிவாகியிருக்கு. பண்ணை வீட்டுப் பையன் திருநாவுக்கரசுதான் கேங் லீடர். கந்துவட்டி பிஸினஸ். அவன் அப்பா த.மா.கா.காரர்.

திருநாவுக்கரசு கூடவே சுத்துற சுபாகர், பிரேம், கெரோன், பைக் பாபு, சதீஷ், வசந்தகுமார், பாபு, செந்தில், ஆச்சிபட்டி மணிகண்டன் இவனுக எல்லாருமே ஸ்கூல், காலேஜ்னு போய் நின்னுக்குவானுக. எதிர்ப்படுற பொண்ணுககிட்டபோய் பேசி நம்பர் வாங்கிருவானுக. அப்புறம், அந்த நம்பர்கள்ல பேசுறது திருநாவுக்கரசுதான். பேசியே மயக்கி சம்பந்தப்பட்டவனுகளிடம் திரும்ப போனை கொடுத்துருவான்.
kovai-video
அடுத்தநாள் அவனவன் ரெடி பண்ணின பொண்ணுகளை கூட்டிட்டு சின்னப்பம்பாளைய பண்ணை வீட்டுக்கு வந்துருவானுக. அங்கே காதல் மயக்கத்தில் உள்ள பெண்களை அலங்கோல உடையில் ரகசியமா வீடியோ எடுத்துருவான் இந்த திருநாவுக்கரசு. அப்புறம் அவனும் அவனோட கேங்க்கும் உள்ளே நுழைஞ்சி பொண்ணுங்களை கதறக் கதற நாசப்படுத்தி, வீடியோ எடுத்திடுவானுங்க. அதை வெளியிட்டுடுவோம்னு மிரட்டி மிரட்டியே, நினைச்சப்பவெல்லாம் பண்ணை வீட்டுக்கு கூட்டிட்டு வந்திடுவானுங்க. இவனுங்க எடுத்த வீடியோக்களை "பார்' நாகராஜ்ங்கிற அ.தி.மு.க. ஆளுகிட்ட காட்டி இருக்கானுக. அவனும் இந்த திருநாவுக்கரசு, ரிஷ்வந்த்தோடு சேர்ந்து, பொண்ணுகளை நாசமாக்கி, அ.தி.மு.க. கட்சி மேல்மட்ட நிர்வாகிகளுக்கும் சப்ளை பண்ணியிருக்கான்''’என்றார் விரிவாக.

"எப்படி மாட்டினார்கள்' எனக் கேட்டோம். "பொள்ளாச்சியைச் சேர்ந்த அகிலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற கல்லூரி மாணவி, இந்த ரிஷ்வந்தின் காதல் வலையில் சிக்க, அகிலாவை குறிப்பிட்ட இடத்திற்கு வரச்சொல்லி... காரில், தன் சகாக்களோடு காத்திருந்தான். அகிலா காரில் ஏறியதும், அவரிடம் சில்மிஷம் செய்து, தன் செல்போனில் ரிஷ்வந்த் படம் பிடிக்க, அலறித் திமிறிய அகிலாவோட செயினை அறுத்துட்டு, காரிலிருந்து இறக்கி விட்டுட்டானுங்க. அந்தப் பொண்ணு கொடுத்த கம்ப்ளைண்ட்டில்தான் இவனுகளை அரெஸ்ட் பண்ணினோம். அப்ப திருநாவுக்கரசு தப்பித்துவிட்டான். பொள்ளாச்சி மக்கள் எல்லோரும் போராட ஆரம்பிச்சுட்டாங்க. தி.மு.க.காரங்க சாலைமறியலே பண்ணினாங்க. அதுக்கப்புறம் திருநாவுக்கரசே சரணடையறதா வீடியோ அனுப்பினான், அவனையும் அரெஸ்ட் பண்ணியாச்சி. தொடர்ந்து விசாரிச்சா இன்னும் என்னென்ன பயங்கரம் வெளியே தெரியுமோ'' என்கிறார் போலீஸ் அதிகாரி.
kovai-video
இளம்பெண்கள் பிரச்சினையை தீவிரமாக எடுத்துப் போராடிவரும் தி.மு.க. இளைஞர் அணி நவநீதகிருஷ்ணன், அ.தி.மு.க.வைச் சேர்ந்த "பார்' நாகராஜ் மீது வழக்குப்பதிவு செய்து அரெஸ்ட் பண்ணின அன்னைக்கு சாயந்தரமே சென்னையில இருந்து பிளைட் பிடித்து ஒரு வக்கீல் வருகிறார். அவரும் ஜாமீனில் விடுவிக்கப்படுகிறார். இங்கே உள்ள அ.தி.மு.க. பிரமுகர்கள் பலரும் இந்த இளம் பெண்களை சீரழிச்சிருக்காங்க. திருநாவுக்கரசு, மா.செ. பொள்ளாச்சி ஜெயராமன் தரப்புக்கு வேண்டியவர். அவரும், பொள்ளாச்சி நகராட்சி தலைவரா இருந்த கிருஷ்ணகுமாரும் குற்றவாளிகளை தப்பவிடப் பாக்குறாங்க. புகார் கொடுத்த பெண்ணின் உறவினர்களை ஒரு கும்பல்... கேஸை வாபஸ் வாங்கச் சொல்லி மிரட்டியிருக்கிறது. முழுமையான பின்னணி தெரியும்வரை நாங்க போராடுவோம்'' என்கிறார் ஆத்திரமாய்.

பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. எம்.பியான மகேந்திரனும் "இந்த அகிலா வழக்கில் மறைந்திருக்கும் குற்றவாளிகள் கண்டறியப்பட வேண்டும்' என தன் கருத்தை வெளியிட்டிருக்கும் நிலையில்... அனைத்திந்திய மாதர் சங்கம் ராதிகா, கொங்கு நாடு கட்சி ஈஸ்வரன் ஆகியோரும் இதே கருத்தை வலியுறுத்தி போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ஆளுந்தரப்பு பிரமுகர்கள் பலரது பெயரும் இந்த விவகாரத்தில் அடிபடுவதால், முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு பலிகடா ஆக்கப்படலாம் என்ற செய்தியும் காவல்துறை வட்டாரத்திலிருந்தே கசிகிறது.

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“திருச்சி அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்” - தங்கமணி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 Trichy AIADMK candidate must work together for victory says Thangamani

திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை ரோட்டில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராசு, மல்லிகா, இந்திரா காந்தி, பரமேஸ்வரி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் மோகன், எம்.ஆர். விஜயபாஸ்கர், நாமக்கல் மாவட்டச் செயலாளரும் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி பொறுப்பாளருமான தங்கமணி ஆகியோர் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: பண பலமா? அதிகார பலமா? என்று நிரூபிக்கின்ற இந்த தேர்தலை பொறுத்தவரை நாம் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரிக்க வேண்டும் எனவும்,  பூத்துக்கு 500 வாக்குகள் பெற்றால் கூட நாம் வெற்றி பெற முடியும். 15 நாள் உழைப்பு அடுத்த ஐந்து வருடத்திற்கான மக்கள் பலனை தரும். திருச்சி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நாம் மீண்டும் நிரூபிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து முறை சென்று கழக தொண்டர்கள் வாக்குகள் சேகரிக்க வேண்டும். இறந்து போனவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் வாக்குகளை கண்டறிந்து கள்ள வாக்குகளை நாம் தடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. திமுக ஆட்சியில் விலைவாசி மற்றும் அனைத்து கட்டணங்களும் உயர்ந்துள்ளது.

நகை கடன் அனைவருக்கும் தள்ளுபடி என்று கூறிவிட்டு 45 லட்சம் பேரில் 12 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி செய்துள்ளனர். 10 ஆண்டுகளில் தாலிக்கு தங்கம், லேப்டாப், இலவச சைக்கிள், மகளிர் திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் திட்டங்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் என உறுதிமொழி ஏற்போம். உள்ளாட்சி தேர்தலுக்கும், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் அடித்தளமாக அமையும். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரமோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கழக தொண்டர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

வேட்பாளர் சந்திரமோகனை அறிமுகப்படுத்தி விஜயபாஸ்கர் பேசியதாவது: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஏழைகளுக்கு 20 கிலோ அரிசி, தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தார். ஆனால் இந்த திமுக ஆட்சியில் அந்த திட்டத்தை எல்லாம் நீக்கி விட்டனர். நீட் ஒழிக்கிறேன் என்று சொல்லி இப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்த உடன் நீக்குகிறோம் என்று சொல்லி பொய் பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டு செல்வார்கள். அந்த பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் நமது திண்ணை பிரச்சாரம் இருக்க வேண்டும் என செயல் வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இதனை அடுத்து வேட்பாளர் சந்திரமோகன் பேசியதாவது:  என்னை எந்த நேரத்திலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். நான் வெற்றி பெற்றவுடன்  இப்பகுதிகளுக்குரிய தேவைகளை கவனத்தில் கொண்டு நிறைவேற்ற பாடுபடுவேன் எனப் பேசினார்.

முன்னதாக முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர் குமார், புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னையன் , வளரும் தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் தமிழன் துரைராஜ், எஸ்டிபிஐ கட்சி மாவட்டச் செயலாளர் அசாருதீன் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவில் நகரச் செயலாளர் எம்.கே. சுப்ரமணியன் நன்றி கூறினார்.