Skip to main content

சசிகலாவுடன் சமரசத்துக்கு வாய்ப்பு உள்ளதா..? - ஜெ.தீபா பதில்!

Published on 12/06/2020 | Edited on 12/06/2020

 

fg


ஜெயலலிதாவின் சொத்துகள் யாருக்குச் சொந்தம் என்ற கேள்வி மிக நீண்ட காலமாகத் தமிழகத்தில் கேட்கப்படுகின்ற ஒரு கேள்வியாகத் தொடர்ந்து இருந்து வருகின்றது. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அந்தச் சொத்துத் தனக்குத்தான் என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்பு ஜெயலலிதாவின் வீட்டை நினைவில்லமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் ஜெயலலிதாவின் வாரிசுகள் என்று தீபாவை நீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில் இந்த வழக்குத் தொடர்பாகவும், எதிர்கால நடவடிக்கை தொடர்பாகவும் அவரிடம் பல்வேறு கேள்விகளை நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,
 


ஜெயலலிதா இறப்புக்குப் பிறகு கடைசி நேர காரியத்தைச் செய்யக்கூட என்னை அனுமதிக்கவில்லை என்று நீங்கள் ஏற்கனவே கூறியிருந்தீர்கள். ஆனால் உங்கள் சகோதரர் தானே எல்லா காரியங்களையும் செய்தார்? உங்களை மட்டும் புறக்கணிக்க என்ன காரணம் இருக்கிறது?

இந்தக் கேள்விக்கு எனக்கும் கூட விடை தெரியவில்லை. என்ன காரணத்துக்காக புறக்கணித்தார்கள் என்று இன்று வரை எனக்குத் தெரியாது. அத்தையுடன் அவர்கள் 80களின் இறுதியில் இருந்து இருந்தார்கள். அதன்பிறகு 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். அதற்கான காரணம் இன்றைக்கு வரைக்கும் யாருக்கும் தெரியாது. மீண்டும் அவர்கள் வந்தாலும் இந்த வெளியேற்றம் என்பது யாரும் எதிர்பாராமலும், அதிர்ச்சியாகவும் இருந்தது. அதுபோலவே என்னை ஏன் புறக்கணித்தார்கள் என்பதும் மர்மமாகவே இருக்கிறது.

அப்போது நான் படிப்புக்காக வெளிநாட்டில் வேறு இருந்தேன். மற்ற அனைவரும் சொல்கின்ற மாதிரி இவர்கள் அத்தைக்கு எதிராக என்ன செய்தார்களோ என்று அச்சப்பட்டேன். சோ ராமசாமி மாதிரியான ஆட்கள் எங்களுக்கு ஆலோசனை கூட கொடுத்தார்கள். அப்போது இங்கே வர வேண்டுமா இல்லையா என்று கூட தெரியாமல் இருந்தான். யூ.கே -வில் அப்போது படித்துக்கொண்டிருந்ததால் என்னுடைய அம்மாவின் முடிவுக்கு அதை விட்டுவிட்டேன். 

 

 


இனிமேல் சசிகலாவுடன் சமரசத்துக்கு வாய்ப்பு இருக்கின்றதா?

திரும்பவும் முதலில் இருந்துதான் நாம் போக வேண்டும். அத்தை மருத்துவமனையில் இருந்த போது அவர்களின் உடல்நிலை்குறித்து அவருடன் இருந்த சசிகலா உறவினர்கள் யாரும் எனக்கு எந்தத் தகவலையும் ஏன் கொடுக்கவில்லை. இதையும் கூட உங்கள் சேனலில் தான் மருத்துவமனை வாசலில் நின்று தெரிவித்திருந்தேன். என்ன நடந்தது என்று எனக்கு அப்போது சொல்ல ஒருவர் கூட ஆளிலில்லை.  நாங்கள்தான் இரத்த உறவு என்று அவர்கள் அனைவருக்கும் தெரியும். அப்படி இருக்கையில் எங்களை ஏன் அனுமதிக்கவில்லை. என் சகோதரரை மட்டும் அழைத்துவிட்டு என்னை அழைக்கவில்லை. இதற்கான காரணம் என்னவென்று அவர்கள் சொன்னால்தான் தெரியும். 

அத்தை இருந்தவரை இப்படிப்பட்ட சம்பவம் ஒரு முறை கூட நடந்தது கிடையாது. அழைத்தால் எங்கள் எல்லோரையும் அழைப்பார்கள், இல்லை என்றால் யாரையும் அழைக்க மாட்டார்கள். எங்களைப் பிரித்துப் பார்க்க மாட்டார். இதுதான் அவர்களுடைய இயல்பு. கடைசி காலம் வரை அவர் அப்படித்தான் இருந்தார். அவர்களுடன் நான் எப்படி சமரசம் செய்துகொள்ள வாய்ப்பு இருந்திருக்கும்? அத்தையுடைய இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள எல்லா விதமான அடிப்படை உரிமைகளும் எனக்கு இருக்கின்றது. அப்படி இருக்கையில் என்னை எதற்காக அனுமதிக்கவில்லை. இதற்கான விளக்கத்தை அவர்கள் கூறியே ஆக வேண்டும்.  

இப்போது உங்கள் சகோதரர் என்ன நினைக்கிறார். அவர் பேட்டிகளில் கூட 'சின்ன' அத்தை என்றுதான் கூறுவார், இப்போதும் அதே நிலையில்தான் இருக்கிறாரா?
 

http://onelink.to/nknapp


இப்போது அவர் என்ன நினைக்கிறார் என்று எனக்குச் சரியாகச் சொல்லத் தெரியவில்லை. என்னிடம் கூட அவர்கள் அதே மாதிரி இருந்திருக்கிறார்கள். நானும் கூட ஆன்டி என்று அழைத்திருக்கிறேன். இந்தத் தீர்ப்புக்குச் சில ஆண்டுகள் முன்பு இருந்தே அவர்கள் என்னிடம் பேசுவதில்லை. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் 2010க்குப் பிறகு அவர்களுடனான தொடர்பு சுத்தமாக எங்களுக்கு இருந்தில்லை. 


 

Next Story

'அதில் நாங்கள் தலையிட முடியாது'- ஜெ.தீபா பேட்டி

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
'We cannot interfere in it' - J. Deepa interview

ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் அதிமுக தொண்டர்களாலும், அதிமுக நிர்வாகிகளாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதேநாளில் சசிகலா 'ஜெயலலிதா இல்லம்' என்ற பெயரில் போயஸ் கார்டனில் புதிய வீடு ஒன்றை கட்டி இன்று குடியேறி உள்ளார். இந்நிலையில் சென்னையில் போயஸ் கார்டெனில் உள்ள வேதா இல்லத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அவர் பேசுகையில், ''ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாள் இன்று. அவர் எனது அத்தை. அவர் குடும்ப வழி உறவு என்பதால் பிறந்தநாள் விழாவிற்காக எங்களால் முடிந்த அளவிற்கு எளிமையான பூஜைக்கு ஏற்பாடு செய்துள்ளோம். எங்கள் முறைப்படி செய்து கொண்டிருக்கிறோம். ஒரு பிறந்தநாள் கூட அவருக்கு நாங்கள் வாழ்த்து சொல்லாமல் இருந்ததே இல்லை. எல்லா பிறந்தநாளுக்கும் அத்தைக்கு நான் வாழ்த்து சொல்வேன். வேதா இல்லத்திற்கு எதிரே 'ஜெயலலிதா இல்லம்' என சசிகலா வீடு கட்டியுள்ளது அவருடைய தனிப்பட்ட விஷயம். அதில் நாங்கள் தலையிட முடியாது.

இந்த ரோட்டில் நாங்கள் தான் இருப்போம் வேறு யாரும் இருக்கக்கூடாது என்று சொல்ல முடியாது. அது அவர்களுடைய இல்லம். அங்கு அவர்கள் வீடு கட்டியுள்ளார்கள். அதில் குடியேறி உள்ளார்கள். என்னுடைய பர்சனலாக என்னுடைய நினைவெல்லாம் இங்கேதான். இந்த இடத்தில் தான் அவருக்கு நான் வாழ்த்து சொல்வேன்'' என்றார்.

Next Story

''அவர் தீபா கட்சிக்கு போயிட்டு வந்தவர்... பெரிய ஆள் இல்ல'' - எடப்பாடி பழனிசாமி

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
"He used to go to Deepa's party; There is no great man'' - Edappadi Palaniswami interview

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகியான ஏ.வி. ராஜு அண்மையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘கூவத்தூர் விவகாரத்தில் நடிகை த்ரிஷாவை தொடர்புப்படுத்திப் பேசியிருந்தார். மேலும் தன்னை அதிமுகவிலிருந்து நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அதிகாரமும் இல்லை. அதிமுகவின் சட்ட விதிகளைத் தெரியாமல் எடப்பாடி பழனிசாமி உள்ளார்’ எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.

கூவத்தூர் விவகாரத்தில் தன்னை தொடர்புப்படுத்தி இழிவாகப் பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜுவிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நடிகை த்ரிஷா, இது தொடர்பாக டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'கவனம் ஈர்ப்பதற்காக எந்த அளவுக்கும் தரம் தாழ்ந்து பேசுபவர்களை பார்ப்பதற்கே அறுவறுப்பாக உள்ளது. அவதூறு பேச்சுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தமது வழக்கறிஞர்கள் தேவையான நடவடிக்கை எடுப்பார்கள்' எனத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அதிமுக நிர்வாகி ஏ.வி. ராஜுவின் பேச்சுக்கு பல்வேறு சினிமா பிரபலங்களும் கண்டங்கள் தெரிவித்து வந்த நிலையில், த்ரிஷா இதை உறுதிப்படுத்தி உள்ளார்.

"He used to go to Deepa's party; There is no great man'' - Edappadi Palaniswami interview

தொடர்ந்து ஏ.வி. ராஜு இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில், ''என்னைப் பற்றி சமூக வலைத்தளங்களில், சில ஊடகங்களில் திரைப்படத் துறையினரை அவதூறாக நான் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நான் பேசியது அரசியல் ரீதியாக மட்டும் தான் பேசினேன். அந்த இடத்தில் பேட்டியை முடித்த பின்பு ஒரு சிலர் கேட்ட கருத்துக்கு நான் அந்த விளக்கத்தை சொன்னேன். எந்த இடத்திலும் திரைத்துறையினரை வருத்தப்படும் அளவிற்கு பேசக் கூடியவர் நான் அல்ல.

ஒருவேளை அப்படி பேசியதாக தகவல்கள் உங்களுக்கு தவறாக கிடைத்திருந்தால், நான் உங்கள் அனைவருக்கும், பெப்சிக்கும், திரைப்பட நடிகர் சங்கத்திற்கும் மற்றும் சம்பந்தப்பட்ட திரிஷாவுக்கும் என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஒருவேளை மனம் புண்படும்படி இருந்திருந்தால் என் சார்பாக வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

"He used to go to Deepa's party; There is no great man'' - Edappadi Palaniswami interview

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம், முன்னாள் அதிமுக நிர்வாகியின் சர்ச்சை பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''அவர் பேசியதற்கு தான் எல்லோரும் எதிர்ப்பு கொடுத்து வருகிறார்கள். அவர் ஒரு பெரிய ஆள் இல்ல. அவர் தீபா கட்சிக்கு போயிட்டு வந்தவர். ஏதோ இரக்கப்பட்டு சேர்த்துக் கொண்டோம். உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அதனால் விட்டு வைத்திருந்தோம். இப்பொழுது கட்சிக்கு எதிராக செயல்பட்ட காரணத்தினால் கட்சி ஒழுங்கு  நடவடிக்கை எடுத்திருக்கிறது'' என்றார்.