Skip to main content

ஜெயலலிதா இறந்த போது, கடைசி நேரத்தில் உங்களை அனுமதிக்காதது ஏன்..? - ஜெ.தீபா விளக்கம்!

Published on 11/06/2020 | Edited on 11/06/2020

 

kj


ஜெயலலிதாவின் சொத்துகள் யாருக்குச் சொந்தம் என்ற கேள்வி மிக நீண்ட காலமாகத் தமிழகத்தில் கேட்கப்படுகின்ற ஒரு கேள்வியாகத் தொடர்ந்து இருந்து வருகின்றது. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அந்தச் சொத்துத் தனக்குத்தான் என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்பு ஜெயலலிதாவின் வீட்டை நினைவில்லமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் ஜெயலலிதாவின் வாரிசுகள் என்று தீபாவை நீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில் இந்த வழக்குத் தொடர்பாகவும், எதிர்கால நடவடிக்கை தொடர்பாகவும் அவரிடம் பல்வேறு கேள்விகளை நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,
 


ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை நினைவில்லமாக மாற்றும் முயற்சியை அரசு மேற்கொண்டு வரும் சூழ்நிலையில், தற்போது நீதிமன்றம் உங்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஜெயலலிதாவுடன் அந்த இல்லத்தில் வாழ்ந்தவர் சசிகலா. இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 

எந்தக் கால கட்டத்தில் அவருடன் இருந்தார் என்பது மிக முக்கியம். ஜெயலலிதா பிறந்தது 1948ஆம் ஆண்டிம். அவர் சின்ன வயதில் இருந்து பாட்டி சந்தியா உடனும், அண்ணன் ஜெயகுமார் அவர்களுடன் தி.நகரில் இல்லத்தில் ஒரே குடும்பமாக சேர்ந்தே வாழ்ந்து வந்தார். அதன் பிறகு வாங்கிய போயஸ் கார்டன். பிறகுதான் அங்கே சென்றார்கள். 1982 முன்பு அவர் தீவிர அரசியலுக்கு வருவதற்கு முன்பு அனைவரும் கூட்டுக் குடும்பமாகவே வசித்து வந்தார்கள். அதன் பிறகு அவருக்கு அரசியல் ரீதியாக உதவியாளர்கள் மாறி மாறி வந்தார்கள். அதற்குப் பிறகு வந்தவர்கள் தான் சசிகலா. எனவே அவர் பிறந்ததில் இருந்து 35 ஆண்டுகள் வரை கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தவர்தான். எனவே தீவிர அரசியலுக்கு வந்த பிறகுதான் சசிகலா உடனான நெருக்கம் அதிகம் ஆனது. 

நீங்கள் போயஸ் கார்டன் வீட்டிற்குச் செல்ல ஆரம்பித்த காலகட்டத்தில் சசிகலாவின் உறவினர்கள் கூட அங்கே இருப்பார்களா?

90-களுக்குப் பிறகுதான் அவர்கள் வர ஆரம்பித்தது. நான் கூறுவது 80களில் நடைபெற்ற சம்பவம். அவர்கள் உறவினர்கள் இல்லாமல் நாங்கள் மட்டும் எத்தனையோ முறை அவர்களைத் தனியாகச் சந்தித்துப் பேசி உள்ளோம். 
 

 

 


ஜெயலலிதா தீவிர அரசியலுக்கு வந்த பிறகு அரசியல் ரீதியாக நிறைய எதிர்ப்புகளைச் சந்தித்த சமயத்தில் சசிகலா உறவினர்கள் தான் அவர்களுக்கு அரசியல் ரீதியாக உதவினார்கள் என்று சசிகலா குடும்ப உறுப்பினர்கள் தற்போது வரை கூறுகிறார்களே?

அவர்கள் அத்தை(ஜெ) உடன் இருந்ததை நான் மறுக்கவில்லையே. சசிகலா உறவினர்கள் எங்களுக்கு அறிமுகம் ஆனதே எங்கள் அத்தை மூலமாகத்தான். முதல் முறையாக அத்தை விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் இருந்த போதுதான் அவர்களை எல்லாம் மருத்துவமனையில் நான் பார்த்தேன். எனக்குத் தெரிந்து இதுதான் அவர்களுடனான எனது முதல் சந்திப்பு. அத்தைதான் அவர்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். 

ஜெயலலிதா இறப்புக்குப் பிறகு கடைசி நேர காரியத்தைச் செய்யக்கூட என்னை அனுமதிக்கவில்லை என்று நீங்கள் ஏற்கனவே கூறியிருந்தீர்கள். ஆனால் உங்கள் சகோதரர் தானே எல்லா காரியங்களையும் செய்தார்? உங்களை மட்டும் புறக்கணிக்க என்ன காரணம் இருக்கிறது?
 

http://onelink.to/nknapp


இந்தக் கேள்விக்கு எனக்கும் கூட விடை தெரியவில்லை. என்ன காரணத்துக்காக புறக்கணித்தார்கள் என்று இன்று வரை எனக்குத் தெரியாது. அத்தையுடன் அவர்கள் 80களின் இறுதியில் இருந்து இருந்தார்கள். அதன்பிறகு 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். அதற்கான காரணம் இன்றைக்கு வரைக்கும் யாருக்கும் தெரியாது. மீண்டும் அவர்கள் வந்தாலும் இந்த வெளியேற்றம் என்பது யாரும் எதிர்பாராமலும், அதிர்ச்சியாகவும் இருந்தது. அதுபோலவே என்னை ஏன் புறக்கணித்தார்கள் என்பதும் மர்மமாகவே இருக்கிறது.

 

 

Next Story

'அதில் நாங்கள் தலையிட முடியாது'- ஜெ.தீபா பேட்டி

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
'We cannot interfere in it' - J. Deepa interview

ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் அதிமுக தொண்டர்களாலும், அதிமுக நிர்வாகிகளாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதேநாளில் சசிகலா 'ஜெயலலிதா இல்லம்' என்ற பெயரில் போயஸ் கார்டனில் புதிய வீடு ஒன்றை கட்டி இன்று குடியேறி உள்ளார். இந்நிலையில் சென்னையில் போயஸ் கார்டெனில் உள்ள வேதா இல்லத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அவர் பேசுகையில், ''ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாள் இன்று. அவர் எனது அத்தை. அவர் குடும்ப வழி உறவு என்பதால் பிறந்தநாள் விழாவிற்காக எங்களால் முடிந்த அளவிற்கு எளிமையான பூஜைக்கு ஏற்பாடு செய்துள்ளோம். எங்கள் முறைப்படி செய்து கொண்டிருக்கிறோம். ஒரு பிறந்தநாள் கூட அவருக்கு நாங்கள் வாழ்த்து சொல்லாமல் இருந்ததே இல்லை. எல்லா பிறந்தநாளுக்கும் அத்தைக்கு நான் வாழ்த்து சொல்வேன். வேதா இல்லத்திற்கு எதிரே 'ஜெயலலிதா இல்லம்' என சசிகலா வீடு கட்டியுள்ளது அவருடைய தனிப்பட்ட விஷயம். அதில் நாங்கள் தலையிட முடியாது.

இந்த ரோட்டில் நாங்கள் தான் இருப்போம் வேறு யாரும் இருக்கக்கூடாது என்று சொல்ல முடியாது. அது அவர்களுடைய இல்லம். அங்கு அவர்கள் வீடு கட்டியுள்ளார்கள். அதில் குடியேறி உள்ளார்கள். என்னுடைய பர்சனலாக என்னுடைய நினைவெல்லாம் இங்கேதான். இந்த இடத்தில் தான் அவருக்கு நான் வாழ்த்து சொல்வேன்'' என்றார்.

Next Story

''அவர் தீபா கட்சிக்கு போயிட்டு வந்தவர்... பெரிய ஆள் இல்ல'' - எடப்பாடி பழனிசாமி

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
"He used to go to Deepa's party; There is no great man'' - Edappadi Palaniswami interview

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகியான ஏ.வி. ராஜு அண்மையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘கூவத்தூர் விவகாரத்தில் நடிகை த்ரிஷாவை தொடர்புப்படுத்திப் பேசியிருந்தார். மேலும் தன்னை அதிமுகவிலிருந்து நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அதிகாரமும் இல்லை. அதிமுகவின் சட்ட விதிகளைத் தெரியாமல் எடப்பாடி பழனிசாமி உள்ளார்’ எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.

கூவத்தூர் விவகாரத்தில் தன்னை தொடர்புப்படுத்தி இழிவாகப் பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜுவிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நடிகை த்ரிஷா, இது தொடர்பாக டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'கவனம் ஈர்ப்பதற்காக எந்த அளவுக்கும் தரம் தாழ்ந்து பேசுபவர்களை பார்ப்பதற்கே அறுவறுப்பாக உள்ளது. அவதூறு பேச்சுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தமது வழக்கறிஞர்கள் தேவையான நடவடிக்கை எடுப்பார்கள்' எனத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அதிமுக நிர்வாகி ஏ.வி. ராஜுவின் பேச்சுக்கு பல்வேறு சினிமா பிரபலங்களும் கண்டங்கள் தெரிவித்து வந்த நிலையில், த்ரிஷா இதை உறுதிப்படுத்தி உள்ளார்.

"He used to go to Deepa's party; There is no great man'' - Edappadi Palaniswami interview

தொடர்ந்து ஏ.வி. ராஜு இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில், ''என்னைப் பற்றி சமூக வலைத்தளங்களில், சில ஊடகங்களில் திரைப்படத் துறையினரை அவதூறாக நான் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நான் பேசியது அரசியல் ரீதியாக மட்டும் தான் பேசினேன். அந்த இடத்தில் பேட்டியை முடித்த பின்பு ஒரு சிலர் கேட்ட கருத்துக்கு நான் அந்த விளக்கத்தை சொன்னேன். எந்த இடத்திலும் திரைத்துறையினரை வருத்தப்படும் அளவிற்கு பேசக் கூடியவர் நான் அல்ல.

ஒருவேளை அப்படி பேசியதாக தகவல்கள் உங்களுக்கு தவறாக கிடைத்திருந்தால், நான் உங்கள் அனைவருக்கும், பெப்சிக்கும், திரைப்பட நடிகர் சங்கத்திற்கும் மற்றும் சம்பந்தப்பட்ட திரிஷாவுக்கும் என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஒருவேளை மனம் புண்படும்படி இருந்திருந்தால் என் சார்பாக வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

"He used to go to Deepa's party; There is no great man'' - Edappadi Palaniswami interview

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம், முன்னாள் அதிமுக நிர்வாகியின் சர்ச்சை பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''அவர் பேசியதற்கு தான் எல்லோரும் எதிர்ப்பு கொடுத்து வருகிறார்கள். அவர் ஒரு பெரிய ஆள் இல்ல. அவர் தீபா கட்சிக்கு போயிட்டு வந்தவர். ஏதோ இரக்கப்பட்டு சேர்த்துக் கொண்டோம். உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அதனால் விட்டு வைத்திருந்தோம். இப்பொழுது கட்சிக்கு எதிராக செயல்பட்ட காரணத்தினால் கட்சி ஒழுங்கு  நடவடிக்கை எடுத்திருக்கிறது'' என்றார்.