Skip to main content

அமைச்சரின் அண்ணனிடம் டீலிங்! குடிபோதையில் எகத்தாளம்! -நடவடிக்கை எடுத்த சிறைத்துறை!

Published on 14/09/2019 | Edited on 14/09/2019

 

“மதுரை மத்திய சிறைச்சாலை ரொம்பவே ஸ்ட்ரிக்டாம். யாரோ முன்னாள் கைதியாம். பேரு முத்துகிருஷ்ணனாம். அவரு ஜாமீன்ல வெளிய வந்து மதுரைல இருக்கிற ஹெரிடேஜ் ஸ்டார் ஹோட்டல் பார்ல பார்ட்டி வச்சாராம். முத்துகிருஷ்ணன் ஜெயில்ல இருக்கும்போதே உதவி ஜெயிலர் முனியாண்டி எல்லா வசதியும் பண்ணிக் கொடுத்தாராம். அந்த நட்புல, முனியாண்டியும், முதுநிலை காவலர்களான மணியும் மூர்த்தியும் அந்தப் பார்ட்டியில் குஷியா கலந்துக்கிட்டாங்களாம். இந்தத் தகவல், மதுரை மத்திய சிறை சூப்பிரண்டு ஊர்மிளாவுக்கு தெரிஞ்சு போச்சாம். நேர்மையான அதிகாரியாச்சே! மூணு பேரையும் சும்மா விடுவாங்களா? சஸ்பென்ட் பண்ணிட்டாங்களாம்.”
 

bar



-சிறைத்துறையின் இந்த நடவடிக்கையை கலாய்க்கும் விதத்தில் நம்மிடம் சொன்ன  ‘சிறை பட்சி’  “உண்மையிலேயே நடந்தது என்னன்னா..?” என்று அந்த விவகாரத்தை விவரித்தது. 

 

madurai central jail


தமிழக அமைச்சர் ஒருவரின் அண்ணன் முன்னிலையில்தான், இரண்டு துறைகள் சம்பந்தப்பட்ட ‘டீலிங்’ அனைத்தும் நடந்துவருகிறது. மகன் குறித்த சொந்தக் கவலை ஒருபுறம் இருந்தாலும், தான் குஷியாக இருப்பதற்கு அந்த அண்ணனுக்கு மதுரைதான் வசதியாக இருக்கிறது. அதனால், அடிக்கடி மதுரைக்கு வருவார்.  அப்படி ஒரு விசிட்டாகத்தான், ஸ்டார் ஹோட்டலான ஹெரிடேஜ் மதுரைக்கு அன்று வந்தார். மதுரை மத்திய சிறை,  தனது வழக்கமான கவனிப்பை, முதல்நிலை தலைமைக் காவலரான நாகேந்திரபாண்டியன் மூலம் அவருக்குச் செய்தது. அதற்காகவே ஹெரிடேஜ் ஹோட்டலுக்குப் போனார் நாகேந்திரபாண்டியன். அப்போதுதான், எதிர்பாராதவிதமாக உதவி ஜெயிலர் முனியாண்டியையும், முதுநிலை காவலர்கள் மணியையும் மூர்த்தியையும் ஹெரிடேஜ் பாரில் சந்திக்க நேர்ந்திருக்கிறது.  


 

மத்திய சிறையில் பணி என்றாலும்,  ‘லம்ப்’ ஆக வருவாய் ஈட்டுவதற்கு, வளமான இன்னொரு தொழிலை சிலர் ‘சைடு பிசினஸ்’ ஆகப் பார்த்து வருகிறார்கள்.  அந்த விஷயமாக அமைச்சரின் அண்ணனைச் சந்தித்து ‘டீல்’ நடத்தவே நாங்களும் வந்திருக்கிறோம் என்று அந்தச் சந்திப்பின்போது, நாகேந்திரபாண்டியனிடம், உதவி ஜெயிலர் முனியாண்டி தரப்பு போதையில் தெனாவட்டாகப் பேசியிருக்கிறது.  “நான் மந்திரியின் அண்ணனைப் பார்க்க வந்தேன்..” என்று நாகேந்திரபாண்டியன் அழுத்தமாகச் சொல்ல.. “நாங்க மட்டும் என்னவாம்? அந்த நொண்ணனைப் பார்க்கத்தான் வந்தோம். நாங்களும் மந்திரி வரைக்கும் பணம் கொடுத்துத்தான் எல்லாமும் பண்ணுறோம்.  எங்களுக்கு மந்திரியையும் தெரியும். அவரோட அண்ணனையும் தெரியும்.” என்று உச்சஸ்தாயியில் உளறியிருக்கின்றனர்.  

 

police



ஸ்டார் ஹோட்டல் பாரில், பலர் முன்னிலையில் மந்திரியின் பெயர் நாறிவிட,  இந்த விவகாரம், சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. ஆபாஷ்குமார் வரை போனது.  அதன்பிறகுதான், மற்ற விஷயங்களை வசதியாக மறைத்துவிட்டு,  ஜாமினில் வெளிவந்த கைதியுடன் மது அருந்தினார்கள் என்பது பெரிதுபடுத்தப்பட்டு, மூவரையும் சஸ்பென்ட் செய்து உத்தரவு பிறப்பித்துவிட்டார் மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா. 

 

police



இது சம்பந்தமாக அந்தத் தொழில் நடத்தும் ஒருவரிடம் பேசினோம்.  “அமைச்சர் அண்ணனுடன் சந்திப்பா?” என்று கேட்டுவிட்டு,   “முன்பு இந்தத் தொழிலில் கொடி கட்டிப்பறந்த ஒருவர் ஜெயலலிதாவிடமே நேரில் பேசும் அளவுக்கு செல்வாக்காக இருந்தார். அப்புறம் இன்னொருவரிடமிருந்தும்  அந்தத் தொழில் பறிக்கப்பட்டது. தற்போது, தமிழகம் முழுவதும் அந்தத் தொழிலில்  உச்சத்தில் இருப்பவர்கள் புதுக்கோட்டை மற்றும் திண்டுக்கல்லைச் சேர்ந்த இருவர்தான்.  திண்டுக்கல்காரரின்  அக்கா மகன்கள் இருவரைக்  ‘கம்பெனி’ என்று அழைக்கிறார்கள்.  இவர்களிடம் கப்பம் கட்டிவிட்டால் போதும். அந்தந்த மாவட்டங்களில் வருவாய்த்துறையிலிருந்து காவல்துறை வரை எந்தத் தொந்தரவும் வராமல் பார்த்துக்கொள்வார்கள்.   ஃபைல் க்ளியர் பண்ணுவது போன்ற  தொடக்க வேலைகளை  அமைச்சரின் அண்ணன் பார்த்துக்கொள்கிறார். அவரிடம் டீலிங் நடத்துவது இங்கே பலருக்கும் பிடித்தமானது. விரும்பியே அள்ளிக்கொடுப்பார்கள். அவருடைய கைக்குப் பணம் போய்விட்டால் கொடுத்தவர்களின் தேவை பூர்த்தியாகிவிடும். அப்படி ஒரு நல்ல பெயர் அவருக்கு உண்டு.” என்றனர்.  


 

நாம் அமைச்சரின் அண்ணனைத் தொடர்பு கொண்டோம். “சொல்லுங்க..” என்றவர்,  ‘மதுரை மத்திய சிறைச்சாலையில் மூவர் சஸ்பென்ட் ஆனது குறித்து..’ என்று சொல்ல ஆரம்பித்ததுமே வேகமாக லைனைத் துண்டித்தார். அடுத்து நம் லைனுக்கு வரவேயில்லை. 
 

ஆளும் கட்சியினர் ஆசியுடன் தமிழகமே சுரண்டப்படும்போது, மத்திய சிறையில் மூவர் பணியிடை நீக்கம் என்பதை,   வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாகவே கருத வேண்டியிருக்கிறது. 


 

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.