Skip to main content

"அதிமுகவை உடைக்க அங்கே என்ன இருக்கிறது; அம்மா இல்லாத பிள்ளைகளுக்கு டாடி தான் எல்லாம்..." - கான்ஸ்டைன் ரவீந்திரன்

Published on 09/11/2022 | Edited on 09/11/2022

 

 

சத

 

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, பன்னீர் செல்வம்  தலைமையில் இரண்டு அணிகள் செயல்பட்டு வரும் நிலையில் உண்மையான அதிமுக யார் என்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்னும் சில நாட்களில் விசாரணைக்கு வர இருக்கின்ற இந்த வழக்கில் எப்போது தீர்ப்பு வழங்கப்படும் என்று இரண்டு தரப்பினருமே ஆவலுடன் காத்துள்ளனர். இந்நிலையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய எடப்பாடி பழனிசாமி அதிமுகவை உடைக்க திமுக சதி செய்கிறது என்று பேசியுள்ளார். இதுதொடர்பாக திமுக பிரமுகர் கான்ஸ்டைன் ரவீந்திரன் அவர்களிடம் கேள்விகளை நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில் வருமாறு,

 

திமுகவுக்கு எப்போதும் அதிமுக நினைப்பாகவே இருக்கிறது. அதிமுகவை உடைக்க வேண்டும் என்று முழு மூச்சில் திமுக செயல்படுகிறது. அது ஒருபோதும் நடக்காது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 

 

அவரைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. அவருடன் இருந்த டிடிவி தினகரனை யார் வெளியே அனுப்பியது. 2017ல் அவருடன் இருந்த சசிகலாவை யார் துரத்திவிட்டது. எங்கள் சின்னம்மா என்று மணிக்கொரு முறை சொன்ன எடப்பாடி அவரை ஏன் வெளியே தள்ளினார். நாங்களா அவரை அதிமுகவிலிருந்து நீக்கினோம். அதிமுகவை உடைக்கிறார்கள் என்று திமுகவை அவர் ஏன் கை காட்டுகிறர். இதில் ஏதாவது லாஜிக் இருக்கிறதா? கட்சியைச் சீரழித்தது அவர் மட்டும்தான். இல்லை என்றால் ஏன் அதிமுகவை நான்காக வைத்திருக்கப் போகிறார். இவருடைய எஜமானர் நினைப்பதை அவர் செய்கிறார். இதற்குத்தான் ராஜேந்திர பாலாஜி அன்றே சொன்னார். மோடி எங்கள் டாடி என்று, அப்புறம் அம்மா இல்லாத பிள்ளைகளை அப்பாதானே பார்த்துக்கொள்ள வேண்டும். அதான் பார்த்துக் கொள்கிறார்கள். 

 

ஆனால் எடப்பாடி பழனிசாமி நாமக்கல் பொதுக்கூட்டத்தில் பேசும்போது திமுகவில் உள்கட்சி பூசல்கள் அதிகம் இருக்கிறது. திமுக விரைவில் சுக்குநூறாக உடையும் என்று ஆரூடம் கூறுகிறார். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

 

எங்கள் தலைவர் சொன்னதாக எடப்பாடி பேசுவது முற்றிலும் தவறு. தலைவர் சொன்னது ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறோம்.  மிகச் சிறப்பாக ஆட்சியைக் கொண்டு சென்றுகொண்டிருக்கிறோம். அப்படி இருக்கையில் சிறு சிறு பிரச்சனைகளைக் கட்சியினர் உண்டாக்காமல் இருக்க வேண்டும் என்ற அறிவுரையை வழங்கினார். இதில் எங்கே உட்கட்சி பிரச்சனை வந்தது என்று தெரியவில்லை. ஆட்சி அதிகாரத்தைக் குறை சொல்ல முடியாதவர்கள் நாம் பேசுவதைக் குறை சொல்கிறார்கள். எனவே அதற்கு வாய்ப்பு கொடுக்காதீர்கள் என்று கட்சியினரிடம் முதல்வர் அறிவுரை வழங்கினார். 

இதைத்தான் முதல்வர் கூறினார். வேறு எந்தப் பிரச்சனை பற்றியும் அவர் கூறவில்லை. இவர்களைப் போல், ஒருவர் இணைப்புக்கு வாய்ப்பே இல்லை என்று கூறுகிறார். மற்றொருவர் இணைந்தே தீருவோம் என்று கூறுகிறார். இவர்கள்தான் ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்கிறார்கள். இல்லாத பிரச்சனைகளை அடுத்த கட்சியில் இருப்பதாகக் கூறும் இவர்கள், தங்கள் கட்சி தெருவில் கிடப்பதைப் பற்றி எதையுமே பேசுவதில்லை. தங்களது பிரச்சனைகளைத் தீர்க்க எடப்பாடி முயன்றால் நன்றாக இருக்கும். அதை விட்டுவிட்டு அடுத்த கட்சியில் மூக்கை நுழைக்க வேண்டிய அவசியமில்லை. 

 

உங்களுக்கு எதிராகக் கடுமையான வார்த்தையைப் பயன்படுத்தி எடப்பாடியையும், பன்னீர் செல்வத்தையும் உங்களின் ராஜகுரு திட்டினார். அந்த வார்த்தையைக் கூற எனக்கு மனம் வரவில்லை. அதற்காகக் கோபம் பொங்கி வந்து அவருக்குக் கண்டனம் தெரிவித்தீர்களா அல்லது வழக்கு தொடர்ந்தீர்களா? அப்படி எதுவுமே இல்லையே. அப்படி எதிர்த்து குரல் கொடுத்தால் அப்புறம் அடுத்த நாள் அவர்கள் எந்த இடத்தில் இருப்பார்கள் என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அதனால் அவர்களுக்குக் காது கேட்டாலும் கேட்காத மாதிரி பொம்மை போல் இருப்பார்கள். இவர்களுக்கு எங்களைப் பற்றிப் பேச எந்தத் தகுதியும் இல்லை.

 

 

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.