Skip to main content

"29 வருஷமா கைக்காச போட்டுத்தான் கட்சி நடத்துறோம்; தடுத்து பார்த்தேன் கட்சிகாரங்க அவரை விடமாட்டேங்கிறாங்க..." - வைகோ

Published on 22/10/2022 | Edited on 22/10/2022

 

l;'

 

தமிழக அரசியலை தன் பேச்சால் இன்றளவும் கட்டிப் போட்டிருக்கும் வைகோ தன்னுடைய இளம் வயது முதலே அண்ணாவின் பேச்சால் ஈர்க்கப்பட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து பல ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். பேச்சு, நடை, உடை என்று எல்லாவற்றிலுமே தனித்துவமாய் இருந்து வரும் அவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார். இந்நிலையில் அவர் நம்முடைய நக்கீரன் சரித்திரம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இந்த கூட்டணி தொடர்பாக தன்னுடைய கருத்து பற்றிப் பேசினார். 

 

இதுதொடர்பாக அவர் பேசியதாவது, " அரசியல் ரீதியா சரியான முடிவு தான் எடுத்திருக்கிறோம். திமுகவோட அலையன்ஸ் வச்சது தான் சரியான முடிவு. நாங்க அதிமுகவோட, பாஜகவோட, காங்கிரஸோட போக முடியாது. திமுக நான் இருந்த கட்சி. நான் 29 வருசம் பாடுபட்ட கட்சி. அதுல பழைய ஆளுங்க எல்லாரும் இன்னிக்கும் என் மேல பாசமா இருக்காங்க.. இப்ப உள்ள 25,30 வயது பையனுங்களுக்கு என்னைத் தெரியாது. 60 வயசுக்கு மேல உள்ளவங்க எல்லாருக்கும் இப்பவும் என் மேல பற்றுதல் இருக்கு. தலைவரும் நல்லா மதிக்கிறாரு. பிரியமா இருக்காரு. நான் அதிகமா ஆசைப்படல. கட்சிய நடத்தி கொண்டு போகணும். எங்க கிட்ட பொருளாதார பலம் இல்ல. எங்கயும் போய் நிதி கொடுன்னு கேட்கக்கூடிய எடத்துல எங்காளுங்க இல்ல. கைக்காச செலவழிச்சி தான் 29 வருசம் என் கூட நடந்திருக்காங்க. பத்திரிக்கைல ஒருபக்க விளம்பரம் கொடுக்கனும்னா காசு வேணும். அதுக்கு கூட வழியில்ல. இது தான் இன்னிக்கு எனக்கு இருக்கக் கூடிய பொருளாதார பலகீனம். ஆனா தொண்டர்கள் உறுதியா இருக்காங்க. நாம எடுத்த முடிவு சரியான முடிவுதான்னு.

 


துரை.வைகோ அரசியலுக்கு வராருங்கிறதே எனக்கு தெரியாது. கரோனாவால ஒரு வருசம் உடல் நலம் சரி இல்லாம நான் எங்கயும் மூவ் பண்ண முடியாம இருந்தப்போ அவர கல்யாண, துக்க வீடுகளுக்கும் போற வழியில கொடியேத்துறத்துக்கும் எங்க மாவட்ட செயலாளர்கள் அழைச்சிட்டுப் போயிருக்காங்க. அவர் இந்த மாதிரி ஈடுபாடோட போறாருங்கிறது எனக்கு தெரியாது. நான் அதை என்கரேஜ் பண்ணவும் இல்ல. என்னோட கஷ்டங்கள் என்னோட போகட்டும். அரசியல் அவ்வளவு கஷ்டங்கிறதால அவர் வர்றத நான் வரவேற்கல. கட்சிக்காரங்களா விருப்ப பட்டு அவர் வந்தா எங்களுக்கு உற்சாகமா இருக்கும்னு வற்புறுத்தி அழைச்சிட்டு போறாங்க. நான் தடுத்துப் பார்த்தேன். தடுக்க முடியல. அதான் நடக்குது" என்றார்.

 

 

Next Story

பாஜகவுக்குத் தீயாய் வேலை பார்க்கும் வைகோ சகோதரி மகன்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vaiko, who works as an opposite to mdmk, is his sister's son

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்காக கிராமப்புறங்களில் தேர்தல் வேலை பார்த்துக்கொண்டிருந்தார் ஒருவர். அவரை நம்மிடம் சுட்டிக்காட்டிப் பேசிய நண்பர் “இவரோட தாத்தா மடத்துப்பட்டி கோபால் நாயக்கர் அந்தக் காலத்து காங்கிரஸ்காரர். பெருந்தலைவர் காமராஜரிடம் நெருக்கமாக இருந்தவர். அவருடைய பேரன்தான் இந்தக் கார்த்திகேயன். மதிமுகவுல இருந்தவர் 2019-ல் அதிமுகவுல சேர்ந்தார். இப்ப தேசிய நீரோட்டத்துல கலந்துட்டேன்னு பாஜகவுல சேர்ந்திருக்கார். மனுஷன் தீயா வேலை பார்க்கிறாரு. எதுக்கு கட்சி மாறிக்கிட்டே இருக்கீங்கன்னு கேட்டதுக்கு, கொள்கை பிடிக்காமத்தான் மதிமுகவுல இருந்து வெளிய வந்தேன். அப்புறம் அதிமுகவுல கடம்பூர் ராஜு கிட்ட என்னைப் பத்தி தப்பா சொல்லிட்டாங்க. அதனால அதிமுகவுல நீடிக்க முடியலன்னு சொல்லுறாரு. என்ன கொள்கையோ?” என்று சலித்துக்கொண்டார்.

‘தேர்தல் பணி எப்படிப் போகிறது?’ என்று கார்த்திகேயனிடம் கேட்டோம். “என்னோட நெருங்கிய வட்டத்துல.. சொந்தபந்தங்கள் கிட்ட தாமரைக்கு ஆதரவு திரட்டுறேன். இங்கே கிராமங்கள்ல என்னைத் தெரிஞ்சவங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்கள எல்லாம் பார்க்கிறேன். பாஜக வேட்பாளர்கள் வெற்றிக்கு அணில் மாதிரி உதவிக்கிட்டிருக்கேன். விருதுநகர், தென்காசின்னு ரெண்டு பார்லிமென்ட் தொகுதிக்கும் நான் வேலை பார்க்கிறேன்.” என்றார்.

பாஜக தலைமை கார்த்திகேயனைக் கட்சிக்குள் இழுத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ-வுடைய சகோதரி 
சரோஜாவின் மகன் என்ற அடையாளம் இவருக்கு உண்டு.  

Next Story

“பா.ஜ.கவின் தேர்தல் வாக்குறுதி தமிழகத்தில் எடுபடாது” - வைகோ

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
"BJP's election ,manifesto will not be taken in Tamil Nadu says Vaiko

ஈரோடு பெரியார் நகரில் உள்ள மறைந்த கணேசமூர்த்தி எம்.பி. வீட்டிற்கு  ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரது மனைவி ரேணுகா தேவி ஆகியோர் சென்று கணேசமூர்த்தி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் கணேஷ்மூர்த்தியின் மகன், மகளுக்கு வைகோ மற்றும் அவரது மனைவி இருவரும் ஆறுதல் கூறினர்.

பின்னர் வீட்டை விட்டு வெளியே வந்த வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும் எனப் பா.ஜ.க தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்து, புதிதாக (டெஸ்ட்)சோதனை செய்து பார்க்கின்றனர். இது வெற்றி பெறாது.

பா.ஜ.க.வின் தேர்தல் வாக்குறுதி தமிழகத்தில் எடுபாடாது. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திற்கும் செல்லாத அளவிற்கு தமிழகத்திற்கு 9 முறை பிரதமர் மோடி வந்துள்ளார். கொரோனா, வெள்ளம் வந்தபோது எட்டிக் கூட பார்க்காத பிரதமர்  எப்படியாவது பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற வேண்டும் எனத் தமிழகத்திற்கு 9 முறை வந்துள்ளார். அது கனவாகவே போகும்.

நாற்பதிலும் இந்தியா கூட்டணி வெற்றிப் பெறும் என்றளவிற்கான தேர்தல் களம் உள்ளது. தேர்தலுக்காக மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வருவதால் எந்த வித்தியாசமும் ஏற்படாது. பா.ஜ.க மாநில தலைவர்  வாக்கு சேகரிப்பு நேரம் முடிந்த பிறகும் பிரச்சாரம் செய்து வருகிறார்‌. இதற்கு தேர்தல் ஆணையம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.