Skip to main content

ஒரு காஃபிக்குள் இத்தனை கதைகளா...!

Published on 01/10/2018 | Edited on 01/10/2018

பரிணாம வளர்ச்சியில் வேதியல் மூலக்கூறுகளைக்கொண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய விஷயத்தை விலங்குகள்  மீது செலுத்தி அதற்கு ஒன்றும் ஆகவில்லை என்றால் அதை மனிதனும் பயன்படுத்தலாம் என்று சட்டமும் அறிவியலும் சொல்லுகிறது. ஆனால், இந்தச் சட்டமும் அறிவியலும் மனிதன் மூளைக்கு எப்படி தட்டுப்பட்டது என்ற கேள்வி எழுமாயின் அதன் விடையும் இதிலே இருக்கிறது. எப்படி என்றால் மனித இனம் முதல் முதலில் உண்ட உணவு என்பது அவர்கள் வாழ்ந்த காட்டுப் பகுதியில் விலங்குகளும் பறவைகளும் எதைத் தின்றதோ அதைத்தான் அவர்களும் தின்றனர். இப்படி மெய்யுணர்வில் உணர்ந்து பரிசோதித்த மெய்யறிவியலைத்தான் இன்றைய நவீன உலகம் ஞான அறிவியல் என்றும் சட்டம் என்றும் சொல்லுகிறது. சரி இவ்வளவு வியாக்கியானம் எதற்கு என்றால் இன்று, மனித இனத்தின் மிகமுக்கியமான நாள். அதுமட்டுமின்றி இதற்கு பிறகு பார்க்கப்போகும் உலக காஃபி தினத்தை பற்றிய வரலாற்று உண்மையும் கதையும் இதனோடு சம்பந்தம் பட்டதாக இருக்கும். அதற்குதான்.

 

cc

 

இன்று உலக காஃபி தினம். இந்த காஃபிக்கும் நம் மனித இனத்திற்கும் 11 நூற்றாண்டுகால உறவு இருந்து வருகிறது, இது இனியும் இருக்கும் என்பதுதான் உண்மை. சரி இந்த காஃபியை யார், எங்கு, எப்படி, கண்டுபிடித்தார்கள். இது எப்படி இன்று உலகம் முழுக்க வலம்வருகிறது. இதன் பிறப்பிடம் எது, பிழைப்பிடம் எது என்பதைப்பற்றி தெரிந்துகொள்வோம்.

 

 

காஃபி, கண்டறிந்ததில் சில முகங்கள் இருக்கிறது. ஒரு காலகட்டம்வரையில், ஒன்பதாம் நூற்றாண்டில் எதியோப்பியாவில் ஆடு மேய்த்துக்கொண்டு இருந்த கால்டி என்பவரின் ஆடுகள் அங்கு செந்நிறத்தில் இருந்த ஒரு பழத்தை தின்றதும், அது உற்சாகத்துடன் ஓடுவதைக்கண்டு அவரும் அந்தப் பழத்தை சுவைத்துப்பார்த்து அதில் ஏதோ ஒரு வித்தியாசமும் புத்துணர்ச்சியும் இருப்பதைக்கண்டு அங்கு இருந்த ஒரு துறவியிடம் அதைத்தர, அதை அவர் தீயிலிட்டு சுட அங்கு இருந்தவர்களுக்கு மயக்கநிலை ஏற்பட்டதாகவும், பின் அந்த பழத்தின் சூட்டை குறைக்க தண்ணீரில் போட்டதாகவும் பின் அந்தத் தண்ணீர் குடித்ததில் இருந்துதான் உலகத்தின் முதல் காஃபி பிறந்ததாக ஒரு கதை இருக்கிறது. 

 

 

மொரோக்கோ நாட்டை சேர்ந்த அபு ஹல் ஹசன் என்பவர் எத்தியோப்பியாவிற்கு சென்றிருந்தபோது, அங்கு இருக்கும் பறவைகள் மற்றப் பறவைகளைவிடவும் சற்று உற்சாகத்துடன் இருப்பதைக்கண்டு அவரும் அந்தப் பறவைகள் சாப்பிடும் பழத்தை தேடி சாப்பிட்டபோது அவருக்குள்ளும் அந்த உற்சாகத்தை கண்டுள்ளார். இன்னொரு பக்கம் பார்க்கும்போது, ஷேக் அபுல் ஹாசன் என்பவரின் சீடர் ஒமர் என்பவர் நாடு கடத்தப்பட்டபோது அங்கு பசியில் இருந்த அவர், சாப்பிட எதுவும் கிடைக்காமல் அருகில் புதரினுள் இருந்த ஒரு பழத்தை எடுத்து திறன்றதாகவும் அது கசப்பாக இருக்க அதை தீயிலிட்டு சுட்டு, பின் அதை நீரில் போட்டு அந்த நீரை குடித்ததாகவும் ஒரு கதை இருக்கிறது. அப்த அல் கதிர் என்பவர் எழுதியுள்ள குறிப்புகளை சான்றாகக் கொண்டு பெரும்பாலானோர் ஓமரின் கதைதான் உண்மை என்று கருதுகிறார்கள்.

 

cc

 

ஏமன் நாட்டில் காஃபி கடவுள் வழிபாட்டில் முக்கியமானதாக இருந்து இருக்கிறது. காரணம், சூஃபிக்கள் இரவு நேரங்களில் கடவுளை வணங்கும்போது தூக்கம் வராமல் இருக்க காஃபியை உபயோகித்து இருக்கிறார்கள். அதன் பின் சற்று காலத்திற்குள் மெக்காவில் காஃபிக்கு தடை விதிக்கப்பட்டது. தடைக்கான காரணமும் அதன் உற்சாகம்தான் என்று சொல்லப்பட்டுள்ளது.

 

இது இந்தியாவிற்கு வந்தத்தின் கதைதான் மிக சுவாரசியமானது. 17-ஆம் நூற்றாண்டில் கர்நாடக மாநிலத்தில் இருந்து பாபா பூடன் எனும் சூஃபி துறவி ஹஜ் பயணத்தை முடித்துவிட்டு ஏமன் வழியாக இந்தியா திரும்பும்போது, அங்கு காஃபியை சுவைத்துப் பார்த்திருக்கிறார். அது உற்சாகத்தை அளித்ததைத் தொடர்ந்து அதனை இந்தியாவிற்கு கொண்டுவர முயன்று இருக்கிறார். ஆனால், அவர்கள் அதைத்தர மறுத்து இருக்கிறார்கள். பின் யாருக்கும் தெரியாமல் சில விதைகளை மறைத்து இந்தியாவிற்கு கொண்டுவந்து தன் மாநிலத்தில் உள்ள சிக்மகளூரில் விதைத்து இருக்கிறார். அதுதான் இன்று இந்தியா முழுக்க பரவியுள்ளது. இப்படித்தான் காஃபி மனித இனத்திற்கும், இந்தியாவிற்கும் வந்துள்ளது.   

 

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

“மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேகதாது திட்டம் அமல்” - டி.கே.சிவக்குமார் திட்டவட்டம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
D.K.Sivakumar said Meghadatu plan will be implemented when the Congress government is established in central

தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் இடையே காவிரி நீர் தொடர்பாகப் பல ஆண்டு காலமாகப் பிரச்சனை இருந்து வருகிறது. அதே வேளையில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால், காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டினால், தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்ற அடிப்படையில் அணை கட்டக்கூடாது என்று தமிழக அரசு திட்டவட்டமாகக் கூறி வருகிறது.

இதற்கிடையே, விரைவில் மேகதாது அணை கட்டப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். கர்நாடகா மாநிலத்தின் சட்டசபைக் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் சித்தராமையா 2024-2025 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி கர்நாடகா சட்டசபையில் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், “தேவையான அனுமதிகளை பெற்று விரைவில் மேகதாது அணை கட்டப்படும். அங்கு அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. இதற்கான ஒரு தனி மண்டல குழுவும், இரண்டு துணை மண்டல குழுவும் அமைக்கப்படவுள்ளன. தேவையான அனுமதிகளை கொடுத்தால் விரைவில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும். பெங்களூர் நகரில் குடிநீர் பிரச்சனையை தீர்ப்போம். மேகதாது அணை விரைவில் கட்டப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா பேசியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், மேகதாது அணை கட்டப்படும் என்று கர்நாடகா மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், ஜனதா தளம்(எஸ்) கட்சி போட்டியிடவுள்ளது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்தத் தேர்தலையொட்டி, கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் நேற்று (17-04-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது அவர், “நாங்கள் எதிர்கட்சியாக இருந்த போது, மேகதாது திட்டத்திற்காக போராட்டம் நடத்தினோம். அதற்கு பணிந்து அப்போது ஆட்சியில் இருந்த பா.ஜ.க ரூ.1,000 கோடி ஒதுக்கியது. பெங்களூரில் குடிநீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மழை பெய்யாததால் ஆழ்துளை கிணறுகள் வறண்டுவிட்டன. மேகதாது திட்டத்தை அமல்படுத்தினால்தான் பெங்களூருக்கு குடிநீர் வழங்க முடியும். அதனால், மத்தியில் காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் மேகதாது திட்டத்தை அமல்படுத்துவோம். இந்தத் திட்டத்தால் தமிழ்நாட்டிற்கு பயன் கிடைக்கும். இந்தத் திட்டத்திற்கு உச்சநீதிமன்றமும் ஆதரவாக கருத்து கூறியுள்ளது” என்று கூறினார்.