Skip to main content

எம் பொண்ண பத்தி ஏன்டா அப்படி போட்டேன்னு கேட்டதுக்கு... தாயின் கண்ணீர்!

Published on 21/06/2019 | Edited on 21/06/2019

கடலூர் மாவட்டம் குறவன் குப்பத்தை சேர்ந்த நீலகண்டன் - தெய்வானை தம்பதியரின் மகள் ராதிகா(23). அவரது மாமன் மகன் விக்னேஷ். இருவர் வீட்டிலுமே இவர்களது காதலுக்கு எதிர்ப்பில்லாத நிலையில், இருவரும் திடீரென அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டது இந்த வட்டாரத்தையே அதிர வைத்திருக்கிறது. ஒரு காதல் தான், இந்தக் காதல் ஜோடியின் தற்கொலைக்குக் காரணமென்றால் நம்பமுடிகிறதா? ராதிகாவின் வீட் டருகே வசித்து வந்தவர் பிரேம் குமார். பிரேம்குமார் (23) வடலூர் இந்திரா நகரில் உள்ள வினோதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மைனர் பெண் ணைக் காதலித்து வந்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன் வினோதாவுடன் தலை மறைவாகிவிட்டார் பிரேம். பெண்ணைக் காணாமல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த பெண்ணின் பெற்றோர் பல இடங்களில் தேடினர். அப்போது பெண்ணின் ஊரைச் சேர்ந்த ராதிகாவின் மாமன் மகன் விக்னேஷ், அந்தப் பெற்றோரின் தவிப்பைப் பார்த்துவிட்டு தனது அத்தை வீட்டினருகில்தான் பிரேம் குமாரின் வீடு உள்ளது என அடை யாளம் காட்டியுள்ளார். விக்னேஷின் இந்தச் செயல்தான் ராதிகாவுக்கு எமனாக மாறியுள்ளது.

 

lover



விக்னேஷின் தந்தை சேகரிடம் பேசினோம், "பிரேம்குமார் மைனர் பொண்ணோட ஓடினதால, ரெண்டு பேரையும் கண்டுபிடிக்க சொல்லி போலீஸ்ல புகார் கொடுத்துட்டுத் பெத்தவங்க தேடினாங்க. அப்ப என் பையன் விக்னேஷ் அந்த பையனோட வீட்டைக் காட்டி னான். அதுல என் பையன்மேல அந்த பிரேம்குமாருக்கு கோபம் இருந்திருக்கு. வஞ்சம் வெச்சு பேஸ்புக்குல என் தங்கச்சி பொண்ண பத்தி தப்புத் தப்பா போட்டி ருக்கான். விவரம் தெரிஞ்சு மன சொடிஞ்சு போன என் தங்கச்சி பொண்ணு தூக்கு மாட்டிக்கிச்சு. யாரோ ஒரு குடும்பத்துக்கு உதவி செய் யப்போய், எங்க குடும்பத்துல இரண்டு இளம் குருத்து களைப் பறிகொடுத்துட் டோமய்யா'' என கதறுகிறார்.

 

parents



ராதிகாவின் தாயார் தெய்வானையோ, ""எம் பொண்ண பத்தி ஏன்டா அப்படி போட்டேன்னு கேட்டதுக்கு, "உன் அண்ணன் பையன் என் வீட்ட காட்டிக் கொடுத்தான்ல, அதான் அப்படி போட்டேன்'னு சொன்னதோட கும்பலுக்கே அந்தப் பதிவையெல்லாம் காட்டி, எம் புருசனையும் அடிச்சாங்க. என் பொண்ணு இனிமே உசுரோட வருவாளா?'' என அழுது புரள்கிறார்.

  lovers



தன்னைப் பழிவாங்குவதற்காக தான் காதலித்த அத்தை மகளை அசிங்கப்படுத்திட்டாங்களே..… அத்தை மகள் அவமானப்படவும், சாகவும் தான் காரணமாகி விட்டோமே… என மனமுடைந்த நிலையில் வண்டியை எடுத்துக்கொண்டு சென்ற விக்னேஷ், அருகிலுள்ள வீணங்கேணி கிராமத்திலிருந்த மரத்தில் தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்துகொண்ட ராதிகா, விக்னேஷ் இருவரும் ஒரு சமூகம், தற்கொலைக்கு காரணமான பிரேம்குமார் தாழ்த்தப்பட்ட சமூகம் என்பதால் வழக்கம்போல மாவட்டத்தில் பதற்றம் பற்றிக்கொண்டது. அரசியல் அறிக்கைகளும் வெளியாயின. அன்று இரவே மந்தாரக்குப்பம் காவல் நிலையத்தில் குவிந்த உறவினர்களும், பா.ம.க.வினரும் தற்கொலைகளுக்கு காரணமான குற்றவாளிகளை கைதுசெய்யக் கோரி முற்றுகையிட்டனர்.


பின்னர் விருத்தாசலம்-கடலூர் சாலையில் மறியல் செய்தனர். நள்ளிரவு 12 மணி வரை மறியல் தொடர்ந்ததால் அங்கு வந்த காவல் கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவின்பேரில் அதிவிரைவுப் படையினர் லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். இந்நிலையில் மாவட்டக் கண்காணிப்பாளர் சரவணன் முன்னிலையில் பிரேம்குமார் சரணடைந்தார். அவரது தந்தை பன்னீர்செல்வத்தையும், சித்தப்பா மகன் வல்லரசுவையும் மந்தாரக்குப்பம் காவல்துறையினர் கைதுசெய்தனர். கடந்த மே மாதம் 8-ஆம் தேதி காதல் விவகாரத்தில் கருவேப்பிலங்குறிச்சி கல்லூரி மாணவி திலகவதியின் கொலை கலவரத்தை ஏற்படுத்தியது. சரியாக ஒருமாதம் கடந்த நிலையில் ஜூன் 10-ஆம் தேதி ராதிகாவும் விக்னேஷும், தற்கொலை செய்துகொண்டனர். இரு சம்பவங்களிலும் பாதிக்கப்பட்டது ஒரு சமூகமாக வும் பாதிப்புக்கு காரணமானது ஒரு சமூகமாகவும் இருப்பதால், சமூக இணக்கத்தில் பாதிப்பு வருமோ என்ற அச்சம் அப் பகுதியில் எழுந்துள்ளது.

 

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.