Skip to main content

“சின்னம்மா இல்லை... என் அம்மா.. எனக் கத்தினாரே அப்போது தெரியவில்லையா” - சி.ஆர்.சரஸ்வதி கடும் தாக்கு

Published on 08/02/2021 | Edited on 08/02/2021

 

CR.Saraswathi about sasikala reaching tamilnadu

 

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா, அவரின் தண்டனை காலத்தை நிறைவுசெய்த நிலையில், இன்று காலை சென்னை திரும்ப பெங்களூருவிலிருந்து கிளம்பினார். காலை 7.30 மணி அளவில் அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் பயணத்தைத் தொடங்கிய அவர், 10.30 மணி அளவில் தமிழக எல்லையை வந்தடைந்தார்.

 

தமிழக எல்லைக்குள் அதிமுக கொடியுடன் வந்தால், சசிகலா நடவடிக்கை எடுப்பது உறுதி எனக் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல், தமிழக கர்நாடக எல்லையில் காரில் உள்ள அதிமுக கொடியை அகற்ற அவகாசம் கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், கிருஷ்ணகிரி பகுதியில் சசிகலா, அதிமுக நிர்வாகி ஒருவர் காரில் மாறி அந்த காரில் சென்னை நோக்கிவந்தார். இதனிடையே அமமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி நக்கீரன் இணையத்திற்கு அளித்த பேட்டி. 

 

சசிகலா தமிழகம் வரும்போது அவர் அதிமுகவின் கொடியைப் பயன்படுத்தக்கூடாது எனத் தமிழகக் காவல்துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
 

அவருக்கு அனைத்து உரிமையும் உள்ளது. இதனைச் சட்டப்படி சந்திப்போம். ஒரு கட்சியின் சாதாரண தொண்டன், கட்சியின் கொடியையும் அக்கட்சியின் தலைவர் படத்தையும் வைத்துக்கொள்ளக் கூடாது எனத் தேர்தல் ஆணையம் எங்காவது சொல்லியிருக்கிறதா. அதிமுகவின் சட்டப்படி அவர் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அதிமுகவில் பொதுச்செயலாளர் என்பதுதான் முறையான பதவி. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்பதெல்லாம் இவர்களாக ஏற்படுத்திக்கொண்டது. சட்டத்தில் இதுபோன்ற எந்தப் பதவியும் இல்லை. 2016 டிசம்பர் 29ஆம் தேதி ஸ்ரீவாரி மண்டபத்தில் ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ். மற்றும் தற்போது பேசிவரும் சி.வி.சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்ட அனைவரும் கையெழுத்திட்டு சசிகலாவை பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுத்தனர். 

 

வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்திருக்கிறார்கள். அதனைச் சட்டப்படி சந்திக்கப் போகிறார்கள். இதுவெல்லாம் இவர்களின் பயத்தின் வெளிப்பாடு, நான் அதிமுகவின் மொத்த நபர்களையும் சொல்லவில்லை. ஒரு சிலரையே குறிப்பிடுகிறேன். கடந்த ஒரு வாரமாகவே, நினைவில்லத்தை மூடுவது, போயஸ் தோடத்தில் போலீஸ் பாதுகாப்பு போடுவது, அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸை பாதுகாப்பிற்காகப் போடுவது. சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணத்தை நிறுத்திவிட முடியுமா.. தொண்டர்கள் முடிவு செய்துவிட்டால், இவர்களால் தடுத்துவிட முடியுமா. இவர்களிடம் இன்று அதிகாரம் இருப்பது சரி ஆனால், இவர்களுக்கு இந்த அதிகாரத்தைக் கொடுத்தது யார் என்பதையே மறந்துவிட்டார்களே. 

 

நீதிமன்றத்தின் தீர்ப்பு அனைத்தும் எங்கள் பக்கமே உள்ளது. இதற்கு மேல் அவர்கள் ஐ.நா. சபைக்குத்தான் போகவேண்டும் என சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளாரே..?

 

சி.வி.சண்முகம், சசிகலா போயஸ் தோட்டத்திலிருந்தபோது இரவு 12 மணிக்கு ‘சின்ன அம்மா இல்லை.. என் அம்மா’ எனக் கத்தினாரே அப்போது தெரியவில்லையா ஐநா சபைக்குப் போகவேண்டும் வேண்டாமா என்று ஜெயக்குமார், காலில் விழுந்து நிதி அமைச்சர் பதவி வாங்கும்போது தெரியவில்லையா. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை எனச் சட்ட அமைச்சர் தெரிவிக்கிறார். இவர்களிடம்தான் ஆட்சியே இருக்கிறது. 

 

CR.Saraswathi about sasikala reaching tamilnadu

 

ஜெயக்குமார், “சட்டத்தை நாங்கள் கையில் எடுக்கக்கூடாது அதனால்தான் போலீஸில் புகார் கொடுத்தோம்” எனத் தெரிவித்துள்ளாரே..?
 

காவல்துறை ஒரு கொடியைப் பயண்படுத்தக்குடாது என எப்படிச் சொல்வார்கள். சட்ட ஒழுங்கை கையில் வைத்திருக்கும் நீங்கள் டிஜிபி அலுவலகத்திற்குச் சென்று புகார் கொடுக்கிறீர்கள். 

 

cnc

 

சில இடங்களில் சசிகலாவை வரவேற்க வைக்கப்பட்ட பேனர்களை அப்புறப்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. அனுமதியில்லாமல் வைக்கப்பட்ட பேனர்களை அகற்றுகிறார்களா?
 

அனுமதி வாங்கி வைக்கப்பட்டுள்ளதைக் கிழிக்கிறார்கள். திருச்சி சமயபுரத்தில் இருந்து சென்னைக்குப் புறப்பட்டவர்களின் வாகனங்களைத் தடுத்து நிறுத்துகிறார்கள். பல இடங்களிலும் எங்களுக்கு அனைத்துவிதமான பிரச்சனைகளையும் காவல்துறை மூலமாக கொடுக்கிறார்கள். மனசாட்சிபடி இது நியாயமா என்பதை அவர்களே யோசிக்கட்டும். நான் அதிமுகவின் அனைவரையும் கேட்கவில்லை. ஒரு சிலரையே கேட்கிறேன். எனக்கு ஒருவேளை சோறு போட்டவர்களை வாழ்க்கை முழுக்க நினைப்பதுதான் மனிதத் தன்மை. பெரிய வாழ்க்கையைக் கொடுத்தவர்களையே இப்படிச் செய்கிறார்கள் என்றால் அவர்களே சிந்தித்துப் பார்க்கட்டும். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'2026 தேர்தலில் நான் யாரென்று காட்டுவேன்' - சசிகலா

Published on 21/03/2024 | Edited on 21/03/2024

 

nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஆனால் சசிகலா தரப்பில் எந்தவித தேர்தல் நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில், புதுக்கோட்டையில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். அவர் பேசுகையில், ''இந்தத் தேர்தல் முடிவுக்கு பிறகு தான் அண்ணா திமுக என்ன என்பதை எல்லோரும் புரிந்து கொள்வார்கள். நிச்சயமாக அதிமுக ஒன்றாவதற்குரிய நேரம் வந்துவிட்டதாகத் தான் என்னுடைய அனுபவத்தில் நான் சொல்கிறேன். தமிழ்நாடு அரசு இப்பொழுது தேர்தல் என்ற காரணத்தைச் சொல்லி தேர்தலை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். நேற்று கூட ஒரு துப்புரவு பெண் தொழிலாளி தூத்துக்குடியில் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டிருக்க சம்பவம் நடந்துள்ளது. எதற்காக நடந்தது என்பதை நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் நான் கேட்கின்ற ஒரே கேள்வி முதலமைச்சர் கையில் இருக்கின்ற காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது? பூ கட்டிக்கிட்டு இருக்கா அல்லது இவர்களுடைய பிரச்சாரத்திற்கு துணையாக பின்னாடி போய்க் கொண்டிருக்கிறதா? என முதலமைச்சர் தான் சொல்ல வேண்டும்.

ஆவின் பாலில் புழு, பூச்சி இருக்கிறது என்று சொல்கிறார்கள். இது முதல் முறையல்ல தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இது நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் உடனே ஒரு அறிக்கை கொடுக்கிறார்கள். இந்த பாலை யாரும் உபயோகிக்க வேண்டாம். இதற்கா அரசாங்கம் இருக்கிறது. இதற்காகவா பால்வளத்துறை இருக்கிறது. அதற்கு ஒரு மந்திரி வேறு. எப்படி நிர்வாகம் நடத்துகிறீர்கள். அப்படி என்றால் உங்கள் நிர்வாகத்தில் குறை இருக்கிறது. அது பாலில் தெரியுது. இதே ஜெயலலிதா இருந்தபோதெல்லாம் இது நடந்ததா? இது மாதிரி ஒரு குறை நடந்திருக்குமா? இல்லையே. ஏனென்றால் அவர்களுடைய கவனம் எல்லா இடத்திலும் இருந்தது.

இப்போது வரைக்கும் முதலமைச்சர் நினைப்பு, எப்படியாவது இந்த தேர்தலில் பொய் சொல்லி ஜெயிக்கணும் என்பதுதான். இது நாடாளுமன்றத் தேர்தல். 2026 சட்டமன்ற தேர்தல் தான் எங்களுக்கும் திமுகவிற்கான நேரடி தேர்தல். அந்த தேர்தலில் நான் யார் என்று காட்டுவேன். திமுக என்ன ஆகும் என்பதையும் நான் கணித்து வைத்திருக்கிறேன்'' என்றார்.

Next Story

சசிகலாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Actor Rajinikanth met and congratulated Sasikala

சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா நிலைய இல்லத்துக்கு எதிரே வி.கே. சசிகலா புதியதாக வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். ஜெயலலிதா இல்லம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வீட்டிற்கு கடந்த மாதம் கிரகப் பிரவேசம் நடைபெற்றது. முன்னதாக நடிகர் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்த கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஜினிகாந்த் சசிகலாவின் வீட்டுக்கு நேரில் இன்று (24.02.2024) வருகை தந்தார். இதனையடுத்து சசிகலாவுடன் சிறிது நேரம் சந்தித்துப் பேசி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து கிளம்பிய ரஜினிகாந்த்தை வீட்டின் வாசல் வரை வந்து சசிகலா வழியனுப்பி வைத்தார். அப்போது ரஜினிகாந்த் கையெடுத்துக் கும்பிட்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “இந்த வீடு கோயில் போல உள்ளது. இந்த வீடு சசிலாவுக்கு பெயர், புகழ், சந்தோஷம், நிம்மதி தர வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்றார். மேலும், ‘ஜெயலலிதாவின் ஆளுமை மிக்க இடத்தை தமிழகத்தில் யார் பூர்த்தி செய்வார் என நினைக்கிறீர்கள்’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அரசியல் பற்றி பேச விரும்பவில்லை” எனத் தெரிவித்தார்.