Skip to main content

ஆர்.எஸ்.எஸ்-ல் சுதந்திரப் போராட்டத் தியாகின்னு யாரு இருக்கா? - சிபிஎம் ஜி.செல்வா கேள்வி!

Published on 30/05/2023 | Edited on 30/05/2023

 

 CPM G. Selva Interview

 

புதிய நாடாளுமன்றக் கட்டட திறப்பு மற்றும் சமகால அரசியல் குறித்து பல்வேறு கருத்துகளை நம்மோடு சிபிஎம் கட்சியைச் சேர்ந்த ஜி.செல்வா பகிர்ந்துகொள்கிறார்.

 

நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் எந்தப் பங்கும் வகிக்காதவர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர். நம் நாட்டை காட்டிக்கொடுப்பதற்காக ஆங்கிலேயர்களிடம் சம்பளம் பெற்றவர் சாவர்க்கர். பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு பார்க்கும் அமைப்பு ஆர்.எஸ்.எஸ். பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள செங்கோலுக்கு புதிய கதைகளை இவர்களாக உருவாக்கியுள்ளனர். அந்தக் காலத்தில் நேரு மறுத்தபோதும் காங்கிரஸ் கட்சியில் இருந்த சில வலதுசாரி சிந்தனையாளர்கள் பல்வேறு பூஜைகள் செய்து அந்த செங்கோலைப் பெற்றனர். பல்வேறு தலைவர்கள் மற்றும் மக்கள் போராடிப் பெற்ற சுதந்திரத்தை செங்கோலை வைத்து இவர்கள் மறைக்கப் பார்க்கின்றனர். 

 

இவர்கள் மனுஸ்மிருதியை ஏற்பவர்கள். அதன் காரணமாகவே மன்னர் காலத்து செங்கோலை வைத்து அரசியல் செய்கின்றனர். இந்தக் காலத்து மக்கள் நம்புவதற்காக புதிய கதைகளை உருவாக்குகின்றனர். மவுண்ட் பேட்டனிடம் கொடுக்கப்பட்ட செங்கோல் நேருவிடம் வந்ததாக எந்த ஆவணமும் இல்லை. பிரிட்டிஷாரிடம் மூன்று முறை மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தவர் சாவர்க்கர். மத அடிப்படையில் இந்த தேசத்தை முதலில் வரையறுத்தவர் சாவர்க்கர் தான். ஒரே ஒரு சுதந்திரப் போராட்ட தியாகியைக் கூட ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் காட்ட முடியாது. 

 

புதிய நாடாளுமன்றக் கட்டட அடிக்கல் நாட்டு விழாவில் பட்டியலினத்தைச் சேர்ந்த அன்றைய குடியரசுத் தலைவரை இவர்கள் அழைக்கவில்லை. இப்போது நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவில் பழங்குடியினத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவரை அழைக்கவில்லை. இது ஒரு மிகப்பெரிய துரோகம். பாராளுமன்றத்துக்கே வராத, எந்த வேலையும் செய்யாத பிரதமருக்கு புதிய பாராளுமன்றம் எதற்கு? நாடாளுமன்ற ஜனநாயகத்தை இவர்கள் சிதைக்கிறார்கள். அதனால்தான் எதிர்க்கட்சிகள் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணித்தனர். பாஜக எம்.பி மீதான பாலியல் புகாரில் மல்யுத்த வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். அவர்களை பாஜக கண்டுகொள்ளவே இல்லை. இதுதான் இவர்கள் ஜனநாயகத்தை மதிக்கும் போக்கு.

 


 

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.