Skip to main content

“மத்திய அரசு நடத்தியது நரி தந்திர பேச்சுவார்த்தை..!” முத்தரசன் அதிரடி

Published on 27/01/2021 | Edited on 27/01/2021

 

CPI Mutharasan about republic day tractor rally issue

 

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் பல நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுடன் மத்திய அரசு 11 முறை பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அவற்றில் உடன்பாடு ஏற்படாததால் விவசாயிகள் குடியரசு தினத்தன்று ட்ராக்டர் பேரணி நடத்துவதாக அறிவித்தனர். அதனபடி நேற்று (26.01.2021) ட்ராக்டர் பேரணி நடைபெற்றது. இதில் விவசாயிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது. இதில் காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டு வீசி, தடியடி நடத்தினர். இதனைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

 

அந்த வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் நம்மிடம் பேசியதாவது; “மத்திய அரசாங்கம் நாடாளுமன்றத்தில் விவசாயிகளுக்கு விரோதமாக நிறைவேற்றிய சட்டத்தை ‘தினமணி’ பத்திரிகை அதன் தலையங்கத்தில் நேற்றைய தினம் ‘அப்படி என்ன அவசரம்’ எனக் கண்டித்திருக்கிறது. அதேபோல், குடியரசுத் தலைவர், குடியரசு தின உரையில், “விவசாயிகளுக்கு நாடு நன்றி கடன்பட்டிருக்கிறது” என்று குறிப்பிடுகிறார். 61 நாட்களாகப் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளிடத்தில், 11 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்கிறது.

 

அதில் ஒருமுறை பேச்சுவார்த்தையில், ‘மின்சார திருத்த மசோதாவை நாங்கள் தற்போது சட்டமாக்க மாட்டோம்’ என மத்திய அரசாங்கம் தெரிவித்தது. தற்போது ஆக்கமாட்டோம் என்று சொன்னால், அந்தச் சட்டம் தவறு என்பதை அரசாங்கம் ஒப்புக்கொள்கிறபோது, அதனை நாங்கள் அமல்படுத்த மாட்டோம் திரும்பப் பெறுகிறோம் என சொல்வதில் என்ன தயக்கம்? அதேபோல் விவசாயிகளுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட சட்டத்தை நாங்கள் ஒன்றரையாண்டு அமல்படுத்த மாட்டோம் என்று சொல்கிறது. சட்டமாக்கிவிட்ட பிறகு அதனை ஒன்றரையாண்டு அமலாக்க மாட்டோம் என்று சொல்லும் அரசாங்கம் அதனை ரத்து செய்வேன் என சொல்வதில் என்ன தயக்கம்? 

 

தாங்கள் ஒரு தவறு செய்துவிட்டோம் என்பதை மறைமுகமாக ஒப்புக்கொள்ளும் அரசு, இதனை நிறைவேற்றியே தீருவோம், வாபஸ் வாங்க மாட்டோம் எனத் திரும்ப திரும்ப விவசாயிகளுக்கு ஆத்திரம் மூட்டக்கூடிய முறையில் விவசாயிகளை ஏமாற்றக்கூடிய முறையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை ஒரு நயவஞ்சகமான பேச்சுவார்த்தை. உண்மையில் உணர்வுப்பூரமாகப் பிரச்சனைக்குத் தீர்வுகாண வேண்டும் எனும் நோக்கத்தோடு நடைபெற்ற பேச்சுவார்த்தை அல்ல. நரி தந்திரம் எனச் சொல்வார்களே அத்தகைய தந்திரத்தைத்தான் மத்திய அரசாங்கம் மேற்கொண்டது. நேற்றைய குடியரசு தினத்தில் காவல்துறையை ஏவி வன்முறையை உருவாக்கி, தடியடி, கண்ணீர் புகைக்கூண்டு வீசி ஒரு பயங்கரமான கலவரத்தை செய்துவிட்டு, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் தூண்டுகின்றன என சொல்வது, தாங்கள் செய்த தவறை மூடி மறைத்துக்கொள்ள செய்யும் செயல்.
 


இந்த நாட்டினுடைய விவசாயிகள் மீது மத்திய அரசுக்கு அக்கறை இருக்கும் என்றால், இந்தச் சட்டங்களைத் திரும்பப் பெறுவதுதான் மிகச் சரியானதாக இருக்கும். ட்ராக்டர் பேரணிக்கு அனுமதி கேட்டால் அதற்கு அனுமதி மறுத்ததுமட்டுமின்றி; ஒவ்வொரு ட்ராக்டர் உரிமையாளர் வீடுகளுக்கும் சென்று, “உங்கள் ட்ராக்டர் வரக்கூடாது. வந்தால் நாங்கள் பறிமுதல் செய்வோம்” என காவல்துறையைவிட்டு அச்சுறுத்தியதும், தமிழ்நாட்டில் பல இடங்களிலேயே தடியடி நடத்தியதும் மிகமிக மோசமான செயல்" என்றார்.

 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Next Story

வெறுப்பு பிரச்சாரம்; மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் (படங்கள்)

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும்  பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும், வழக்கு பதிவு செய்திடவும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்டம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை கண்டனம் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, பேரணியாக சென்றனர்.