Skip to main content

டாஸ்மாக் கடைகளைத் திறந்தால் நோய்த் தொற்று அதிகமாகும்... முத்தரசன் குற்றச்சாட்டு...

Published on 05/05/2020 | Edited on 05/05/2020

 

  r mutharasan


தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 527 பேர் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 550 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் மே 7 ஆம் தேதி முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று நேற்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குப் பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. 
 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் டாஸ்டாக் திறக்கப்படும் என்ற அறிவிப்பு குறித்து நம்மிடம் பேசுகையில், மத்திய அரசு தொடர்ந்து தவறான வழிகாட்டுதல் செய்வதன் விளைவுதான் இது. திடீரென இரண்டு வாரங்கள் ஊரடங்கை நீட்டிக்கிறது. பின்னர் சில தளர்வுகள் எனக் கூறி மதுக்கடைகளைத் திறக்கலாம் எனச் சொல்கிறது. மத்திய அரசு அறிவித்ததைப் பயன்படுத்தி அண்டை மாநிலங்களில் மதுக்கடைகளைத் திறக்கிறார்கள். 
 

தமிழகத்தில் மதுக்கடைகளைத் திறக்கக்கூடாது என எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும் வலியுறுத்தின. அண்டை மாநிலங்களில் மதுக்கடையைத் திறந்திருப்பதை வாய்ப்பாகப் பயன்படுத்தி தமிழகத்தில் 7ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. இது மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தும்.
 

இப்போது எந்தவிதமாக வேலைவாய்ப்பும் கிடையாது. வேலையே இல்லை என்றபோது எப்படி ஊதியம் கிடைக்கும். அரசும் பெரிய அளவில் எந்த உதவியும் செய்யவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மே 7ஆம் தேதி மதுக்கடையைத் திறந்தால், குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு குடிக்க வேண்டும் என்ற எண்ணம்தான் வரும். கையில் காசு இல்லாதப்ப வீட்டில் இருக்கிற பண்டம், பாத்திரங்களை அடகு வைப்பாங்க, மனைவியின் தாலியைக் கூட அடகு வைத்து குடிக்க முயற்சிப்பார்கள். இதனால் குடும்ங்களில் சண்டைகள், சச்சரவுகள் ஏற்படும். 
 

மதுக்கடையில் ஐந்து பேருக்கு மேல் நிற்கக் கூடாது என்கிறார்கள். இதனை யார் கேட்பார்கள். அண்டை மாநிலங்களில் மதுக்கடை திறந்ததைப் பார்த்தோம். திருவிழாக் கூட்டம்போல் நிற்கிறார்கள். மதுபானம் வாங்க வருபவர்கள் எதைப் பின்பற்றுவார்கள், எதைப் பின்பற்ற மாட்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகளில் பெரிய அளவில் கூட்டங்கள் கூடும். குடும்பங்களில் உள்ள பொருட்களை அடகு வைக்கக் கூடிய நிகழ்வுகள், பல்வேறு சமூக விரோதச் செயல்கள் கூட நடக்க வாய்ப்பு உள்ளது. நோய்த் தொற்று நிச்சயமாக இதனால் அதிகரிக்கும். ஆகையால் 7ஆம் தேதி மதுக்கடைகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும் என்பதுதான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு.
 

நாளுக்கு நாள் தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இதற்கு என்ன காரணம்?
 

இந்த நோய்ப் பரவுவதற்கு அரசுதான் காரணம். எதையும் திட்டமிட்டு, முன் யோசனை செய்து அரசாங்கம் செய்வதில்லை. திடீரென ஊரடங்கு கடுமையாக்கப்படுகிறது. திடீரென தளர்த்தப்படுகிறது. மதுரை மாவட்ட ஆட்சியர், திடீரென இருசக்கர வாகனங்களுக்கு பாஸ் வாங்க வேண்டும் என்றவுடன், பெரிய கூட்டம் அங்கு கூடியது. பின்னர் கூட்டத்தைச் சமாளிக்க முடியாமல், திரும்ப தளர்த்தப்படுவதாக அறிவிக்கிறார்கள்.
 

http://onelink.to/nknapp

 

அதேபோல திடீரென நான்கு நாள் ஊரடங்கு கடுமையாக்கப்படும், இன்று மாலைக்குள் பொருட்களை வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொன்னவுடன் கூட்டம் கடைகளில் அதிகமானது. மே 4ஆம் தேதி ஊரடங்கு தளர்த்தப்பட்டது. இதனால் சென்னை உள்பட பல நகரங்களில் கூட்டம் காணப்பட்டது. நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கிறார்களா? நோய்த் தொற்று தொடர்ந்து நீடித்துக்கொண்டே இருந்தால் இப்படியே அரசாங்கத்தை ஒட்டிவிடலாம் என்று நினைக்கிறார்களா? எனப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. மாறி மாறி அரசு முடிவெடுப்பதால்தான் நோய்த் தொற்று அதிகமாகி வருகிறது என்றார்.
 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

3 நாள்கள் விடுமுறை; மதுக்கடைகளில் குவிந்த மதுப்பிரியர்கள்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Drinkers gathered in bars for holiday due to election

மக்களவைத் தேர்தலையொட்டி 3 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டதையொட்டி செவ்வாய்க்கிழமை (16-04-24) இரவு மதுக்கடையில் மதுப்பிரியர்களின் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் ஏப்ரல் 17, 18, 19 ஆகிய 3 நாட்கள் அரசு (டாஸ்மாக்) மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி டாஸ்மாக் கடையுடன் இணைந்து செயல்படும் மதுக்கூடங்கள், ஏப்ரல் 2 முதல் எப்ரல் 11 வரை (ஏப்ரல் 6 நீங்கலாக) அனைத்து மதுக்கூடங்களும் மூடப்படும். இந்த 3 நாள்களில் மதுபானங்களை விற்பனை செய்தாலோ அல்லது வேறு இடங்களுக்கு மதுபாட்டில்களை கொண்டு சென்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று (16-04-24) இரவுடன் மதுக்கடைகள் 3 நாள்களுக்கு மூடப்படும் என்பதால், திருச்சியில் மதுப்பிரியர்கள் தங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். ஏராளமானோர் கடைகளை முற்றுகையிட்டு 3 நாள்களுக்குத் தேவையான மதுவகைகளை வாங்கிச்சென்றனர். இதனால் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

Next Story

“மோடியின் நாய்க்குட்டிபோல் அமலாக்கத்துறை செயல்படுகிறது” - முத்தரசன்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Mutharasan criticism of BJP

புவனகிரி பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன் சிதம்பரம் நாடளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தொல்.திருமாவளவனுக்கு ஆதரவு திரட்டி பானைச் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். 

அப்போது பேசிய அவர், “அமலாக்கத்துறை மோடியின் நாய்க்குட்டி போல செயல்படுகிறது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு அபராதம் விதித்துள்ளனர். சம்பந்தபட்ட துறை அதிகாரிகளை மோடி, அமித்ஷா ஆட்டி படைக்கிறார்கள். மோடி, தேர்தலுக்குப் பிறகு திராவிட முன்னேற்ற கழகம் இருக்காது என கூறுகிறார். உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை அழித்து விடுங்கள் என கூறுகிறார். இதற்கு அர்த்தம் என்னவென்றால் ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வந்து பாரதிய ஜனதா கட்சியை மட்டும் வைத்துக்கொண்டு சர்வாதிகாரி போல் செயல்படுவதற்காக அனைத்து கட்சிகளையும் ஒழிக்க திட்டமிட்டுள்ளார்.

மோடியின் தேர்தல் அறிக்கையில் சொன்னதை எதையுமே செய்யவில்லை. விவசாயிகளுக்கு ஆதார விலை, சாமிநாதன் கமிஷன் பரிந்துரை அமல்படுத்தவில்லை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. தற்போது கச்சத்தீவைப் பற்றி பேசுகிறார். கச்சத்தீவை கடந்த 10 ஆண்டுகளில் மீட்பதற்கான மோடி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவரை அவர் யாருக்கு பேன் பார்த்துக் கொண்டு இருந்தார்.

மாநில உரிமைகள் பறிக்கப்படுகிறது. ஆளுநர் போட்டி அரசாங்கம் நடத்துகிறார். இது ஜனநாயகத்திற்கு விரோதமானது. இதனை திமுக, கம்யூனிஸ்ட் பிரச்சினையாக பார்க்காமல் பொது பிரச்சினையாக பார்க்க வேண்டும்.  மோடியிடம் சமூக நீதியை எதிர்பார்க்க முடியாது. அப்படி சமூக நீதி அவர்களுக்கு இருந்தால், இட ஒதுக்கீட்டை அமல்படுத்துகிறேன் என கூறியதால் வி.பி.சிங் ஆட்சியை கவிழ்த்திருக்கமாட்டார்கள்.

பாஜக பத்தாண்டுகளில் செய்த தவறு கொஞ்ச நஞ்சமல்ல. சிறுபான்மை மக்களுக்கு எதிராக, சிறு குறு தொழில் நடத்துபவர்களுக்கு எதிராக, விவசாயிகளுக்கு எதிராக 3 சட்டங்கள் நிறைவேற்றினார்கள். தொழிலாளர்களுக்கு எதிராக சட்டங்களை கொண்டு வந்தார்கள்.

இதற்கு அதிமுக ஆதரவளித்தது. தற்போது ஜனநாயகத்தை காப்போம் என  ஏமாற்று வேலை செய்கிறது. சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்கு பானைச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். இவருடன் கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் மணிவாசகம்,  மாவட்டச் செயலாளர் துரை, மாவட்ட துணைச் செயலாளர் சேகர், வட்டச் செயலாளர் தமிமுன் அன்சாரி உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.