corona virus issue - chennai police commissioner a. k. Viswanathan - drone camera -

அத்தியாவசியமின்றி வீடுகளை விட்டு வெளியே நடமாடுபவர்களை ட்ரோன் காமிராக்கள் மூலம் கண்காணிக்க உள்ளோம். முழு ஊரடங்கை அமல்படுத்த சென்னை பெருநகரில் 288 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. அந்த இடங்களில் கூடுதல் காவலர்கள் நியமிக்கப்பட்டு வாகன சோதனை நடைபெற உள்ளது. அனைத்துக் காவல் நிலையபகுதிகளிலும் வாகனச் சோதனையைத் தீவிரப்படுத்தி தேவையில்லாமல் சுற்றி வருபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து வாகனங்களைக் கைப்பற்றி அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சென்னையில் 12 நாள் ஊரடங்கு அமல்படுத்துவது தொடர்பாக நேற்று சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது தெரிவித்திருந்தார்.

Advertisment

அரசு அறிவித்தப்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. ட்ரோன் காமிராக்கள் மூலம் கண்காணிக்கும் பணியும் நடந்தது.

இன்று காலை சென்னை வாலாஜா சாலையில் வாகன சோதனையைக் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது வாகனங்களின் நடமாட்டத்தை ட்ரோன் மூலம் கண்காணித்தார்.

Advertisment

corona virus issue - chennai police commissioner a. k. Viswanathan - drone camera -

பின்னர் செய்தியளாளர்களைச் சந்தித்த ஏ.கே.விஸ்வநாதன், சென்னையில் 12 நாட்கள் ஊரடங்கு கடுமையாகப் பின்பற்றப்படும். வெளியில் வருபவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். அத்தியாவசியப் பொருட்களை வாங்க வாகனங்களைப் பயன்படுத்தக்கூடாது. மீறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். நோய்த்தொற்று பரவும் சூழல் இருந்தால் கடைகள் மூடப்படும். வணிக நிறுவனங்களில் தடுப்பு நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும். கரோனா பரவலைத் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.