Skip to main content

கரோனாவால் உயிரிழந்த மருத்துவர்... மின்மயானத்தில் எரிக்க பொதுமக்கள் எதிர்ப்பு... பீலா ராஜேஷ் பதில் 

Published on 14/04/2020 | Edited on 14/04/2020

 

கரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த மருத்துவரின் உடலை மின்மயானத்தில் எரிக்க எதிர்ப்பு தெரிவித்தால் சென்னை அருகே பரபரப்பு ஏற்பட்டது. சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த அந்த மருத்துவரின் உடல் மீண்டும் மருத்துவமனையின் பிணவறையிலேயே வைக்கப்பட்டது.

 

sss



ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அந்த மருத்துவருக்கு வயது 60. நெல்லூரைச் சேர்ந்த அவர் தனியாக கிளினிக் வைத்து நடத்தி வந்தார். அவருக்கும், அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள், அவரிடம் பணிபுரியும் டிரைவர் ஆகியோருக்கும் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் மருத்துவருக்கு மட்டும் உடல்நிலை மோசமாக ஆனநிலையில் கடந்த 4-ஆம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை அவர் உயிரிழந்தார். 

 

aaaa



மருத்துவர் உயிரிழந்தது குறித்து அவரது உறவினர்களுக்கு இந்த விஷயம் தெரிவிக்கப்பட்டதாகவும், அவர்கள் மருத்துவரின் உடலை சென்னையிலேயே தகனம் செய்துவிடும்படி கூறியதாகவும் தெரிகிறது. இதையடுத்து மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவரின் உடலை தகனம் செய்ய அம்பத்தூரில் உள்ள மின்மயானத்திற்கு கொண்டு சென்றனர்.
 

http://onelink.to/nknapp


மருத்துவமனை ஊழியர்கள் மின்மயானத்தில் உள்ளவர்களிடம் பேசினார்கள். அப்போது மின்மயானத்தில் உள்ளவர்கள், தங்களுக்குப் போதுமான கரோனா பாதுகாப்பு கவச உடைகள் இல்லை என்பதால், மருத்துவர்களின் உடலை எரிக்க மறுத்துள்ளனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள், கரோனா பாதுகாப்பு கவசங்கள் அணிந்து கொண்டு வந்தவர்களைப் பார்த்து, இந்த மின்மயானத்தில் உடலைத் தகனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். மருத்துவமனை ஊழியர்கள் மருத்துவரின் உடலை அங்கேயே வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். 
 

aaa



தகவல் அறிந்து அம்பத்தூர் காவல்நிலைய போலீசார் அங்குச் சென்றனர். பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் பொதுமக்கள் மருத்துவரின் உடலைத் தகனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மருத்துவரின் உடலை அங்கேயே வைத்துச் சென்றது குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். மருத்துவமனை நிர்வாகத்திற்கும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து மருத்துவரின் உடலை மீண்டும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டுவந்து பிணவறையிலேயே வைக்கப்பட்டது.
 

இந்தநிலையில் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் திங்கள்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பின்போது, அம்பத்தூரின் மருத்துவரின் உடலை எரிக்க பொதுமக்கள் எதிர்பு தெரிவித்தது குறித்து கேட்கப்பட்டது. அப்போது அவர், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடலைத் தகனம் செய்வது பற்றி அரசு ஊழியர்களுக்கு எல்லாமே தெரியும். அதேபோல தனியார் மருத்துவமனைகளுக்கும் அந்த வழிமுறைகள் கொடுத்திருக்கிறோம். அரசாங்கத்தில் இதுபோன்ற பிரச்சனைகள் வந்தது இல்லை. இன்று தனியார் மருத்துவமனையில் அவசரமாகப் போயுள்ளனர். தலைமைச் செயலாளர் அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும், கலெக்டர்களுக்கும் ஏற்கனவே இதுபோன்று வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். மீண்டும் சொல்லியிருக்கிறார். இனி அதுபோல் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 


 

Next Story

சென்னையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Traffic change in Chennai for a year

சென்னை தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் நாளை (27.04.2024) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2025) வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றுப்பாதைகளில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் அனுகு (சர்வீஸ் ரோடு) சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராயர் சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். 

Traffic change in Chennai for a year

பர்கிட் சாலை, மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம். 

Traffic change in Chennai for a year

சிஐடி நகர் 1ஆவது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டானாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். எனவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

சென்னை விமான நிலையத்தில் கிடந்த தங்கம்; சுங்கத்துறையினர் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Gold found at Chennai airport; Customs investigation

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலைய குப்பைத் தொட்டியில் கேட்பாராற்று கிடந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பைத் தொட்டியில் கிடந்த 1.2 கிலோ தங்க நகைகளைக் கைப்பற்றிய சுங்கத் துறையினர், சிசிடிவியை பார்க்காதபடி நகையை குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லும் நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் சோதனை நடத்திய போது, தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.