Skip to main content

கொரோனாவை வீழ்த்தும் பணியில் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள்! 

Published on 27/03/2020 | Edited on 01/04/2020

 

                                   

கரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து மக்களைப் பாதுகாக்க 9 குழுக்களை அமைத்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடங்கிய அந்த 9 குழுவும் களத்தில் இறங்கியிருக்கிறது. 

 

ias

                                               ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.       ஹன்ஸ்ராஜ்வர்மா ஐ.ஏ.எஸ்.


கரோனா தொற்றுவை அழிக்க மத்திய அரசுடன் இணைந்து மாநில ஒருங்கிணைப்பை மேற்கொள்ளும் குழுவில் செந்தில்குமார், அதுல்யமிஸ்ரா, பங்கஜ்குமார் பன்ஜால், சந்தோஷ் கே மிஸ்ரா ஆகிய 4 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். முருகானந்தம், அருண்ராய், அனுஜார்ஜ், அணீஷ் சேகர் ஆகிய 4 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் தலைமையில் தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களுக்கான உற்பத்தியை கண்காணிக்கவும்; தயானந்த கட்டாரியா, ககன்தீப்சிங்பேடி, சந்திரமோகன் ஆகிய 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடன் தாமரைக்கண்ணன் ஐ.பி.எஸ். அதிகாரியும் இணைந்து மாவட்ட அளவில் அத்தியாவசிய பொருட்கள் சப்ளையாவதை கண்காணிக்கவும் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

தமிழக ஊடகங்களை ஒருங்கிணைக்கவும் அதனை கண்காணிக்கவும் உருவாக்கப்பட்ட குழுவில் குமரகுருபரன், சங்கர், தீபக்ஜேக்கப் ஆகிய 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.  

 

ias

                                                     கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.               பிரபாகர் ஐ.ஏ.எஸ்.
                

அதேபோல, கோபால், நாகராஜன்  ஆகிய 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் தனியார்  மருத்துவமனைகளை ஒருங்கிணைக்கும் குழுவும் ; பிரபாகர், ஜவஹர், தர்மேந்திரபிரதாப்யாதவ் ஆகிய 3 ஐ.ஏ.எஸ்.கள் தலைமையில் போக்குவரத்துகளை கண்காணிக்கும் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களை தனிமைப்படுத்தல் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட  மருத்துவ வார்டுகளை கண்காணிக்க உமாநாத், ஜெகனாதன், சாம்சன் ஆகிய 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். 

 

ias

                                                                                   அனுஜார்ஜ் ஐ.ஏ.எஸ்.



ஹன்ஸ்ராஜ்வர்மா, ஹர்மேந்தர்சிங், மாணிவாசன் ஆகிய 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் மருத்துவமனை கட்டமைப்பை ஒருங்கிணைக்கும் குழுவும் ; கிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், விஷ்ணு ஐ.ஏ.எஸ். ஆகிய 3 அதிகாரிகள் தலைமையில் நிவாரணபணிகளில் ஈடுபட்டுள்ள தன்னார்வ குழுக்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்கள், பாதிக்கப்பட்ட முதியவர்களின் தேவைகளை கவனிக்கும் குழுவும் என 9 குழுக்களை அமைத்துள்ளது எடப்பாடி அரசு. அந்தந்த குழுவில் இடம்பெற்றுள்ள ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பணிகளை இன்று முதல் (27.3.2020) துவக்கியிருக்கிறார்கள். 
 

 

 

 

Next Story

தமிழ்நாடு முழுவதும் பஞ்சுமிட்டாய் விற்கத் தடை

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
Ban on sale of cotton candy across Tamil Nadu

புதுச்சேரியின் கடற்கரை பகுதி மற்றும் சுற்றுலா தலங்களில் விற்கப்படும் பஞ்சு மிட்டாயில், புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்கள் கலக்கப்படுவதை உணவுப் பாதுகாப்புத் துறையினர் கண்டுபிடித்து பறிமுதல் செய்திருந்தனர். இச்சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்கத் தடை விதிக்கப்பட்டது. அரசிடம் இருந்து முறையான ஒப்புதலோடு விற்பனைக்கான உரிமம் பெற்ற பிறகுதான் மீண்டும் பஞ்சு மிட்டாயை விற்பனை செய்ய வேண்டும் என உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கான உத்தரவை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ரவிச்சந்திரன் பிறப்பித்திருந்தார்.

அதே சமயம் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத்துறையின் சார்பில் சென்னை மாவட்ட அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான உணவுப் பாதுகாப்புத் துறையினர் சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களை பறிமுதல் செய்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பஞ்சுமிட்டாய் தயாரிக்கும் இடங்களில் சோதனை நடத்தி தரமில்லாத மற்றும் ரசாயனம் கலக்கப்பட்ட பஞ்சுமிட்டாய் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்திருந்தனர்.

மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களில் 'ரோடமைன் பி' என்ற புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனம் கலப்படம் செய்யப்பட்டிருந்தது உறுதியாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் பிங்க், பச்சை, ஊதா உள்ளிட்ட நிறங்களில் விற்கப்படும் பஞ்சு மிட்டாய்களை சாப்பிட வேண்டாம் என உணவுப் பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும் ‘ரோடமைன் பி’ உள்ளிட்ட ரசாயனங்களைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறைக்கு உணவுப் பாதுகாப்புத்துறை பரிந்துரை செய்திருந்தது. 

இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. பஞ்சுமிட்டாயில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனம் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து தற்போது தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பேச்சுவார்த்தையின் நிலவரம் என்ன? - அமைச்சர் சிவசங்கர் பேட்டி

Published on 05/01/2024 | Edited on 05/01/2024
'The decision will be taken after discussion tomorrow'- Minister Sivashankar interview

போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாகக் கடந்த டிசம்பர் மாதம் நோட்டீஸ் வழங்கி இருந்தனர். மேலும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் அரசு சார்பில் இன்னும் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தவில்லை. காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டம், 15வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இருந்தனர்.

இதற்கான பேச்சுவார்த்தை கடந்த டிசம்பர் 27 ஆம் தேதியும், ஜனவரி 3 ஆம் தேதியும் நடைபெற்றது. இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் எட்டப்படவில்லை. மேலும் தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தால் போராட்ட அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதன்படி ஜனவரி 9 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகப் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன.

இந்நிலையில், சென்னை பல்லவன் இல்லத்தில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் தொழிற்சங்க பிரதிநிதிகள் உடனான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சிவசங்கர், ''பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்க இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. அவர்கள் அவர்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி இருக்கிறார்கள். 15வது ஒப்பந்த பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்க வேண்டும், பணிபுரிகின்ற பணியாளர்களுடைய அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுடைய அகவிலைப் படியை உயர்த்தி தருவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இருக்கிறார்கள். இதில் நிதி கூடுதலாக செலவாகின்ற சில விஷயங்களை நிதித் துறையோடு கலந்தாலோசித்து, இதுகுறித்து விவாதித்து முடிவு எடுத்த பிறகு தான் அறிவிக்கப்படும் என்ற காரணத்தினால், நாளை ஒருநாள் நேரம் கேட்டிருக்கிறோம். நாளை மறுநாள் மறுபடியும் பேசிய பிறகு விவாதிக்கலாம் என்று சொல்லி இருக்கிறோம். எனவே அவர்களுடைய போராட்ட அறிவிப்பை கைவிடக் கோரி நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. நாளை மறுநாள் பேசி முடிவு எட்டப்படும்'' என்றார்.