கரோனா பீதியின் பெயரால் நிகழ்த்தப்படும் இதுபோன்ற வன்முறைகளைப் பலரும் கண்டித்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் ராஜ்கிரண்...
“எவ்வளவு கீழ்த்தரமான காலகட்டத்தில்
நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
என்பதை எண்ணிப் பார்க்கும் பொழுது,
மிகுந்த வேதனையும் மன உளைச்சலும் ஏற்படுகிறது.
தம் மனைவி, குழந்தைகள், குடும்பத்தினர்
யாரைப் பற்றியும் கவலைப்படாமல்,
"தான் படித்தது மக்களை காப்பாற்றுவதற்கே"
என்ற ஒரே லட்சியத்தோடு,
சமூகப் பொறுப்புணர்வோடு,
தம் உயிரையும் பணயம் வைக்கும்
புனிதமான மருத்துவர்களுக்கு
நாம் செய்யும் கைமாறு இதுதான், என்றால்,
இஸ்லாமியனாக பிறந்த ஒரே காரணத்தால்,
வெறும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்த
ஒரு மாற்றுத்திறனாளி சிறுவனின் உடலை,
புதைக்க விடமாட்டோம் என்று அடாவடி
பண்ணிய அரசியல் கட்சிகள் வைத்ததுதான்,
இந்த நாட்டில் சட்டம், என்றால்,
உலக நாடுகளின் பார்வையில்,
நம் நாடும், தேசமும் மிகக்கேவலப்பட்டு நிற்கும்.
இதைப்போன்ற கொடுமைகளுக்கு,
கடுமையான எதிர் நடவடிக்கைகள் எடுக்காத
ஆட்சியாளார்கள்,
மிகவும் ஈனப்பிறவிகளாக கருதப்படுவர்...”
என்று தெரிவித்திருக்கிறார்.