Skip to main content

கொரோனா: 31ம் தேதி வரை விடுமுறை ஏன்? பின்னணி என்ன?

Published on 19/03/2020 | Edited on 19/03/2020
v

 

லக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவத்தொடங்கியிருக்கிறது.  இந்த கொரோனா வைரஸ் பரவல், நான்கு கட்டங்களாகப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற நிலையில், இந்தியா தற்போது 2வது கட்டத்தில் உள்ளது.   மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள தீவிர நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் மூலம், இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. 

 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாகத்தான் தமிழக அரசும், இரண்டு வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள், மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு வரும் 31ம் தேதி வரை விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளது.  இந்த இரண்டு வார கணக்கு என்பது எதன் அடிப்படையில்? என்ற கேள்வியை  டாக்டர் சரவணனிடம் முன் வைத்தபோது,

 

  ‘’சீனாவில் கூபே மாகாணத்தில் வுகா நகரத்தில் இருந்து இந்த கொரோனா வைரஸ் உருவானது கண்டுபிடிக்கப்பட்டது.  இந்த நகரத்தில் இறைச்சி சந்தையில் இருந்துதான் கொரோனா உருவானதாக கூறப்படுகிறது.   சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவதை முதன் முதலில் கண்டுபிடித்து எச்சரிக்கை செய்த டாக்டர் லீ வென்லியாங் (34), கொரோனா தாக்கி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

 

l


   
சீனாவில் உருவான இந்த வைரஸ் காட்டுத்தீ போல உலகம் முழுவதும் பரவிவிட்டது.  இந்த வைரஸ் உள்ளவர்கள் தும்மும்போது காற்றில் வைரஸ் பரவி கொஞ்ச நேரம் உலாவும்.  பின்னர் இது கீழே தரையில் அல்லது மற்ற பொருட்களில் அமர்ந்துவிடும். காற்றில் சில மணித்துளிகள் இருக்கும் இந்த வைரஸ் தரையில் சில நாட்கள் இருக்கும்.  நாம் கைப்பிடிகளையோ, டேபிளையோ தொடும்போது அதிலிருந்து அந்த வைரஸ் நம் கைகளில் தொற்றிக்கொள்ளும். கைகளால் நாம் கண்களையோ, மூக்கினையோ தொடும்போது வைரஸ் நம் உடலுக்குள் சென்றுவிடுகிறது.

 

இந்த வைரசுக்கு மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.  அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரோஸ் என்கிற நிறுவனம் கொரோனோ வைரசை கட்டுப்படுத்தும் மருந்து கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்துள்ளார். ஆனாலும் இது பயன்பாட்டுக்கு வர சில காலம் ஆகும்.  

 

டாக்டர் சரவணன்

s

 

பொதுவாகவே வைரஸ் கிருமியானது உடலுக்குள் இரண்டு வாரங்கள் இருக்கும்.   அப்புறம் அந்த கிருமி தன்னாலேயே போய்விடும்.   இரண்டு வாரங்களுக்கு அந்த நோயாளியை பாதுகாக்க வேண்டும்.  சளி இருந்தால், மூச்சுத்திணறல் இருந்தால் தக்க மருத்துவம் செய்து அவரை பாதுகாத்தால் இரண்டு வாரங்களுக்கு பின் அவர் குணமடைந்துவிடுவார்.  

 

இப்போது, மால்கள், சினிமா தியேட்டர்கள், பள்ளி,கல்லூரிகளை இரண்டு வாரங்களுக்கு மூடச்சொன்னது கூட,  கொரோனா வைரசை இரண்டு வாரங்களுக்கு பரவ விடாமல் செய்துவிட்டால், நிரந்தரமாக அதை விரட்டிவிடலாம் என்று கணக்கில்தான்.  

 

இத்தாலியில் கொரோனாவால் அதிகம் பேர் உயிரிழக்கிறார்கள்.  அவர்கள் கண்ட்ரோல் இல்லாமல் பல இடங்களுக்கு பயணம் செய்வதால்தான் இந்த நிலைக்கு ஆளானார்கள்.  அது மாதிரி இங்கேயும் இருக்க கூடாது என்பதற்குத்தான் இரண்டு வார விடுமுறை.  அலுவலகங்களும் விடுமுறை அறிவிக்கப்பட்டு,  தொழிலாளர்கள் வீட்டில் இருந்தபடியே வேலை செய்யச்சொல்வதும் இதற்காகத்தான்.

 

கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.  வீடு, வாசலையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்’’என்று விளக்கம் அளித்தார்.   

 

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; உயரும் பலி எண்ணிக்கை!

Published on 01/01/2024 | Edited on 01/01/2024
Increasing Corona Virus; Rising toll

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு தற்போது கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகையான கொரோனாவான ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. 

இந்த நிலையில், நேற்று (31-12-23) வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.