Skip to main content

ஊரடங்கு உத்தரவால் கேள்விக்குறியான மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம்!

Published on 14/05/2020 | Edited on 14/05/2020

 

corona lockdown - Pottery workers Livelihood

 

மனித நாகரீகம் தோன்றுவதற்கு முன்பே  மனிதர்கள் குழுக்களாக வாழ்ந்தார்கள். அப்போதெல்லாம் சாப்பிடுவதற்கு காடுகளில் வளர்ந்திருந்த மரங்களிலிருந்து காய்கனிகளை பரித்துத் தின்று பசி போக்கினார்கள். நாடோடிகளாக திரிந்த அவர்கள் பிறகு குழுக்களாக சேர்ந்து ஆங்காங்கே  தங்க ஆரம்பித்தனர். அதிலும்  நதிக்கரையோரம் அதிகமான மக்கள் வசிக்க ஆரம்பித்தனர். அப்படி வாழ்ந்த மக்கள் கற்கள் ஒன்றோடு ஒன்று உரசும் போது ஏற்படும் தீப்பொறி பார்த்து நெருப்பை கண்டுபிடித்தார்கள். 


அதன்பிறகு காட்டு விலங்குகளை வேட்டையாடி அதனை நெருப்பில் சுட்டு சாப்பிட ஆரம்பித்தார்கள். அதேபோன்று காடுகளில் பூமிக்கு அடியில் இருந்த கிழங்குகளையும் மரத்தில் காய்த்த காய்களையும் நெருப்பில் சுட்டு சாப்பிட ஆரம்பித்தனர். பச்சையாக சாப்பிடும்போது இருந்த சுவையை விட தீயில் சுட்டு சாப்பிட்டதும், அவை மேலும் சுவையாக  இருந்ததை உணர்ந்த மனிதன், அதன் பிறகு உணவு வகைகளை  தீயில் வேக வைத்து  சாப்பிட ஆரம்பித்தான். அப்படி வேகவைப்பதற்கு  பாண்டங்கள் தேவைப்பட்டன. அதற்கு மண்ணை எடுத்து  குழைத்து  அதன் மூலம் பாண்டங்களை  தயாரித்து  பயன்படுத்தினான். அது நீண்ட காலம்  பயன்படுத்த முடியாமல் தண்ணீரில் மழையில்  கரைந்தும், உடைந்தும் போவதுமாக இருந்தது. 

 

 

corona lockdown - Pottery workers Livelihood

 


அந்த காலகட்டத்தில் வேட்டையாடுவதற்கு கத்தி ஈட்டி போன்ற ஆயுதங்களையும் மண்ணிலிருந்தே தோண்டி எடுத்து, அதை நெருப்பில் வைத்து  வாட்டி எடுத்து ஆயுதங்களாக பயன்படுத்தினார்கள். அவை வலிமையாக இருந்தது. பின்னர் அதை கொண்டு மிருகங்களை வேட்டையாடினான். இதனால் சந்தோஷம் அடைந்த மனிதன்  தான் சமைத்து சாப்பிட தேவைப்பட மண்பாண்டங்களை, அந்த நெருப்பில் சுட்டு பயன்படுத்த ஆரம்பித்தான். அப்படிப்பட்ட மண்பாண்டங்கள்  நீண்ட காலம் உடையாமல்  பயன்பட்டது. அதன்மூலம் உணவு வகைகளை  மாமிசத்தை காய்கறிகளை சமைத்து சாப்பிட ஆரம்பித்தான். இப்படி  மனித நாகரீகத்திற்கு முக்கிய அடையாளமாக இன்றளவும் உள்ளது மண்பாண்டங்கள். 

 


அதோடு அவன் உணவு தேவையை பூர்த்தி செய்வதற்கு மண்பாண்டங்களை அடுப்பு நெருப்பில் வைத்து சமைத்து சாப்பிட இன்றியமையாததாக மக்களுக்கு பயன்பட்டு வந்தது. மண்பாண்டங்களில் இருந்து மண்குடம், மண்சட்டி, மண்பானை  என சமைப்பதற்கும் தண்ணீர் குடிப்பதற்கும்  என  தங்கள் குடும்பத்தின் முழு தேவைகளுக்கும் மண்பாண்டங்கள் பயன்பட்டது. இப்படி  மனிதர்களுக்கு இன்றியமையாத மண்பாண்டங்களை தயாரிப்பவர்களுக்கு காலப்போக்கில் மண் குயவர்கள், மண் உடையார்கள் என்று பெயர் வந்தது. தற்போது மக்கள் பலர் அந்த மண்பாண்டங்களை வாங்க ஆர்வம் காட்டிவரும் நிலையிலும், அந்த தொழில் நசிந்து வருகிறது. இருப்பினும் கூட மண்பாண்டங்கள் இப்போதும் கூட தாயார் செய்யப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றனர். இதற்கிடையில் மண்பாண்டங்களை செய்பவர்கள் இந்த ஊரடங்கினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வருமானமின்றி சாப்பாட்டுக்கு மிகவும்  சிரமப்பட்டு வருகிறார்கள். 

 

 

 

corona lockdown - Pottery workers Livelihood

 


கடலூர் மாவட்டம், ராமநத்தம் அடுத்துள்ள அரங்கூர் மற்றம் வாகையூர் இரண்டு ஊர்களில் உள்ள சுமார் 30 குடும்பங்களை சேர்ந்த மண்பாண்டம் தொழில் செய்வோரின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. தமிழக அரசு கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முன்னிட்டு பிறப்பித்துள்ள 144 தடை உத்தரவு அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகவம் வெளிமாநிலத்தினருக்கு அளித்தது போல் தங்களுக்கு நிவாரண ஏற்பாடு செய்து தர வேண்டும் இல்லையேல், எங்களது பொருட்களை வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமாவது விற்பனை செய்திட அனுமதிவழங்கிட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.