Skip to main content

காங்கிரஸின் பலவீனமே, பாஜக -வின் பலம்..? எங்கு சறுக்கின காங்கிரஸின் திட்டங்கள்...

Published on 26/05/2019 | Edited on 26/05/2019

நடந்து முடிந்த 17வது மக்களவை தேர்தல் முடிவுகளில் 303 இடங்கள் பெற்ற பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. அதே நேரம் இந்தியாவின் பாரம்பரியம் மிக்க பழமையான கட்சியான காங்கிரஸ் தொடர்ந்து இரண்டாவது முறையாக எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்து மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

 

congress party anlaysis after loksabha election

 

 

55 இடங்களில் வென்றால் மட்டுமே எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தை காங்கிரஸ் தலைவர் பெற முடியும் என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி 52 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது. பாஜகவின் வளர்ச்சி, காங்கிரஸ் மீதான அதிருப்தி, ராகுலின் தலைமை என காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பலரும் பல காரணங்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு மூத்த தலைவர்களின் வாரிசு திணிப்பு அரசியலே முக்கிய காரணம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதாக செய்திகள் வெளியானது.

குறிப்பாக சில மாதங்களுக்கு முன்பு சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்ற ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கூட தற்போது மக்களவை தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளது. 25 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக 24 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 1 இடத்திலும் மட்டுமே வெற்றி பெற்றது. அதுபோல மத்திய பிரதேசத்தில் 29 மக்களவை தொகுதிகளில் 28 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள ஒரு இடத்தில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று சில மாதங்களில் நடந்த இந்த தேர்தலில் இப்படி தோல்வியை தழுவ முக்கிய காரணமாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலரின் வாரிசு திணிப்பே காரணம் என ராகுல் கருதுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் வாரிசு அரசியலை தாண்டி பலவும் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கான காரணங்களாக விவாதிக்கப்படுகின்றன.

தமிழகத்தை தவிர நாடு முழுவதும் மற்ற மாநிலங்களில் கூட்டணி விஷயத்தில் தவறான முடிவுகள், பிரச்சாரங்கள் வழியாக காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதை விடுத்து பாஜக மற்றும் மோடியின் வசை பாடும் கூட்டங்களாகவே அவற்றை நடத்தியது. மிக முக்கியமாக மோடி, அமித் ஷா, யோகி, ஸ்ம்ரிதி இரானி என பாஜக மாதிரியான நட்சத்திர பேச்சாளர்களை வைத்து மக்களை கவர தவறியது காங்கிரஸ் என்ற கருத்தும் நிலவி வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரங்கள் ராகுலையும், ப்ரியங்காவையுமே பெரும்பாலும் நம்பி இருந்தன. இதுவும் அக்கட்சிக்கு ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது. மேலும் பாஜகவின் முக்கிய பலமான அமித் ஷாவின் யோசனை, மோடியின் பிம்பம் போன்றவை காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடியாகவே அமைந்தன. ராகுலின் பண்பாடு மிக்க மேற்கத்திய அரசியல் கலாச்சாரத்தை கடந்து இந்திய அரசியலில் வேரூன்றி நிற்க இன்னும் நிறைய விஷயங்களை காங்கிரஸ் கட்சி தகவமைக்க வேண்டியுள்ளது என்பது நிதர்சனமே. 

 

 

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.

Next Story

“ஒரு கட்சி அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறை” - ராகுல் காந்தி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rahul Gandhi says This is the first time a party has attacked the Constitution

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. மேலும், ஆளும் பா.ஜ.க.வும், காங்கிரஸும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தோல்வி பயத்தில் நடுங்கும் நரேந்திர மோடி. அதனால் தான் தொடர்ந்து பொய்களை ஒன்றன் பின் ஒன்றாக கூறி வருகிறார். நரேந்திர மோடி ஏழைகளின் தலைவர் அல்ல, கோடீஸ்வரர்களின் தலைவர் என்பதை இந்திய மக்கள் புரிந்துகொண்டுள்ளனர் என்பது அவர்களுக்குத் தெரியும். இந்திய மக்கள் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க எழுந்து நிற்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.

தேர்தல் அவர் கையை விட்டு நழுவியது அவருக்குத் தெரியும். இந்திய வரலாற்றில் ஒரு அரசியல் கட்சி நேரடியாக அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்திய முதல் தேர்தல் இதுவாகும். நரேந்திர மோடி, 20-25 நபர்களுடன் சேர்ந்து, மக்களின் மிகப்பெரிய அதிகாரத்தை, அதாவது, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை அழிக்க விரும்புகிறார். அரசியலமைப்புச் சட்டம் வெறும் புத்தகம் அல்ல, அது ஏழைகளின் ஆயுதம், காங்கிரஸ் கட்சி இருக்கும் வரை உலகில் எந்த சக்தியாலும் இந்த ஆயுதத்தை மக்களிடமிருந்து பறிக்க முடியாது” எனப் பதிவிட்டுள்ளார்.