Skip to main content

எவ்வளவு சொல்லியும் கேட்கல... அப்புறம் இப்படி தானே ஆகும் புலம்பும் காங்கிரஸ்... தோல்வியால் அதிருப்தி!

Published on 05/11/2019 | Edited on 05/11/2019

"வெளக்கப் புடிச்சிக்கிட்டுப் போயி கெணத்துல விழுந்தானாம்' -தமிழக கிராமங்களில் பரவலான சொலவடை இது. அதே நிலைதான் தமிழக காங்கிரசின் நிலையும். காங்கிரசின் தற்கொலை பாலிஸியால் கையிலிருந்த வைரத்தை இழந்துவிட்டோம்' என ஆதங்கப்பட்ட முன்னாள் தென் மாவட்ட காங்கிரசின் மாஜி தலைவர்களில் ஒருவர் "அடையாளம் வேண்டாமே' என்று சொன்னதோடு, எடுத்துச் சொல்லியும் கேட்கவில்லை. இப்ப குத்துதே, கொடையுதே என்று அலறும், பின்னணியில் நடந்தவைகளை நம்மிடம் சொன்னார்.

 

congress



தமிழக காங்கிரசின் தலைவராக திருநாவுக்கரசர் செயல்பட்டபோதே தனது ஆதரவாளரான ரூபி மனோகரனை காஞ்சிபுரம் மாவட்டத் தலைவராக்கினார். எம்.பி. தேர்தல் நேரத்தில் ரூபி மனோகரன், குமரி தொகுதி வேட்பாளர் சீட் கேட்டதற்கு திருநாவுக்கரசரும் அவருக்குத் துணை நின்றார். "குமரியில் காங்கிரசுக்கு வாய்ப்பிருக்கிறது வெற்றி பெறலாம்' என்று காங்கிரசின் தமிழக கண்காணிப்புக் கமிட்டி மூலமாக சோனியா காந்திவரை கொண்டு சென்றார். இதையறிந்த நாங்குநேரியின் எம்.எல்.ஏ.வான வசந்தகுமாரும் தன் டெல்லி ஸோர்சுகள் மூலம், குமரியைப் பெற முயற்சி செய்திருக்கிறார். அங்கே சீட் கேட்பது தனது சம்பந்தியான ரூபி மனோகரன் என்று தெரிந்தும்கூட அவரை ஓவர்டேக் செய்ய முயற்சிகளை மேற்கொண்டார். இதற்கு எக்ஸ் எம்.பி. தனுஷ்கோடி ஆதித்தனும் துணைபோயிருக்கிறார். ஆனாலும் தளராத திருநாவுக்கரசர், "வசந்தகுமார் எம்.எல்.ஏ. சரிப்பட்டுவராது; ரூபி மனோகரனே பெஸ்ட் சாய்ஸ்' என்று அகில இந்திய காங்கிரசின் டெல்லி தலைமை வரை தெரியப்படுத்தியுள்ளாராம். இந்தச் சமயத்தில் திருநாவுக்கரசர் தமிழக தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு கே.எஸ்.அழகிரி தலைவராக்கப்பட்டார்.

 

congress



வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட வசந்தகுமார், தலைவர் அழகிரியைக் காம்ப்ரமைஸ் செய்திருக்கிறார். மட்டுமல்லாமல் காங்கிரசின் தமிழக பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் மற்றும் தேர்தல் கண்காணிப்பாளரான அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முக்கிய பொறுப்பாளர் சஞ்சய்தத் போன்றவர்களும் சரிக்கட்டப்பட்டார்கள். ஆனாலும் தொடர்ந்து போராடிய திருநாவுக்கரசர், "நாங்குநேரி எம்.எல்.ஏ.வுக்கு எம்.பி. வேட்பாளர் என்றால் அவர் ராஜினாமா செய்ய நேரிடும். காலியான அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும். தமிழகத்தின் நிலைமை வேறு தன்மையைக் கொண்டது. பொதுத்தேர்தல் என்றால் அதன் க்ளைமேட் வேறு. அதே க்ளை மேட் இடைத்தேர்தலில் இருக்காது.

தற்போது ஆட்சிப் பொறுப்பில் இருப்பது அ.தி.மு.க. இடைத் தேர்தலில் மொத்தமாக அங்கே குவிவார்கள். ஆளும் தரப்பு பண பலம், அதிகார பலம் அத்தனையையும் இறக்கும். அதனை மீறி நமது அணி ஜெயிப்பது கடினம். எனவே குமரியில் வேறு வேட்பாளரை நிறுத்துங்கள். ரூபி மனோகரன் அல்லது ஒத்த செல்வாக்குடையவர்களை தேர்வு செய்யுங்கள். அதை விடுத்து நம் கட்சியின் ஒரு எம்.எல்.ஏ. சீட்டை பலி கொடுத்து எம்.பி. வேட்பாளராக்குவது சரிப் பட்டு வராது. அது தற்கொலை பாலிஸிக்குச் சமம்' என்றெல்லாம் திருநாவுக்கரசர் அகில இந்தியத் தலைமையிடம் எடுத்துச் சொல்லியுள்ளாராம். அவரது வாதம், பேச்சுக்கள் புறக்கணிக்கப்பட்டன. நாங்குநேரித் தொகுதியின் கட்சித் தொண்டர்களும் இதையேதான் சொன்னார்கள், கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.


ஆனால் தயார்படுத்தப்பட்ட அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர்கள் வசந்தகுமார் பக்கமே மேளம் வாசித்திருக்கிறார்கள். அது சமயம் ப.சிதம்பரமும் பிரச்சினையில் சிக்கியிருந்தது அவர்களுக்கு வாய்ப்பாகிவிட்டது. சொன்னதுபோல் வசந்தகுமார் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து எம்.பி.யானார். காங்கிரஸ் ஒரு எம்.எல்.ஏ. சீட்டை இழந்தது. இது தேவை தானா. இதுதானே இப்ப நடந்தது. ஆனாலும் தேர்தலில் ரூபி மனோகரன் கூட்டணிக் கட்சியினர், சொந்தக் கட்சியினரின் தேர்தல் செலவுகளுக்குக் குறையே வைக்க வில்லை. அவரால் முடிந்த அளவுக்கு எதிர் அணியை ஈடுசெய்யும் வகையில் மோதவும் செய்தார். பணப் பொறுப்பைக் கூட திருநாவுக்கரசரின் நம்பிக்கைக்குரியவரிடமே ஒப்படைத்திருந்தாராம் ரூபி மனோகரன்.


ஆனால் இதில், வெளியே தெரியாத சம்பவங்கள்கூட நடந்திருக்கின்றன. குமரியின் அந்த எம்.பி. கூட, நாங்குநேரி பகுதிகளில் தேர்தல் பொருட்டு, "சி'’அளவிலான பெரிய அமௌண்ட்டை, தான் செலவு செய்ததாகப் பில்களைத் தர... அதுவும் மறு பேச்சின்றி செட்டில் செய்யப்பட்டிருக்கிறது. தேர்தல் தலைமைப் பொறுப்பிற்காக திண்டுக்கல்லிருந்து வந்த தி.மு.க.வின் எக்ஸ் அமைச்சரின் லாட்ஜ் வாடகை உட்பட அனைத்து செலவுகளுக்குமான "10 எல்' பில்களும் தடையின்றி செட்டிலாகியிருக்கு.

இந்த அளவுக்குப் பொருளாதாரம், மனித சக்திகள் வீணாகியுள்ளன. இது அவசியமா? ஆராய்ந்து பார்க்காததன் விளைவு... ஒரு எம்.எல்.ஏ. சீட்டை அகில இந்தியக் காங் கிரசே தாம்பாளத்தில் வைத்து எதிரணிக்குத் தாரை வார்த்திருக்கும் கொடுமை, இதுவரை நடந்த தேர்தலில் நடக்காத விஷயம்'' என ஆதங்கப்பட்டார்.


 

 

Next Story

“சில உண்மைகளை சொன்னதால் எதிர்கட்சிகள் பீதியடைந்துள்ளது” - பிரதமர் மோடி விமர்சனம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
PM Modi says Opposition parties panics because some truths have been told

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருக்கும் நிலையில், பிரதமர் மோடியும் அங்கு பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதற்கிடையில் அவர் தேர்தல் பரப்புரையில் பேசியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துக்கள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

PM Modi says Opposition parties panics because some truths have been told

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம், டோங் பகுதியில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று (23-04-24) நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, “காங்கிரஸ் ஆட்சியில் ஹனுமான் பாடலைக் கேட்பது கூட குற்றமாகிவிடும். இந்த முறை ராம நவமி அன்று முதல் முறையாக ராஜஸ்தானில் ஷோபா யாத்திரை ஊர்வலம் நடத்தப்பட்டது. ராஜஸ்தான் போன்ற மக்கள் ராம்-ராம் எனக் கோஷமிடும் மாநிலத்தில் ராம நவமிக்கு காங்கிரஸ் தடை விதித்துள்ளது.

இன்று அனுமன் ஜெயந்தி அன்று உங்களுடன் பேசும் போது, சில நாட்களுக்கு முன் எடுத்த ஒரு படம் நினைவுக்கு வருகிறது. சில நாட்களுக்கு முன், காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில், கடையில் அமர்ந்து ஹனுமான் பாடலை கேட்டதால், கடைக்காரர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டார். நேற்று முன்தினம் ராஜஸ்தானில், நான் சில உண்மையை நாட்டுக்கு முன் வைத்தேன். ஒட்டுமொத்த காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளும் பீதியடைந்து உள்ளது. உங்களின் சொத்துக்களை அபகரித்து, சிறப்பு வாய்ந்தவர்களுக்குப் பங்கிட காங்கிரஸ் சதி செய்கிறது என்ற உண்மையை நான் முன்வைத்தேன்.

அவர்களது அரசியலை நான் அம்பலப்படுத்தியதும், அவர்கள் மிகவும் கோபமடைந்து, அவர்கள் என்னை அவதூறாகப் பேச ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் ஏன் உண்மையைக் கண்டு பயப்படுகிறார்கள் என்பதை நான் காங்கிரஸிடம் இருந்து தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அவர்கள் ஏன் தங்கள் கொள்கையை இவ்வளவு மறைக்கிறார்கள். நீங்களே கொள்கையை உருவாக்கியபோது, இப்போது அதை ஏற்க ஏன் பயப்படுகிறீர்கள். உங்களுக்கு தைரியம் இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று கூறினார்.

Next Story

கர்நாடக முதல்வர் சித்தராமையா போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Karnataka Chief Minister Siddaramaiah struggle

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய வறட்சி நிவாரணம் வழங்காததை கண்டித்து அம்மாநில முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பெங்களூரு விதான சவுதாவில் உள்ள காந்தி சிலை முன்பு இன்று (23.04.2024) போராட்டம் நடத்தினர். அப்போது மத்திய அரசு மாற்றாந்தாய் போக்குடன் நடத்துகிறது என கார்நாடக அரசு சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இது குறித்து கர்நாடக மாநில முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சித்தராமையா கூறுகையில், “காங்கிரஸ் கட்சி சார்பில், மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தினோம். நரேந்திர மோடியும், அமித்ஷாவும் கர்நாடக விவசாயிகளை வெறுக்கிறார்கள். கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி மத்திய அரசுக்கு வறட்சி குறித்து குறிப்பாணை (memorandum) கொடுத்தோம். பிறகு மத்திய குழு வந்தது.  அதன் பின்னர் மாநிலத்தின் 223 தாலுகாக்களில் வறட்சி நிலவி வருவதை அமித் ஷா ஆய்வு செய்தார். இதுவரை காலதாமதமாக விவசாயிகளுக்கு 650 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கியுள்ளது. கர்நாடகாவுக்கு உரிய நிவாரணம் வழங்காததற்கு நிர்மலா சீதாராமனும், நரேந்திர மோடியும் தான் காரணம்” எனத் தெரிவித்தார்.