Skip to main content

"அதிமுக ஆட்சி இருக்கும் நினைப்பிலேயே மோடி இருக்கிறார்... நடைபெறுவது திமுக ஆட்சி" - செல்வப்பெருந்தகை பேச்சு!

Published on 09/02/2022 | Edited on 09/02/2022

 

பர


நீட் விவகாரம் தமிழகத்தில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தமிழக சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை கிட்டதட்ட 5 மாதங்களாக நடவடிக்கை எடுக்காமல் இருந்த ஆளுநர், கடந்த வாரம் தமிழக அரசுக்கே அதனை திருப்பி அனுப்பினார். திருப்பி அனுப்பியதோடு மட்டுமல்லாமல் இந்த மசோதா தமிழக மக்களுக்கு எதிராக இருப்பதாகவும் அவர் அரசுக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவை தலைவர் செல்வப்பெருந்தகையிடம் இதுகுறித்து நாம் கேட்டபோது, அவர் தெரிவித்ததாவது, "ஆளுநர் செயல்படுவதற்கு என்று சில வழிமுறைகள் இருக்கிறது. அதன்படிதான் அவர்கள் செயல்பட வேண்டும். அதில் தவறு ஏற்படும் பட்சத்தில் அவர்களை நோக்கி கேள்வி எழுவதை யாராலும் தடுக்க இயலாது. இந்த மசோதா என்பது கல்வி உரிமை சம்பந்தப்பட்டது. அதாவது பொதுப்பட்டியலில் வரக்கூடியது. மாநில பட்டியலில் உள்ளதை பற்றி மாநில அரசு சட்டம் இயற்றினால் அதைப்பற்றி கேள்வி கேட்க ஆளுநருக்கு உரிமை இருக்கிறது. இது அரசியல் அமைப்பு சட்டம் 201 பிரிவில் கூறப்பட்டுள்ளது. 

 

ஆனால் பிரிவு 200ல் தெளிவாக பொதுப்பட்டியலில் உள்ளவற்றை பற்றி ஆளுநர் எந்த விளக்கமும் கேட்கக்கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. அவர் நேரடியாக அதை குடியரசுத்தலைவருக்கு அனுப்ப வேண்டும். அதைத்தாண்டி இதில் ஆளுநருக்கு வேறு எந்த வேலையும் கிடையாது. இதில் இறுதி முடிவை குடியரசுத்தலைவர் எடுப்பார். இதில் எவ்வித விளக்கமோ, தயக்கமோ ஆளுநருக்கு ஏற்பட தேவையில்லை. குறிப்பாக ஏ.கே ராஜன் அறிக்கை தவறாக இருக்கிறது என்று கூறுவதெல்லாம் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. குறிப்பாக இதைவிட அதிக தரவுகளை தமிழக அரசு ஆளுநருக்கு தந்திருக்க வேண்டும் என்று அதிமுக கூறியதாக சொல்கிறீர்கள். வேறு என்ன தரவுகளை அவர்கள் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்று கூற வேண்டும். இன்றைக்கும் ஏ.கே ராஜன் அறிக்கை பொதுவெளியில் இருக்கிறது. யார் வேண்டுமானாலும் அதைப் படித்து அதன் முக்கிய சாராம்சத்தை அறிந்துகொள்ள முடியும். எனவே தட்டிக்கழிக்க வேண்டும் என்று முடிவெடுத்த பின்னர் அவர்கள் எதை வேண்டுமானாலும் கூறுவார்கள். ஆனால் அறிவார்ந்த தமிழக மக்கள் அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 

 

அவர்கள் கடந்த 8 ஆண்டுகளாக இருந்ததைப் போல இந்த அரசு இருக்கும் என்று நினைக்கிறார்கள். இது திமுக அரசு, மோடி அவர்கள் இதை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். அதிமுக அரசு நினைவிலேயே தமிழகத்தை அவர்கள் அணுகக் கூடாது. எனவே மத்திய அரசு அரசியலமைப்பு சட்டத்தை வைத்துக்கொண்டு விளையாடக்கூடாது. ஆளுநருக்கு தகுந்த அறிவுரை கூறி, அவரை திரும்பப்பெற முயற்சிக்க வேண்டும். இந்த நீட் தேர்வை காங்கிரஸ் கொண்டு வந்ததை போல இன்றைய பாஜக தலைவர் கூறியுள்ளதை பற்றிக் கேட்கிறீர்கள். அண்ணாமலைக்கு அரசியலும் தெரியவில்லை, படிக்கவும் தெரியவில்லை. நிறைய படித்து தெரிந்து கொள்ளுங்கள் என்று தான் நாம் அண்ணாமலைக்கு அறிவுரை கூற வேண்டும். எனவே வாயில் வந்ததையெல்லாம் ஆதாரம் இல்லாமல்  அவர்கள் பேசக்கூடாது. இந்த நீட் விவகாரத்தை பொறுத்த வரையில் முதல்வர் நல்ல முறையில் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்து வருகிறார். நீட் தேர்வு விவகாரத்தில் நிச்சயம் வெற்றி கிட்டும்" என்றார். 

 

 

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.