Skip to main content

வயது ஒன்னே முக்கால்... வார்த்தைகள் 500... கின்னஸ் விருதுக்கு காத்திருக்கும் கைக்குழந்தை!

Published on 23/08/2019 | Edited on 23/08/2019

ஒரு குழந்தை பேசும் முதல் வார்த்தை "அம்மா". ஆனால் அந்த அம்மா என்ற வார்த்தையையும் தனது மழலை மொழியில் தத்தி தத்தி பேச ஆரம்பிக்கும் போது அந்த குழந்தையின் வயது இரண்டாக இருக்கும் அல்லது இரண்டு வயதை கடந்திருக்கும். 

ஆனால் கோவையை சேர்ந்த வெண்பா என்ற ஒன்னே முக்கால் வயதான பெண் குழந்தை தனது ஒன்னே முக்கால் வயதில் 500 க்கும் மேற்பட்ட ஆங்கில வார்த்தைகளை கூறி அசத்தி வருகிறாள். இதற்காக " இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், பெஸ்ட் ஆப் இந்தியா, வேர்ல்ட் இந்தியா ரெக்கார்ட்ஸ்"உள்ளிட்ட சாதனைகளுக்கான விருதை பெற்றுள்ள வெண்பாவின் பெயர் "கின்னஸ் ரெக்கார்ட்" க்கும் பரிந்துரைக்கப்பட்டு வெண்பாவிற்கு அடுத்த மாதம் கின்னஸ் விருது வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 A child waiting for the Guinness Award

 

கோவை சவுரிபாளையம் பகுதியை சேர்ந்த சரவணகுமார், சுகன்யா தம்பதிகளின் 1 3/4 வயதான  பெண் குழந்தைதான் வெண்பா. அதீத ஞாபக சக்தி உடைய இந்த குழந்தை 500க்கும் மேற்பட்ட வார்த்தைகளை ஞாபகமாக கொண்டு, படங்களில் உள்ள பழங்கள், காய்கறிகள், விலங்குகள், தேசிய தலைவர்களின் பெயர்களை தனது மழலை மொழியில் துள்ளியமாக கூறும் வெண்பா, பெயர்களை கூறினால் அதற்கான படங்களை அடையாளம் கண்டு எடுத்து காட்டி அசத்துகிறாள். அது மட்டுமல்லாமல், இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களின் பெயர்களை கூறினாள் அதன் தலை நகரங்களின் பெயர்களை தங்கு தடையின்றி, பிழை இல்லாமல் தனது கொஞ்சும் மழலை மொழியில் கூறி ஆச்சரியபடுத்துகிறாள் வெண்பா. 

அதுமட்டுமல்லா மத்திய அமைச்சர்களின் பெயர்களை ஓரளவிற்கு இப்போது கூறும் வெண்பா, திருக்குறளையும் தனது பெற்றோரிடம் இருந்து கற்று ஒப்புவிக்கிறாள்.இதற்காகதான் வெண்பாவிற்கு முக்கிய விருதுகளான "இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், "பெஸ்ட் ஆஃப் இந்தியா", "வேர்ல்ட் இந்தியா ரெக்கார்ட்ஸ்" போன்ற மிகச்சிறந்த விருதுகளை வெண்பா பகுழந்தையின் வெண்பாவின் சிறப்பம்சமே இந்தியாவில் உள்ள 29 மாநிலத்தின் தலை நகரங்களை கூறி தனது ஞாபக சக்தியால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறாள். இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் உள்ளது, அதன் தலை நகரங்கள் எவை என்று கேட்டால் நமக்கே சொல்ல தெரியாது. ஆனால் வெண்பாவோ மாநிலத்தில் பெயர்களை சொன்னாலே அதன் தலை நகரத்தின் பெயரை பிழை இல்லாமல் கூறி நம்மை ஆச்சரியத்தின் எல்லைக்கே  அழைத்து செல்கிறாள்.

வெண்பா ஒரு வயதாக இருக்கும் போது அவளுக்கு விளையாடுவதற்கு பொம்மைகள் வாங்கி கொடுத்த போதும், விலங்குகள், பழங்கள், காய்கறிகள், விமானம், பேருந்து, ரயில், உள்ளிட்ட படங்களை உள்ளடக்கிய சார்டுகள் மீது தான் வெண்பாவின் கவனம் சென்றுள்ளது. அதில் உள்ள படங்களை கை வைத்து காட்டி தனது சுட்டி சேட்டைகளால் தனது அம்மாவிடம் விளக்கம் கேட்டிருக்கிறாள் வெண்பா. அவளின் ஆர்வத்தையும், ஞாபக சக்தியையையும் புரிந்து கொண்ட வெண்பாவின் பெற்றோர், அதன் பெயர், அதன் பயன்பாடு குறித்து கூற, அதை ஒரே ஒரு முறை கேட்டுக்கொண்ட பின் அவளாகவே அதனை கூற ஆரம்பித்துவிட்டாள்.

 

 A child waiting for the Guinness Award


இரண்டு வயது நிரம்பிய குழந்தைகளே அம்மா என்று அழைக்க முடியாமல் தவிக்கும் இந்த கால கட்டத்தில் ஒன்னே முக்கால் வயதான வெண்பாவின் இந்த சாதனை போற்றுதலுக்குறியதே.பல குழந்தைகள் ஒரு நாட்டின் தேசிய கொடியை காட்டினால், அந்த நாட்டின் பெயரை கூறுவது வழக்கம் தான். அதற்காக பல விருதுகளையும் வாங்கி இருக்கிறார்கள். ஆனால் அந்த குழந்தைகள் மூன்று முதல் ஐந்து வயதுள்ள குழந்தைகளாகவோ, அல்லது ஐந்து வயது மேற்பட்ட குழந்தைகளாகவோ இருந்துள்ளனர்.

ஆனால், உலக அளவில் இன்பேண்ட் " INFANT" என்றால் அது இரண்டு வயதிற்குள் இருக்கும் குழந்தைகள் தான். அந்த வகையில் இன்பேண்ட் குழந்தை இவ்வளவு பெரிய சாதனை படைத்திருப்பது வெண்பாதான். இந்த வெண்பாதான் அடுத்த மாதம் கின்ன்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்சிலும் இடம் பெற போகிறாள். இந்த வயதிலேயே இவ்வளவு நியாபக திறன் கொண்டு விளங்கும் வெண்பா ஒரு " PRIDE OF COIMBATORE" என்று அழைக்கப்படுவாள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் ஒரு சாதனையாளன் இருப்பான். அதனை கண்டறிய வேண்டியது பெற்றோர்கள் தான். வெண்பாவின் பெற்றோர், தக்க சமயத்தில் அவளது ஆர்வத்தையும், திறமையையும், ஞாபக சக்தியையும் புரிந்து கொண்டு ஒன்னே முக்கால் வயதில் இத்தனை விருதுகள், அடுத்ததாக அடுத்த மாதம் கின்னஸ் விருது பெற வைக்க அளவிற்கு அவளை ஊக்க படுத்தியுள்ளனர். 

இன்றைய சூழ்நிலையில், பிறந்த குழந்தையின் கையில் செல்போன்களை கொடுத்து விட்டு, ஒன்று வீட்டு வேலைகளை பார்ப்பார்கள். அல்லது குழந்தைக்கு சோறு ஊட்டும் போது செல்போனை காட்டி சோறு ஊட்டுவார்கள். ஆனால், வெண்பாவோ வீட்டு சுவற்றில் ஒட்டி வைத்துள்ள சார்டுகளை காட்டினால் மட்டுமே அம்மா சொல்லும் பேச்சை கேட்கிறாள்.

வெண்பாவை போன்ற பெண் குழந்தைகளை நாம்  ஊக்குவித்தால் நமக்கு அடுத்து வரும் பெண் தலைமுறைகளை நல்ல ஒரு முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல அனைத்து தாய் தந்தையர்களும்  தங்களது குழந்தைகளையும் தயார் செய்வார்கள்.அதற்கு வெண்பா கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்து வழி வகுப்பாள் என்பதில் சந்தேகம் இல்லை.

 

 




 

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.

Next Story

தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
6-year-old boy lost their live in private college bus crash

நாமக்கல்லில் தனியார் கல்லூரி பேருந்து மோதி ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் உள்ள  தோட்ட வாடி கிராமத்தில் உள்ள பேருந்து நிலைய பகுதியில் கூட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் தன்னுடைய 6 வயது மகனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்திற்குப் பின்புறம் வந்த தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 வயது சிறுவன் தலை நசுங்கி உயிரிழந்தார். தந்தை சதீஷ்குமாரின் கை முறிந்து துண்டானது.

இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்த, உடனடியாக அங்கு வந்த போலீசார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி  பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பகுதிகளில் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாகவும், அந்த நேரத்தில் தனியார் பேருந்துகள் மிகுந்த வேகத்துடன் செல்வதால் சாலைத் தடுப்பு, வேகத்தடை ஆகியவற்றை அமைத்துக் கொடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்செங்கோடு காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.