Skip to main content

சென்னை மாநகர போலீஸ் கமிஷனரின் மனிதாபிமான நடவடிக்கை..!

Published on 06/04/2019 | Edited on 06/04/2019

சூடான் நாட்டைச் சேர்ந்த முகமது முஸ்தபா, இவர் தன் மேல் படிப்பிற்காக தனது நாட்டிலிருந்து தமிழகத்திலுள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் தனியார் கல்லூரியில் மேற்படிப்பை தொடர ஒரு ஆண்டு காலம் விசாவில் கடந்த 2016-ல் இந்தியாவுக்குள் வந்தார். தனது படிப்பில் கவனம் செலுத்தாமல் சுற்றித் திரிந்ததால் சில பாடங்களில் தோல்வி அடைந்து அரியர்ஸ் வைத்துள்ளார். இதை சரிசெய்து தனது படிப்பை முடித்துவிட்டு சொந்த நாட்டுக்கு செல்ல மேலும் 4 மாதம் கடந்து விட்டது. அதேசமயம் அவரது விசா காலம் முடிந்து அதிக நாட்கள் தங்கியதால் அபராத தொகை கட்டிவிட்டு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டார். மேலும் படிப்பு செலவிற்காக, அவர் திரும்பிச் செல்ல வைத்திருந்த விமான டிக்கெட் செலவுக்கான தொகையும் செலவு செய்து விட்டதால் வேறு வழி இல்லாமல் சுற்றித் திரிந்துள்ளார்.

 

mohamad mustafa

 

பின்னர் டிக்கெட் எடுக்காமல் ரயில் மூலம் ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை வந்த முகமது முஸ்தபா பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்துள்ளார். சரியான வேலை கிடைக்காததாலும் இவர் இஸ்லாமியர் என்பதால் அப்பகுதியில் உள்ள பள்ளிவாசல்களில் பிச்சை எடுத்து அதில் கிடைக்கும் பணத்தில் உணவருந்தி வந்துள்ளார். சொந்த நாட்டுக்கு செல்ல பணம் இல்லாத காரணத்தால் வழிப்பறி செய்ய முடிவு செய்து, சில சிறு சிறு தவறுகளை செய்து வந்துள்ளார். 


இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் சென்னை மெரினா கடற்கரையில் சில மாணவர்களிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டபோது பொது மக்கள் மடக்கிப்பிடித்து மெரினா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். வழக்குப்பதிவு செய்த காவல் ஆய்வாளர் ஜெயராஜ் நீதிமன்ற உத்தரவின்படி அவரை சிறையில் அடைத்தனர். நான்கு மாதம் சிறை தண்டனை முடிந்து வெளியே வந்த முகமது முஸ்தபா மீண்டும் செய்வதறியாத அப்பகுதியில் சுற்றி வந்துள்ளார். இதனை கண்காணித்த உளவுத்துறை சென்னை மாநகர கமிஷனருக்கு தகவல் அனுப்ப சம்பந்தப்பட்ட நபரை பிடித்து வர மெரினா காவல் ஆய்வாளர் ஜெயராஜ் மற்றும் உதவி ஆய்வாளர் தினேஷ்குமார் உள்பட 4 பேர் கொண்ட தனிப்படை முகமது முஸ்தபாவை கண்டுபிடித்தனர். இந்த நிலையில் அவர் ஏன் தன் சொந்த நாட்டிற்கு போகவில்லை என்று விசாரணை நடத்தினர் அதில் அவர் சொந்த நாடான சூடானுக்கு செல்ல சில சட்ட சிக்கல் இருந்தது, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் நடவடிக்கையால் மெரினா காவல் ஆய்வாளர் ஜெயராஜ் மற்றும் உதவி ஆய்வாளர் தினேஷ் குமார் ஆகியோரிடம் முகமது முஸ்தபா சொந்த நாடான சூடானில் திரும்ப நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். 
 

அதன்பேரில் டெல்லியில் உள்ள சூடான் தூதரகத்தில் நோ அப்ஜெக்ஷன் சர்டிபிகேட் பெற்று சென்னை சாஸ்திரி பவனில் உள்ள இந்திய குடிமையியல் துறையிடம் முறையான அனுமதி பெற்று, பின்னர் அவர் சொந்த நாடு திரும்ப விமான டிக்கெட் உள்பட 60 ஆயிரம் ரூபாய் ஸ்பான்சர் பெற்று சனிக்கிழமை காலை அவன் தாய் நாட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிகழ்வை என் வாழ்நாளில் மறக்க முடியாது என்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் மற்றும் ஆய்வாளர் ஜெயராஜ் உதவி ஆய்வாளர் தினேஷ் குமார் ஆகியோருக்கு நான் வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டுள்ளேன் என்றும் மூன்று வருடம் கழித்து நான் சொந்த ஊர் செல்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் நான் சொந்த ஊர் செல்வேனா தாய்நாடு அடைவேனா அல்லது இந்தியாவிலேயே இறந்துபோய் இருப்பேனா என்ற குழப்பத்தில் இருந்தேன். என்னை மீட்டு நான் செய்த தவறை மன்னித்து என்னை சென்னை போலீசார் என் தாய் நாட்டுக்கு செல்லவும் எனக்கு உதவி செய்ததை என் உயிர் உள்ளவரை மறக்க மாட்டேன் என்று நெகிழ்ச்சியாக தெரிவித்து மகிழ்ச்சியுடன் தாய்நாட்டுக்கு விமானத்தில் பறந்தார் முகமது முஸ்தபா. சென்னை மாநகர காவல் ஆணையர் மற்றும் போலீசாரின் இந்த நடவடிக்கைகள் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

 

 

 

Next Story

பார் மேற்கூரை இடிந்து 3 பேர் உயிரிழப்பு; 12 பேர் மீது வழக்கு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Bar roof collapses, 3 lost live Case against 12 people

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமாக இயங்கி வந்த பாரின் முதல் தளத்தின் மேற்கூரை நேற்று இரவு திடீரென யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. இதில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்தனர். உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுப் பிரேதப் பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த விபத்து குறித்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக் கொண்டுள்ளதாகத் தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.

தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின் போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாக இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் முதற்கட்டமாக 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள அபிராமபுரம் போலீசார், பாரின் மேலாளர் சதீஷ் உட்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

கேளிக்கை விடுதி விபத்து; மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது.

இது விபத்து குறித்து சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு கிளப்பில் உள்ள மெஸ்ஸானைன் தளம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக விளக்கமிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் அல்ல என்பதை  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தெளிவுபடுத்த விரும்புகிறது.

ஏனெனில் மெட்ரோ ரயில் பணியானது, விபத்து நிகழ்ந்த கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் உள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரிகளுக்கு உதவி செய்ய உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவிக்க விரும்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.