Skip to main content

சென்னை மாநகர போலீஸ் கமிஷனரின் மனிதாபிமான நடவடிக்கை..!

Published on 06/04/2019 | Edited on 06/04/2019

சூடான் நாட்டைச் சேர்ந்த முகமது முஸ்தபா, இவர் தன் மேல் படிப்பிற்காக தனது நாட்டிலிருந்து தமிழகத்திலுள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் தனியார் கல்லூரியில் மேற்படிப்பை தொடர ஒரு ஆண்டு காலம் விசாவில் கடந்த 2016-ல் இந்தியாவுக்குள் வந்தார். தனது படிப்பில் கவனம் செலுத்தாமல் சுற்றித் திரிந்ததால் சில பாடங்களில் தோல்வி அடைந்து அரியர்ஸ் வைத்துள்ளார். இதை சரிசெய்து தனது படிப்பை முடித்துவிட்டு சொந்த நாட்டுக்கு செல்ல மேலும் 4 மாதம் கடந்து விட்டது. அதேசமயம் அவரது விசா காலம் முடிந்து அதிக நாட்கள் தங்கியதால் அபராத தொகை கட்டிவிட்டு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டார். மேலும் படிப்பு செலவிற்காக, அவர் திரும்பிச் செல்ல வைத்திருந்த விமான டிக்கெட் செலவுக்கான தொகையும் செலவு செய்து விட்டதால் வேறு வழி இல்லாமல் சுற்றித் திரிந்துள்ளார்.

 

mohamad mustafa

 

பின்னர் டிக்கெட் எடுக்காமல் ரயில் மூலம் ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை வந்த முகமது முஸ்தபா பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்துள்ளார். சரியான வேலை கிடைக்காததாலும் இவர் இஸ்லாமியர் என்பதால் அப்பகுதியில் உள்ள பள்ளிவாசல்களில் பிச்சை எடுத்து அதில் கிடைக்கும் பணத்தில் உணவருந்தி வந்துள்ளார். சொந்த நாட்டுக்கு செல்ல பணம் இல்லாத காரணத்தால் வழிப்பறி செய்ய முடிவு செய்து, சில சிறு சிறு தவறுகளை செய்து வந்துள்ளார். 


இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் சென்னை மெரினா கடற்கரையில் சில மாணவர்களிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டபோது பொது மக்கள் மடக்கிப்பிடித்து மெரினா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். வழக்குப்பதிவு செய்த காவல் ஆய்வாளர் ஜெயராஜ் நீதிமன்ற உத்தரவின்படி அவரை சிறையில் அடைத்தனர். நான்கு மாதம் சிறை தண்டனை முடிந்து வெளியே வந்த முகமது முஸ்தபா மீண்டும் செய்வதறியாத அப்பகுதியில் சுற்றி வந்துள்ளார். இதனை கண்காணித்த உளவுத்துறை சென்னை மாநகர கமிஷனருக்கு தகவல் அனுப்ப சம்பந்தப்பட்ட நபரை பிடித்து வர மெரினா காவல் ஆய்வாளர் ஜெயராஜ் மற்றும் உதவி ஆய்வாளர் தினேஷ்குமார் உள்பட 4 பேர் கொண்ட தனிப்படை முகமது முஸ்தபாவை கண்டுபிடித்தனர். இந்த நிலையில் அவர் ஏன் தன் சொந்த நாட்டிற்கு போகவில்லை என்று விசாரணை நடத்தினர் அதில் அவர் சொந்த நாடான சூடானுக்கு செல்ல சில சட்ட சிக்கல் இருந்தது, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் நடவடிக்கையால் மெரினா காவல் ஆய்வாளர் ஜெயராஜ் மற்றும் உதவி ஆய்வாளர் தினேஷ் குமார் ஆகியோரிடம் முகமது முஸ்தபா சொந்த நாடான சூடானில் திரும்ப நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். 
 

அதன்பேரில் டெல்லியில் உள்ள சூடான் தூதரகத்தில் நோ அப்ஜெக்ஷன் சர்டிபிகேட் பெற்று சென்னை சாஸ்திரி பவனில் உள்ள இந்திய குடிமையியல் துறையிடம் முறையான அனுமதி பெற்று, பின்னர் அவர் சொந்த நாடு திரும்ப விமான டிக்கெட் உள்பட 60 ஆயிரம் ரூபாய் ஸ்பான்சர் பெற்று சனிக்கிழமை காலை அவன் தாய் நாட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிகழ்வை என் வாழ்நாளில் மறக்க முடியாது என்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் மற்றும் ஆய்வாளர் ஜெயராஜ் உதவி ஆய்வாளர் தினேஷ் குமார் ஆகியோருக்கு நான் வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டுள்ளேன் என்றும் மூன்று வருடம் கழித்து நான் சொந்த ஊர் செல்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் நான் சொந்த ஊர் செல்வேனா தாய்நாடு அடைவேனா அல்லது இந்தியாவிலேயே இறந்துபோய் இருப்பேனா என்ற குழப்பத்தில் இருந்தேன். என்னை மீட்டு நான் செய்த தவறை மன்னித்து என்னை சென்னை போலீசார் என் தாய் நாட்டுக்கு செல்லவும் எனக்கு உதவி செய்ததை என் உயிர் உள்ளவரை மறக்க மாட்டேன் என்று நெகிழ்ச்சியாக தெரிவித்து மகிழ்ச்சியுடன் தாய்நாட்டுக்கு விமானத்தில் பறந்தார் முகமது முஸ்தபா. சென்னை மாநகர காவல் ஆணையர் மற்றும் போலீசாரின் இந்த நடவடிக்கைகள் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

 

 

 

Next Story

சென்னையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Traffic change in Chennai for a year

சென்னை தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் நாளை (27.04.2024) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2025) வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றுப்பாதைகளில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் அனுகு (சர்வீஸ் ரோடு) சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராயர் சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். 

Traffic change in Chennai for a year

பர்கிட் சாலை, மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம். 

Traffic change in Chennai for a year

சிஐடி நகர் 1ஆவது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டானாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். எனவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

சென்னை விமான நிலையத்தில் கிடந்த தங்கம்; சுங்கத்துறையினர் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Gold found at Chennai airport; Customs investigation

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலைய குப்பைத் தொட்டியில் கேட்பாராற்று கிடந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பைத் தொட்டியில் கிடந்த 1.2 கிலோ தங்க நகைகளைக் கைப்பற்றிய சுங்கத் துறையினர், சிசிடிவியை பார்க்காதபடி நகையை குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லும் நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் சோதனை நடத்திய போது, தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.