Skip to main content

பேராசிரியர்களைக் காப்பாற்ற காய் நகர்த்தும் ஐஐடி...  விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Published on 02/12/2019 | Edited on 02/12/2019

"ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா தற்கொலைக் கொடூரம் நிகழ்ந்து 20 நாட்களுக்கு மேலாகிவிட்டன. ஆனால், பாதிக்கப்பட்ட பாத்திமாவின் குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை செய்யும் காவல் துறையோ, குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடம் விசாரணையை தீவிரப் படுத்தவில்லை' என்ற குற்றச்சாட்டு தொடர்ந்துகொண்டிருக்கிறது.

 

fathima



இந்நிலையில், 2019 நவம்பர் 27-ந் தேதி பாத்திமாவின் சகோதரி ஆயிஷா, தந்தை அப்துல் லத்தீப் உள்ளிட்ட உறவினர்கள் மீண்டும் சென்னை வந்து மத்திய குற்றப் பிரிவு போலீஸாரிடம் வாக்குமூலம் கொடுத்து விட்டு சென்றிருக்கிறார்கள். இதுகுறித்து, பாத்திமாவின் சகோதரி ஆயிஷாவிடம் நாம் கேட்டபோது,  எனது சகோதரியின் மரணத்துக்குக் காரணமான துணைப்பேராசிரியர் சுதர்ஷன் பத்மநாபன் உள்ளிட்ட 3 பேர் பற்றி செல்போனில் டைப் செய்து வைத்திருந்த தகவல்கள் அழிக்கப்பட்டு விடக்கூடாதுன்னு தான் அவளது செல் போனில் புதிய பாஸ்வேர்டு போட்டு லாக் செய்து விட்டு கோட்டூர்புரம் போலீஸிடம் ஒப்படைத்து விட்டுப் போனேன். அந்த, செல்போன் சென்னை மயிலாப்பூரிலுள்ள தமிழக அரசின் தடயவியல் பரிசோதனைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அதனாலதான், நேர்ல வந்து காவல்துறை முன்னிலையில அந்த பாஸ்வேர்டை நீக்கிக் கொடுத்தேன். பரிசோதனை முடிவை கோர்ட்டுக்கு அனுப்பிவிடுவோம்னு சொல்லிட்டாங்க.
 

fathima



பிறகு, அங்கிருந்து புறப்பட்டு சென்னை மாநகர கமிஷனர் அலுவலகத்திலுள்ள மத்திய குற்றப்பிரிவு (சி.சி.பி.) காவல்துறை கூடுதல் கமிஷனர் ஈஸ்வரமூர்த்தி சாரை சந்தித்தோம். கிட்டத்தட்ட மூணுமணி நேரம் விசாரணை செய்து வாக்குமூலங்களை பதிவு செய்து கொண்டார்கள். ஆரம்பத்துல, சி.பி.ஐ. விசாரணை கோரலாம்ங்குற மைண்டுல தான் இருந்தோம். கேரள முதல்வர் மாண்புமிகு பினரயி விஜயன் அவர்கள் கூட ‘சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை பண்ணவா?'ன்னு கேட்டாரு. ஆனா, எங்களுக்கு மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ஈஸ்வரமூர்த்தி சார் மேல நம்பிக்கை இருக்கு. அதனால, சி.பி.ஐ. வேணாம்… சி.சி.பி.யே விசாரிக்கட்டும்ங்குற மனநிலைக்கு வந்துட்டோம்'' என்கிறார் ஆயிஷா.


ஐ.ஐ.டி. பேராசிரியர்கள், தோழிகள் என பலரிடம் முதற்கட்ட விசாரணையை முடித்துவிட் டது ஈஸ்வரமூர்த்தி தலைமையிலான சி.சி.பி. அதே நேரத்தில் ஐ.ஐ.டி. நிர்வாகமோ, விசாரணையில் உண்மை தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக மாணவர்களுக்கு விடுமுறை அளித்து வீட்டுக்கு அனுப்பிவிட்டதால் பாத்திமாவுடன் மிகவும் நெருக்கமான தோழிகளிடம் விசாரணை செய்யப் படவில்லை. அவர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. பாத்திமாவின் லேப்டாப் மற்றும் டேப்ளட் ஆகியவற்றை ஆயிஷா சி.சி.பி.யிடம் ஒப்படைத்திருக்கிறார். இவை, நீதிமன்ற ஒப்புதலுடன் திறந்து ஆராய்ந்து விசாரித்து நடவடிக்கை எடுக்க இன்னும் 15 நாட்கள் ஆகலாம் என்று சொல்லியிருக்கிறது காவல்துறை. இந்நிலையில், கேரள மாநிலத்தின் கொல்லம் எம்.பி. பிரேமச்சந்திரன் மூலம் பிரதமர் மோடியை சந்தித்து நீதி கிடைக்க கோரிக்கை வைக்க இருக்கிறது மாணவி பாத்திமாவின் குடும்பம். தங்களது பேராசிரியர்களைக் காப்பாற்றிவிட வேண்டும் என்று காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது ஐ.ஐ.டி. நிர்வாகம். 

 

 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; குழந்தைகளுக்கு நேர்ந்த கொடூரம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Incident happened to children on love affair in dharmapuri

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(30). இவர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தேவி (24, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.

இந்த நிலையில், தேவிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்(27) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இவர்களது உறவு பாலகிருஷ்ணனுக்கு தெரியவர, தேவியைக் கண்டித்துள்ளார். இதனையடுத்து, தேவி திடீரென வெங்கடேஷ் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த வெங்கடேஷ், தேவியை பழிவாங்கும் நோக்கத்தில் இருந்து வந்துள்ளார். அதன் அடிப்படையில், அவர் நேற்று முன் தினம் (10-04-24) வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த தேவியின் மகன்கள் இருவரையும் அங்குள்ள காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்ற வெங்கடேஷ், குழந்தைகள் இருவரின் கண்களில் மிளகாய் பொடி தூவியும், கல்லால் தலை மற்றும் காது பகுதிகளில் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த குழந்தைகள், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, தகவல் அறிந்து விரைந்து வந்த அதியமான்கோட்டை போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளி வெங்கடேஷை கைது செய்தனர். இந்த நிலையில், காவல் நிலையத்தில் இருந்த வெங்கடேஷ் நேற்று, காவல் நிலையத்திற்கு பின்புறமுள்ள ரயில்வே தண்டவாளத்திற்கு தப்பிச் சென்று அங்குள்ள மின் கம்பியைப் பிடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். வெங்கடேஷ் மீது மின்சாரம் தாக்கியதில், அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். உடனடியாக அங்கு விரைந்த போலீசார், வெங்கடேஷை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

திருமணத்தை மீறிய உறவினால் குழந்தைகளுக்கு நேர்ந்த கொடூரம்; விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Incident happened to children caused by extramarital affairs in maharashtra

மகாராஷ்டிரா மாநிலம், ராய்காட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தீபா (25), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனது கணவர் மற்றும் 5 வயது மகள், 3 வயது மகனுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி வெளியே சென்றிருந்த தீபாவின் கணவர் மாலை வீடு திரும்பினார். அப்போது, தீபாவின் கணவர் தனது குழந்தைகளை எழுப்ப முயன்றார். அப்போது, குழந்தைகள் அயர்ந்து தூங்குவதாகவும், அவர்களை எழுப்ப வேண்டாம் என்றும் தீபா கூறியுள்ளார். இதனை கேட்ட தீபாவின் கணவர், அவர்களை எழுப்பாமல் இருந்துள்ளார்.

பின்னர், வெகுநேரம் ஆகியும் எந்தவித அசைவும் குழந்தைகளிடத்தில் இல்லாததைக் கண்டு சந்தேகம் அடைந்த தீபாவின் கணவர், குழந்தகளை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு, குழந்தைகளைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இறந்து போன 2 குழந்தைகளின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பிரேத பரிசோதனையில், குழந்தைகள் கொலை செய்யப்பட்டு இறந்ததாக தெரியவந்தது. இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தினர். அதில், தீபா போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், தீபாவிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், தீபாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இதனையடுத்து, அந்த இளைஞருடன் வாழ நினைத்த தீபா, அதற்கு தனது குழந்தைகள் இடையூறாக இருப்பதாக உணர்ந்துள்ளார். இதனால், காலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற கணவன், திரும்பி வருவதற்குள் தனது குழந்தைகளை கொடூரமாகக் கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, தீபா மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.