Skip to main content

இதற்கெல்லாம் எதற்கு நிதி? கடன் கட்டாதவர்களை விட்டது ஏன்? பாஜகவால் அதிர்ச்சியில் இருக்கும் மத்திய அரசு ஊழியர்கள்!  

Published on 27/04/2020 | Edited on 27/04/2020

 

bjp



உலக நாடுகளின் பொருளாதாரத்தில் பேரிடியாக இறங்கி இருக்கிறது கரோனா வைரஸின் தாக்கம். இதை ஈடுசெய்ய நிவாரண நிதி கோரியது மத்திய அரசு. பெருமுதலாளிகள், திரைப் பிரபலங்கள், பொது மக்கள் என பலரும் இதற்கு உதவிவரும் நிலையில், மத்திய அரசு ஊழியர்கள் தங்களது ஒருநாள் ஊதியத்தை பிரதரின் நிவாரண நிதிக்கு வழங்கினார்கள்.


இந்நிலையில்தான், மத்திய அரசு ஊழியர்களுக்கும், மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படியை 2021, ஜூலை வரை ஓராண்டுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்திருக்கிறது மத்திய அரசு. மத்திய நிதியமைச்சகம் 23ந்தேதி வெளியிட்ட இதுதொடர்பான உத்தரவில், “குறைந்தபட்சம் 4% முதல் 6 மாதங்களுக்கும், 8% அடுத்த ஆறு மாதங்களுக்கும், 12% அடுத்த ஆறு மாதங்களுக்கும் அகவிலைப்படி வழங்கப்படாது. நிறுத்தி வைக்கப்பட்ட இந்த அகவிலைப்படி பிறகு வழங்கப்படாது என்று அறிவித்துள்ளது.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ள மத்திய அரசு ஊழியர்கள், “டி.டி.எஸ். என்ற பெயரில் வருமானவரியை முன்னதாகவே செலுத்திவிட்டு, மாத ஊதியம் பெரும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி கிடையாது என்று மத்திய அரசு அறிவித்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது என்று கொந்தளித்து வருகிறார்கள்.

மத்திய அரசின் இந்த முடிவை எதிர்க்கும் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் துரைபாண்டியன், "ஆவக்காய் ஊறுகாய் தயாரிப்பதையும், நாட்டின் பொருளாதார கொள்கையையும் ஒரேமாதிரி கையாளுகிறது மத்திய அரசு. அதன் தவறான பொருளாதாரக் கொள்கையால் விலைவாசி ஏறி, பணப்புழக்கம் குறைந்திருக்கும் இந்தச் சூழலில், இப்படியொரு மோசமான முடிவை எடுத்திருக்கிறது.

 

x



பெருமுதலாளிகளிடம் இருந்து அரசு வங்கிகளுக்கு வரவேண்டிய பல லட்சம் கோடி வாராக்கடன்களை வசூல் செய்யாமல், பேரிடர் காலங்களில் பயன்படுத்த வேண்டிய தற்செயல் மற்றும் அவசரகால நிதிகளைப் பயன்படுத்தாமல், புல்லட் ரயில் புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்காக ஒதுக்கிய நிதியில் கைவைக்காமல், மோசமான சூழலிலும் மக்கள் பணியில் இருக்கும் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியில் கைவைப்பது கண்டனத்திற்குரியது''’என்று ஆவேசமாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

“கச்சா எண்ணெய் விலை பூஜ்ஜியத்தை எட்டியும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காதது, விலைவாசியைக் குறைக்காமல் சுங்கக் கட்டணத்தை அதிகப்படுத்தியது போலவே இதுவும் மக்கள்விரோத நடவடிக்கைதான் என்கிறார்கள் மத்திய அரசு ஊழியர்கள்.


--ச.ப.மதிவாணன்

 

 

Next Story

“பா.ஜ.கவை விட ஆபத்தானவர் நிதிஷ்குமார்” - மல்லிகார்ஜுன கார்கே

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Mallikarjuna Kharge says Nitish Kumar is more like BJP

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற தற்போது நடைபெற்று வரும் தேர்தல்கள் மிகவும் முக்கியமானவை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பீகார் மாநிலத்தில் உள்ள கிஷன்கஞ்ச் மற்றும் கதிஹார் தொகுதிகளில் நேற்று (19-04-24) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, “மோடி சமீபகாலமாக அரசியல் சாசனத்தின் மீது மிகுந்த மரியாதையைக் காட்டி வருகிறார். அவர் சொல்வதையே அவர் கடைப்பிடிக்கிறார் என்றால், அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என பேசி வரும் பாஜக தலைவர்கள் எப்படி தப்பிக்க முடிகிறது? அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் எந்தப் பங்கையும் வகிக்காத ஆர்.எஸ்.எஸ் திட்டத்தை செயல்படுத்த பா.ஜ.க களமிறங்கியது. நாட்டில் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தை காப்பாற்ற தற்போது நடைபெறும் தேர்தல்கள் முக்கியமானவை. நாம் தோல்வியுற்றால், நமது வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படுவார்கள்.

எங்கள் கூட்டணியில் போட்டியிடும் தேஜஸ்வி யாதவ், நிதிஷ்குமாரின் துரோகத்தை பலமுறை கூறி புலம்பியுள்ளார். நான் அதை ஒரு நல்ல அதிர்ஷ்டம் என்று சொல்கிறேன். பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸை விட நிதிஷ் குமார் போன்றவர்கள் ஆபத்தானவர்கள். நிதிஷ் குமாரிடம் கொள்கைகள் இல்லை. அவர் அதிகாரத்திற்காக மட்டுமே கவலைப்படுகிறார்” என்று கூறினார். 

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.