Skip to main content

தமிழகத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தொடர்ந்து சர்ச்சையில் சிக்க காரணம்?

Published on 02/05/2019 | Edited on 02/05/2019

ரிடையர்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம் எழுதுன லெட்டர் பரபரப்பு ஆகியிருக்கு. நடந்து முடிஞ்ச தேர்தல்ல லட்சக்கணக்கான பேர் வாக்காளர் பட்டியலில் இல்லை. இதுபற்றித்தான் ரிடையர்டு ஐ.ஏ.எஸ். தேவ சகாயம், இங்குள்ள மாநிலத்  தேர்தல்  அதிகாரிக்கு ஹாட்டாவே கடிதம் எழுதியிருக்காரு.  எங்க குமரி மாவட்டத்தில் மட்டும் ஏறத்தாழ 10 ஆயிரம் வாக்காளர்களின் ஓட்டுக்கள் காணாமல் போயிருக்கு. வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் அவங்க வாக்குகள் ஒரே மாதத்திற்குள் முறைகேடா நீக்கப்பட்டிருக்கு. தமிழகம் முழுக்க இதே போன்ற புகார்கள் எழுந்தும், தேர்தல் ஆணையம் துறை ரீதியிலான விசாரணையைக் கூட இதுவரை நடத்தலைன்னு கொஞ்சம் கடுமையான தொனியிலேயே அவர் கேள்விகள் எழுப்பி இருக்காராம்.
 

election officer



இதுக்கெல்லாம் யார் காரணமாம்?' மத்தியிலும் மாநிலத்திலும் அதிகாரத்தில் இருக்கிறவங்க, தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு செல்வாக்குள்ள தொகுதிகளைப் பட்டியல் எடுக்கச் சொன்ன உள்ளாட்சித் துறை மந்திரி வேலுமணி, அதிலுள்ள பலரையும் நீக்கும்  பொறுப்பைத் தலைமைத் தேர்தல் அதிகாரியான சத்யப்பிரதா சாகுவிடம் ஒப்படைச்சாராம்.  சாகுவோ இந்தப் பொறுப்பை, தேர்தல் ஆணையத்திலேயே உள்ள கம்ப்யூட்டர் ஆபரேட்டரான அசோக்குமாரிடம் ஒப்படைச்சிருக்காரு.  அந்த அசோக்குமார்தான், மாவட்டம்தோறும் உள்ள வாக்காளர் பட்டியலைத் தனக்கு அனுப்பச் செய்து, அதில் விருப்பம் போல் வாக்காளர்களை வேட்டையாடிட்டாராம். இதனால் தான் தமிழகம் முழுக்க,  ஓட்டைக் காணோம்'ங்கிற கூக்குரல் இந்த முறை அதிக அளவுக்கு எழுந்திருக்கு. 2016 தேர்தலில் ஜெ. இதே டெக்னிக்கைப் பயன்படுத்தியதால்தான் பல தொகுதிகளில் பார்டரில் கரையேறி, அ.தி.மு.க. ஆட்சியைப் பிடிச்சிதாம்.' இந்த கோல்மால் டெக்னிக் எந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆகுதுங்கிறது மே 23-ல் தெரிஞ்சிடும். 
 

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்குப்பதிவு சதவீத குளறுபடி குறித்து சத்யபிரதா சாகு விளக்கம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Sathyaprada Sahu explained about the polling percentage error

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக நேற்று (21.04.2024) அறிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.20 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.96 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

அதாவது, திருவள்ளூர் - 68.59 %, வட சென்னை - 60.11 %, தென் சென்னை - 54.17 %, மத்திய சென்னை - 53.96 %, ஸ்ரீபெரும்புதூர் - 60.25 %, காஞ்சிபுரம் - 71.68 %, அரக்கோணம் -74.19 %, வேலூர் - 73.53 %, கிருஷ்ணகிரி - 71.50, தருமபுரி - 81.20 %, திருவண்ணாமலை - 74.24 %, ஆரணி - 75.26 %, விழுப்புரம் - 76.52 %, கள்ளக்குறிச்சி - 79.21 %, சேலம் - 78.16 %, நாமக்கல் - 78.21 %, ஈரோடு - 70.59 %, திருப்பூர் - 70.62 %, நீலகிரி - 70.95 %, கோயம்புத்தூர் - 64.89 %, பொள்ளாச்சி - 70.41 %, திண்டுக்கல் - 71.14 %, கரூர் - 78.70 %, திருச்சிராப்பள்ளி - 67.51 %, பெரம்பலூர் - 77.43 %, கடலூர் - 72.57 %, சிதம்பரம் - 76.37%, மயிலாடுதுறை - 70.09 %, நாகப்பட்டினம் - 71.94 %, தஞ்சாவூர் - 68.27 %, சிவகங்கை - 64.26 %, மதுரை - 62.04 %, தேனி - 69.84 %,விருதுநகர் - 70.22 %, ராமநாதபுரம் - 68.19 %, தூத்துக்குடி - 66.88 %, தென்காசி - 67.65 %, திருநெல்வேலி - 64.10 % மற்றும் கன்னியாகுமரி - 65.44 % பதிவாகியுள்ளன. 

Sathyaprada Sahu explained about the polling percentage error

இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் வாக்குப்பதிவு சதவீத குளறுபடி குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கமளித்துள்ளார். அதில், “இந்திய தேர்தல் ஆணையத்தின் செயலியில் (APP) கிடைத்த தகவல் அடிப்படையில் சதவீதம் கணக்கிட்டதால் குளறுபடி ஏற்பட்டது. இந்த செயலியில் வாக்குப்பதிவு சதவீதத்தை வாக்குச்சாவடி அலுவலர்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. வாக்கு சதவீதத்தை ஒருசிலர் மட்டுமே செயலியில் பதிவிட்டதால் கணக்கீட்டில் குளறுபடி ஏற்பட்டது. தேர்தல் நடத்தும் அதிகாரி கையெழுத்திட்டு கொடுக்கும் தகவல் வர கால தாமதம் ஆகும் என்பதால் செயலி மூலமாக அப்டேட் செய்தோம். இதனால் சில குளறுபடிகள் ஏற்பட்டன” எனத் தெரிவித்தார்.

மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் குறித்து பேசுகையில், “வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் குறித்து கடந்த அக்டோபர் மாதமே அரசியல் கட்சிகளுக்கு தகவல் தரப்பட்டது. வாக்காளர் பெயர் விடுபட்டது தொடர்பாக கேஸ் பை கேஸ் (Case by Case) விசாரணை நடத்த வேண்டும். வாக்காளர் பட்டியல் தொடர்பாக வாராவாரம் அரசியல் கட்சிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெறும். வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க, சரிபார்க்க பல்வேறு வாய்ப்புகள் வாக்களர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஒரு வாக்காளர் நீண்ட காலமாக அவரது முகவரியில் இல்லாவிட்டால் பட்டியலில் பெயர் இல்லாமல் போக வாய்ப்பு உள்ளது. வாக்காளர்கள் வாக்களிக்க கடந்த 1996ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்தால் கொடுக்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை செல்லுபடியாகும். புதிய வாக்காளர் அட்டைதான் தேவையென்று இல்லை” என விளக்கமளித்துள்ளார்.