Skip to main content

"எங்களை மனுஷங்ககிட்ட அனுப்புங்க அண்ணா..." - கதறிய விலைமாது! - ஆட்டோ சங்கர் #10 

Published on 30/06/2018 | Edited on 07/07/2018
as 10 title

 

இப்படி, எம்.ஜி.ஆர் மறைந்த பின் அதிமுகவிலும் ஆட்சியிலும் பெரும் களேபரம் நிகழ்ந்தது. அந்த ஊர் ரெண்டுபட்டதால் இந்தக் கூத்தாடிக்கு கொண்டாட்டமாக இருந்தது. அதே நேரம் அவர்களின் தேவைக்கு சப்ளை செய்ய முடியாமல் பெரும் திண்டாட்டமும் ஆனது. அதிகாரம், அதன் மூலம் கிடைக்கப்போகும் வருமானம்... இதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்ய தயாராய் இருந்தனர் அந்த முதலாளிகள். இந்த நேரத்தில் என்னிடமிருந்த ஆகச்சிறந்த பெண்ணை இழுத்துக்கொண்டு ஓடிய சுடலை மீதான கோபமும் அவ்வப்போது தலைதூக்கியது. அதை சற்றே மறந்துவிட்டு ஓடிக்கொண்டிருந்தேன். கரை வேட்டிகளின் பசிக்கு இரை போடுவது கடினமாக இருந்தது. அந்த இரண்டு அணிகளுக்கும் ஒவ்வொரு எம்.எல்.ஏக்களும் முக்கியமாய் இருந்தனர். ஒருவரைக் கூட இழக்கத் தயாராய் இல்லை.

 

 


இதனாலேயே அந்த யுத்தகளத்தில் ஒரேயொருவரை ரெண்டு கோஷ்டியிலுமே மதித்தனர். அந்த நபரைப் பார்த்ததும் தலையில் தூக்கிவைத்துக்கொண்டு ஆடினர். ரெண்டு பக்கமும் வேண்டியவரான அந்த நபர் சாட்சாத் நான்தான்! அத்தனை எம்.எல்.ஏ.க்களுக்கும் தாக சாந்தியும், மோக சாந்தியும் செய்ய வேண்டுமே. அந்த சந்தர்ப்பத்தை அபாரமாக உபயோகித்தேன். ஏகமாய் பணம் பண்ணினேன். இரண்டு அணியிலுமாக அப்போது மட்டும் கிடைத்த தொகை ரூபாய் முப்பது லட்சம்.

 

 

mgr jeya janaki



கைவசம் இருந்த பெண்கள் போதாமல் நாயலைச்சல் அலைந்தேன். அடையார் கேட் ஓட்டல், பிரசிடென்சி ஹோட்டல் மற்றும் பல ஓட்டல்களுக்கும் விலைமாதுகள் தாறுமாறாக அனுப்பப்பட்டார்கள். இதில் முதல் தடவை எம்.எல்.ஏ.க்களிடம் சென்று வந்த பெண்கள் அடுத்த ரவுண்டு செல்ல மறுத்தனர். "எங்களை மனுஷங்ககிட்ட அனுப்புங்க சங்கரண்ணா... பூரா கரடி, சிங்கம், புலியா இருக்கானுக...'' என கதறிற்று விலைமாது பெண் ஒவ்வொன்றும்! அந்தச் சமயத்தில் ஏராளமாய் காசு மட்டுமா பார்த்தேன்...? பார்த்த அவலமான காட்சிகள், நாற்காலி பிடிக்க நடந்த சண்டைகள், மாண்புமிகுக்களின் மற்றொரு பக்கங்கள் என ஒவ்வொன்றுமே சின்னச் சின்ன மின்சாரத் தீண்டுதல்கள்!

 

 


பெண்கள் போதாமல் ஊரிலிருந்த புரோக்கர்களை எல்லாம் அணுகித்தான் நிலைமையைச் சமாளிக்க வேண்டி இருந்தது. அப்போது தற்செயலாக  ஒரு ப்ரோக்கர். "அடடா...சங்கர்! இப்பதான் ஞாபகம் வருது; உன்கிட்டே இருந்தானே சுடலை... அவன் கூட கே.கே. நகர்ல இதே பிசினஸ்தான்  பண்ணிக்கிட்டிருக்கான்... அவனைக்கூட கேட்கலாமே?'' என்றான். நெஞ்சுள் ஒரு திக் வாங்கினேன். "சு... சுடலை இப்ப கே.கே. நகர்லேயா இருக்கான்?''

பாபு வானத்துக்கும் தரைக்குமாக எகிறி குதித்தான்.

"அண்ணே! விடவே கூடாது அந்த துரோகியை; பணத்தை லவுட்டிக்கிட்டு பெண்ணையும் கடத்திப்போனவனாச்சே? அதோட, உபத்திராதேவி இப்ப   இருந்தா இந்த சமயத்திலே எவ்வளவு நல்லா இருக்கும்...?'' 

 

 


"மோகன், பாபு! ரெண்டுபேரும் போங்க! அவனைக் கூட்டிவாங்க... அவன் மேலே கைவைக்கக்கூடாது என்ன?'' - எச்சரித்து அனுப்பினேன்.

பாண்டி கோவில் பலிகடா கணக்காக சுடலை கொண்டு வரப்பட்டான். என்னைப் பார்த்ததும் நெடுஞ்சாண்கிடையாக கால்களில் விழுந்தான்.

 

 

auto sankar threatens sudalai



"அண்ணே! என்னை மன்னிச்சுக்கங்க அண்ணே''

பாபு அவன் தலைமுடியைக் கொத்தாகப் பிடித்து தாக்குவதற்குத் தயாராக... தடுத்துவிட்டு கேட்டேன் சுடலையிடம்.

"சுடலை...அந்தப்பெண்ணை கூட்டிட்டுப்போனியே... என்ன பண்ணினே...? அவளை வச்சு தொழில் பண்றியா?''

"ஐயையோ! இல்லைண்ணே; வேற பொம்பிளைகளை வச்சுதான் பண்றேன்... அவளை பெண்டாட்டி ஆக்கிக்கிட்டேன்''

"கல்யாணம் எப்ப நடந்துச்சு?''

"கல்யாணம்ன்னு பண்ணிக்கலை, புருஷன் பெண்டாட்டியா குடும்பம் நடத்திக்கிட்டிருக்கோம்''

"முட்டாள்! உங்க ரெண்டு பேருக்கும் நாளை சைதாப்பேட்டை ரிஜிஸ்தர் ஆபிஸ்லே கல்யாணம்...! நாங்க எல்லாரும் சாட்சிக் கையெழுத்து   போடறோம்! உன்னை மன்னிக்கறேன்... அதுதான் நான் உனக்கு தர்ற கல்யாண பரிசு''

சுடலையின் முகம் மலர்ச்சிக்குப்போனது. பாபுவின் முகம் அதிர்ச்சிக்குப் போனது. ஆனால், இருவருக்குமே என் திட்டம் என்னவென்று தெரியாது. சுடலையை சும்மாவா விடலாமா, அவனை பயன்படுத்தலாமா, பாபுவை முழுதாய் நம்பலாமா? எல்லா கேள்விக்கும் என் மனதில் பதில் இருந்தது. சுடலையை சும்மாவா விடுவேன் நான்?     


அடுத்த பகுதி:

சுமதி... தஞ்சம் கேட்டு வந்த எமன்! - ஆட்டோ சங்கர்#11

 

 முந்தைய பகுதி:

அதிமுகவின் பிளவு... ஆட்டோசங்கருக்கு லாபம்! - ஆட்டோசங்கர் #9  

 

 

Next Story

ஆட்டோ சங்கர் வீட்டு கிரகப்பிரவேசம்... வந்த வீஐபிக்கள்! ஆட்டோ சங்கர் #23

Published on 07/12/2018 | Edited on 09/12/2018

தேவியுடன் சேர்ந்து கூத்தடித்தேன். என்னிடம் பெண் கேட்டு வரும் ஸ்திரிலோலர்களில் அதிக திடம் அதிக சக்திவாய்ந்த ஆசாமிகளை அனுப்பி வைத்தேன்! அவளுக்கும் பரம திருப்தி. அந்த வாட்டசாட்டன்களிடமிருந்து நமக்கும் வசூல்! ஒரு கல்லில் ரெண்டு மாங்காய். சென்னையிலிருந்த இளம் நீக்ரோக்கள் நெல்சன் மண்டேலாவை விட அதிகம் நேசித்தது அந்த பெண்மணியைத்தான்!

 

auto sankar



பெரியார் நகரில் புதுசாக வீடு கட்டி, கிரகப்பிரவேசத்துக்கு அத்தனை முக்கிய போலீஸ் அதிகாரிகளும் ஆஜர் ஆகியிருந்தனர். ரிப்பன் வெட்டி வீட்டைத் திறந்து வைத்தது டி.எஸ்.பி.தங்கய்யாதான்! நம்ப அம்மையார் குத்து விளக்கு ஏற்றி வைக்க ஏகதடபுடல்.   சங்கரது சாராய வியாபாரத்தை விளக்கேற்றி தொடங்கி வைத்தது போலவே கிரகப்பிரவேசத்துக்கும் தவறாமல் கலந்து கொண்டனர் போலீஸார்!

அவர்களைச் சொல்லி தவறே இல்லை. காவல்துறை என்று பெயரே தவிர, யாருக்குக் காவல் என்று சொல்லவில்லையே? சாராய வியாபாரிகளுக்கும், மாமாக்களுக்கும் நாம்தான் காவல் காக்க வேண்டியிருக்கும் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பாவம்! நன்றி மறக்காத காவல் துறையினர்!

கிரகப்பிரவேச நிகழ்ச்சிகள் எல்லாமும் வீடியோவில் பதிவாயிற்று. எனக்கு ஒரு கலர் கனவு இருந்தது! என்றைக்காவது   சட்டசபைக்குள் எம்.எல்.ஏ.வாக நுழைய வேண்டும் என்ற ராஜ கனவு! அதற்கான அவ்வளவு தகுதிகளும்(!) கைவசம் என்றாலும் நேரம்தான் வாய்க்கவில்லை.

 

auto sankar house celebration



எப்படியும் தேர்தல் சமயத்தில் உபயோகப்படும் என்றே எல்லா 'பெரிய மனிதர்களோடும்' பழகினேன்! பெரிய மனிதர்களின் அழுக்கு அந்தரங்கங்களுக்கு- கறுப்பு சிந்தனைகளுக்கு- பயன்பட்டது என் நீலப்பட்டறை! பிற்பாடு தேர்தல் சமயம் அரசியல் வட்டாரத்தில் என் செல்வாக்கைக் காட்டுவதற்காகவே பூரா வி.ஐ.பி.களையும் அதிகாரிகளையும் விழாவுக்குக்   கூப்பிட்டேன். வீடியோவில் அவர்களை விழ வைத்தேன். தேர்தல் வருமுன் நான் மட்டும் விழாமல் இருந்திருந்தால் தேர்தல் வெற்றி விழாவும் நடத்தியிருப்பேன்!

அம்மையாரிடம் விளையாடி விட்டு அப்போதுதான் வீடு திரும்பியிருந்தேன். வாசலில் ஜீப் ஒன்று டயர் தேய வந்து நின்றது.   கான்ஸ்டபிள்கள்  ரெண்டு பேர் இறங்கி வந்தனர். புருவத்தில் கேள்வி முடிச்சு! 'பெரிய அய்யா' உடனே அவனைக் கூட்டி வர   சொன்னாராம். தெரிவித்தார்கள்! எனக்குத் தூக்கி வாரிப் போட்டது! 

'பெரிய அய்யா' என்பது அந்த அம்மையாரின் கணவர்! இதுவரை அவரை நேருக்கு நேர் சந்தித்ததில்லை; காவல்துறையில் அந்த ஒருவரை மட்டும் நெருங்கவேயில்லை நான்! அவர் மனைவியுடன் பழகி வரும்போது அவரை சிநேகிக்க சங்கடமாயிருந்தது. ஒரு விதமான இடைவெளியை அடைகாத்து வந்தேன், கூச்சம் காரணமாக. அவரிடம் ஆக வேண்டிய காரியங்களை அவள் மூலமாகவே கவனித்துக் கொண்டிருந்தேன்.

இப்போது அவர் கூப்பிட்டார் என்றதும் அதிர்ச்சி! எதற்குக் கூப்பிட்டிருப்பார்! அவர் மனைவியிடம் உள்ள உறவு தெரிந்திருக்குமோ? அதை விசாரிக்கப் போகிறாரோ? மனசுள் பயமுயலொன்று குறுகுறுவென ஓடிற்று. முதுகுத் தண்டில் ஐஸ் நதி வருடினது மாதிரி ஜில்லிட்டது.

முந்தைய பகுதி :

அதிகாரியின் மனைவி... ஆட்டோசங்கரின் தோழி! - ஆட்டோ சங்கர் #22 

ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம்... மறைக்கப்பட இருந்த  பெரும் உண்மைகளை சிறை வரை சென்று மீட்ட கதை... விறுவிறுப்பான முழு புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்கள்... 

 

books.nakkheeran.in

 

 

 

Next Story

அதிகாரியின் மனைவி... ஆட்டோசங்கரின் தோழி! - ஆட்டோ சங்கர் #22 

Published on 17/11/2018 | Edited on 09/12/2018
auto sankar 22



ஆட்டோவா, ஆகாய விமானமா என சந்தேகப்படும்படியான, நம்ப முடியாத வேகத்தில் வண்டி பறந்தது.

"கடைக்கு பலத்த சேதமா...?''

"ஆமாண்ணே...! யாரோ நாலு பேர் புகுந்து. இந்த மிஷின்லே ஏதோ ஃபிராடு இருக்குது... எப்பவுமே காசு விழறதில்லை... ஏமாத்தவா செய்யறீங்க'ன்னுஅடிச்சு நொறுக்கறாங்களாம்... நாமும் வேணா ஒரு நாலைந்து சேர்த்துப்போமா... சந்தடி சாக்கிலே கடையைத் தரை மட்டமாக்கிடலாம்!?''

"உளறாதே, பேசாம போ!''

சண்டையில் அமளி துமளிப்பட்டது கடை... அந்த நாலுவாட்ட சாட்டன்களும் பிரதேசத்தை உண்டு, இல்லை பண்ணிக்   கொண்டிருந்தனர். முதலாளியம்மா பதட்டமாகி ஃபோனுக்குப் பாய ஸ்டூல் ஒன்று பறந்து வந்து தொலைபேசியில் மோத சிதறித்   தெறித்தது. அம்மையார் அலறித் தீர்த்தார்.

இன்னொருவன் கல்லா பெட்டியில் கைவைக்க முயன்ற நிமிஷம், கடைமுன்னர் பெரிய சப்தத்துடன் போய் நின்றது அவசர ஆட்டோ., சரேலென வெளிப்பட்டேன். ஒரு நிமிடம் சண்டையை நிதானமாய் கவனித்தேன். வெறுப்புடன் காரித் துப்பினேன்! தம்பி மோகனிடம் "நான் மட்டும் உள்ளே போய் கவனிச்சுக்கறேன்... நீ ஆட்டோவிலேயே இரு!'' சொல்லிவிட்டு உள்ளே பாய்ந்து சண்டை ஜோதியில் சேர்ந்து கொண்டேன். அவர்கள் நான்கு பேரோடும் ஒற்றை ஆளாகச் சமாளித்தேன்.

வாசகர்களே, நீங்கள் யாருடைய ரசிகர்? ரஜினி? கமல்? விஜயகாந்த்? சத்யராஜ்? அல்லது வாத்தியார்? உங்கள் அபிமான நடிகர்   யாரோ அவரை நினைவுக்குக் கொண்டு வாருங்கள்! திரையில் அவர் எப்படி எதிரிகளை சமாüப்பாரோ அப்படி ஒரு ஸ்டைல்! சாகஸம்! கெட்டிக்காரத்தனம்!

ஒரு ஆளாக நின்று கொண்டு எதிரிகளைப் பந்தாடினேன். ரௌடிகள் நான்கு பேரும் உதட்டில் எட்டிப் பார்த்த ரத்தத்துடன் துடித்தனர். வலி தாங்காமல் பெற்றவளைக் கூப்பிட்டுக் கொண்டே கீழே சாய்ந்தனர். கடையை விட்டு வெளியே பாய்ந்து மறைந்தனர். அம்மையார் கண்களில் ஆச்சரியம் பிரகாசம் காட்டிற்று. என்னை பரவசம் பொங்கப் பார்த்தார்.

 

auto sankar 22-1



'எங்க வீட்டுப் பிள்ளை' படத்தில் திருடனை விரட்டின எம்.ஜி.யாரின் பலம் பார்த்து பிரமித்த சரோஜாதேவி கூட அப்படித்தானே   பார்த்தார்?!' அது சரோஜாதேவி, இவர்... ஏதோ ஒரு தேவி! அம்மணி என்னைப் பார்த்து தோழமையுடன் சிரித்தார்.

"ரொம்ப நன்றி...! நல்ல நேரத்தில் வந்து கை கொடுத்தீங்க!''

உதட்டில் புன்னகை உருவாக்கிக் காட்டினேன்.

"அதனால என்னங்க... உங்களுக்கு எப்ப, என்ன உதவி தேவைப்பட்டாலும் எனக்குப் ஃபோன் பண்ணுங்க'' -விசிட்டிங் கார்டை அவர் கையில் திணித்தேன். என் உதவி அவருக்கும் அவர் உதவி எனக்கும், அப்புறம் அடிக்கடித் தேவைப்பட்டது. அந்த பெண்மணிக்கு அடிக்கடி ஃபோன் செய்து என்னைக் கூப்பிடத் தெரிந்தது. பரஸ்பரம் தொழிலுதவி செய்யத் தெரிந்தது; போலீஸ் வட்டாரத்தில் என்னை மேலும் நெருக்கமாக்க தெரிந்தது.

வீடியோ கடையில் நடந்த மோத-ல் சண்டை போட்டவர்கள் என்னுடைய ஆட்கள்... அந்த சண்டையே ஒரு "செட்அப்' என்பது மட்டும் தெரியாது! 

 

bookstore ad



சூரியனும், சந்திரனும் கூட அப்போதெல்லாம் நான் சொன்னபடி கேட்டது என்றே சொல்லலாம்! சூரிய, சந்திரர் மட்டுமா? ஒரு சில   நட்சத்திரங்களும் கூட! சினிமா நட்சத்திரங்கள்! நடிகைகள்! என் ஓட்டு எப்போதும் சூரியனுக்குத்தான்! கட்சி உறுப்பினராகவும் அந்த வட்டாரத்தில் ஒரு பொறுப்போடும் இருந்தேன். ஆனால் அப்போது ஆட்சியிலிருந்தது அந்தக் கட்சியில்லை!

அதனாலென்ன... அந்தக் கட்சியில் அரசியல்வாதிகளுடன் நெருக்கமென்றால், ஆளும் கட்சியில் அதிகாரிகளிடம் செல்வாக்கு!அதுவும் அந்த உயர் அதிகாரி! 'ஐயா'வின் மனைவியின் நட்பு என்னை அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாக்கிற்று! செருப்புக்கு பாட்டாவும் இரும்புக்கு டாட்டாவும் இருந்தது மாதிரி சாராயத்துக்கு சங்கர் என பேரெடுக்க முடிந்தது, தேவியின் தயவால்!

எனக்கு இதில் இன்னொரு சந்தோஷம் கூட உண்டு! சட்டத்தின் நீள அகலமான கதவுகள் எனக்காக திறந்துவிடப்பட்டதே... இதற்கு எந்தக் கமிஷனும் கேட்கவில்லை தேவி! ஆனால் வேறு ஒன்று கேட்டார்... எனக்கு அது சம்மதமானது; சந்தோஷமானதும்!  

முந்தைய பகுதி:

என் கடைக்கு எதிர் கடை போட்ட பெண்மணி! - ஆட்டோ சங்கர் #21 

அடுத்த பகுதி :

ஆட்டோ சங்கர் வீட்டு கிரகப்பிரவேசம்... வந்த வீஐபிக்கள்! ஆட்டோ சங்கர் #23