Skip to main content

பக்தர்கள் தரையில் விழுந்து வணங்கும் முறை மற்றும் திசையைக் குறிப்பிடும் 100 வருட பித்தளைத்தகடு

Published on 27/03/2023 | Edited on 27/03/2023

 

brass plate discovered in sriperumbudur temple

 

இறைவனிடம் தன்னை முழுமையாக அர்ப்பணிக்கும் வண்ணம், கோயில் சன்னதி முன்பாக பக்தர்கள் தரையில் விழுந்து வணங்கும் முறையைத் தெரிவிக்கும் பித்தளைத் தகடு ஒன்று காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் பொறிக்கப்பட்டுள்ளது.

 

இந்த  நூறு வருடப் பழமையான செப்புத்தகடு பற்றியும் அதன் விபரங்கள் பற்றியும் தென்னகத் தொல்லியல் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் முனைவர் பிரியா கிருஷ்ணன் கூறியதாவது, "திருப்பெரும்புதூரில் அமைந்துள்ள ஆதிகேசவப் பெருமாள் கோயிலின் பிரதான நுழைவு வாயிலின் கொடிமரத்தின் வலது புறத்திற்கு சற்றுத்தள்ளி பிரகாரத்தில் பக்தர்கள் தரையில் விழுந்து வணங்கும் முறை மற்றும் திசையை குறிப்பிடும் வண்ணம் ஒரு பித்தளைத் தகடு பதிக்கப்பட்டுள்ளது. இத்தகட்டில் ஆண் மற்றும் பெண் தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கும் வரைபடம் வரையப்பட்டுள்ளது. இதில் ஆண் உருவம் இடது புறமும், பெண் உருவம் வலது  புறமும்  உள்ளது. ஆண் உருவத்திற்கும் பெண் உருவத்திற்கும்  இடையில் தமிழில் எழுத்துப்பொறிப்புகள் காணப்படுகின்றன.

 

விழுப்புரம் தாலுகா எளயாண்டப்பட்டு ஒடையவர் சொர்ணசூபிவிமான கையிங்கிரியம் 22.8.1912 என்றும், ஆண் உருவத்திற்கு கீழே அய்யா சாமிபிள்ளை என்றும், பெண் உருவத்திற்கு கீழே கோகிலாம்மாளம்மா என்று எழுதப்பட்டுள்ளது. இதே கோயிலில் ராமர் லட்சுமணன் சீதை தனி சன்னதியின் முன்னும் அந்த தகட்டில் இருப்பதை போல் தரையில் கோட்டுருவங்களாக வரையப்பட்டுள்ள விழுந்து வணங்கும் ஆண், பெண் உருவங்களும் அதன் விபரமும் எழுதப்பட்டுள்ளது. ஆண் உருவம் வலது புறமும் பெண் உருவம் இடது புறமும்  உள்ளது. இதில் முதல் மூன்று வரிகள் சிதைந்துள்ளது. அதனால் ஆண்டு குறித்து அறிய இயலவில்லை. இந்த ஆண், பெண் உருவங்களுக்கு மத்தியில் தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. 23 தேய்ந்த மண்டபதள வரிசை கயிங் கர்யதாஸன்னா கிசெட்டி றாமசாமி னாயுடு அவர் பார்யாள்னாகவல்லி அம்மா என்றும் பொறிக்கப்பட்டுள்ளது.

 

brass plate discovered in sriperumbudur temple

 

"இது போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை பாதுகாப்பது அவசியமாகும். மக்கள் அதன் மீது தொடர்ந்து நடப்பதால் அதிலுள்ள எழுத்துகள் அழிந்து வருகின்றன. இதனால் விபரங்கள் வாசிக்க இயலாமலேயே போய்விடக்கூடும். இவ்வாறான பகுதிகளை அரசு தனிக் கவனம் செலுத்தி  பாதுகாக்க  வேண்டும்" என்று தென்னகத் தொல்லியல் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் முனைவர் பிரியா கிருஷ்ணன் தெரிவித்தார். 

 

 

Next Story

'திமுக காங்கிரஸ் ஆட்சிக்கால சாதனை பட்டியலைச் சொல்லவா?'-தீவிர  பரப்புரையில் மு.க.ஸ்டாலின் 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'kalaingar himself calls him Balam Balu'- M.K.Stalin in intense lobbying

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத்  தீவிரபடுத்தியுள்ளன.

இந்நிலையில் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ''பாஜக எதிர்ப்பில் இபிஎஸ் உறுதியாக இல்லை. எடப்பாடி பழனிச்சமியால் பாஜகவை ஒருபோதும் எதிர்க்க முடியாது. இந்தியா கூட்டணிக்கான ஆதரவு அலை இந்தியா முழுவதும் வீசுகிறது. மக்களோடு இருந்து மக்களுக்காக பணியாற்றக் கூடியவர்கள் என்ற நம்பிக்கை எழந்துள்ளது. திமுக காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஒன்றியத்தில் எத்தனை சாதனைகளை செய்திருக்கிறோம் பெரிய பட்டியலே இருக்கிறது.

உதாரணத்திற்கு நம்ம டி.ஆர்.பாலு, மூன்று துறைகளில் ஒன்றியத்தில் அமைச்சராக இருந்த பொழுது செஞ்ச சாதனைகளை மட்டும் சொல்லவா? ஒன்றிய பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்த பொழுது தமிழ்நாட்டுக்கு மட்டும் 22,78 கோடி ரூபாய் மதிப்பிலான 15 பெரிய திட்டங்களைக் கொண்டு வந்தார். சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சராக தேசிய பல்கலைக்கழக உயிரின வளங்கள் ஆணையத்தை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தார். கப்பல் தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறையில் இருந்த பொழுது 56,644 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைத் தமிழகத்திற்கு கொண்டு வந்தார். இது மட்டுமா கிண்டி கத்திப்பாரா  மேம்பாலம், மாடி பாலம், தமிழ்நாட்டு தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டுமே 335 பாலங்களைக் கட்டி சாதனை பண்ணி இருக்கிறார். அதனால்தான் கலைஞரே பாலம் பாலு என்று அழைத்தார். இதேபோன்ற சாதனைகளை செய்வதற்காகவே ஒன்றியத்தில் நமது கூட்டணி ஆட்சியில் இருக்கும். அதற்காகத்தான் இந்த எலக்சனின் ஹீரோவாக தேர்தல் அறிக்கையை திமுகவும் காங்கிசும் வெளியிட்டு இருக்கிறோம். திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள சமூக நீதி அம்சங்கள் காங்கிரஸ் கட்சியினுடைய தேர்தல் அறிக்கையில் எதிரொலித்திருக்கிறது'' என்றார்.

Next Story

“நீங்களெல்லாம் கை சின்னத்திலே...” - சமாளித்த ஜி.கே. வாசன்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
"You are all in the hand symbol..." - G.K. Vasan

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தமிழகத்தில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜி.கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி ஆகிய 3 இடங்களில் போட்டியிடுகிறது. அதன்படி ஈரோடு - விஜயகுமார், ஸ்ரீபெரும்புதூர் - வேணுகோபால், தூத்துக்குடி - விஜயசீலன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் ஸ்ரீபெரும்புதூரில் அக்கட்சியின் வேட்பாளருக்கு வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது, “வேணுகோபால் அவர்களுக்கு நீங்களெல்லாம் கை சின்னத்திலே (எனக்கூறி விட்டு) ஒரு நிமிடம் இருங்கள். கையை நகர்த்திக் கொள்ளுங்கள் என்று சொன்னேன்..” என சமாளித்தார். இச்செயல அங்கிருந்தவர்கள் மத்தியில் சிறுது நேரம் சிரிப்பலையை ஏற்படுத்தியது.