Skip to main content

இரண்டு சைடும் பா.ம.க! -கூட்டணி நிலவரம்!

Published on 11/02/2019 | Edited on 04/03/2019

திராவிட கட்சிகளுடன் இனி கூட்டணி இல்லை' என சத்தியம் செய்திருந்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தற்போது அந்த விரதத்தை முடித்துக்கொண்டிருக்கிறார். இதனை முதன் முதலில் நக்கீரன்தான் பதிவு செய்தது. குறிப்பாக, பா.ம.க.வை அ.தி.மு.க. கூட்டணிக்குள் கொண்டுவர எடப்பாடி பழனிசாமி முயற்சி எடுத்ததையும் அதனை பா.ம.க. தலைமை ஒப்புக்கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியதையும் கடந்த மாதமே அம்பலப்படுத்தியிருக்கிறோம். இந்த நிலையில், இரு கழகங்களிடமும் பா.ம.க. பேச்சு நடத்தி வருவது தற்போது தேர்தல் அரசியலில் பரபரப்பை உருவாக்கி வருகிறது.

pmkஇது குறித்து பா.ம.க. தரப்பில் விசாரித்தபோது, ""நாடாளுமன்றத் தேர்தலோடு 20 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடக்க விருக்கிறது. இதில் பாப்பிரெட்டி பட்டி, அரூர், ஆம்பூர், குடி யாத்தம், சோளிங்கர், பூந்தமல்லி, திருப்போரூர், பெரம்பூர் ஆகிய 8 தொகுதிகள் வட தமிழகத்தில் வருகிறது. இதில் குறைந்தது 4 தொகுதிகளிலாவது வெற்றிபெற்று சட்ட மன்றத்தில் நுழைய விரும்புகிறது பா.ம.க. தலைமை. கூட்டணிக்கு பா.ம.க.வின் முதல் சாய் ஸாக இருந்தது தி.மு.க. தான். ஆனால், இதில் முந்திக்கொண்டது அ.தி. மு.க.தான். எம்.பி.க்களை விட எம்.எல்.ஏக்கள் முக்கியம் என கணக்குப் போட்ட எடப்பாடி, கடந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு வட தமிழகத்தில் கிட்டத்தட்ட 6 சதவீத வாக்குகளை பெற்றுள்ள பா.ம.க.வுடன் கூட்டணி அமைக்க விரும்பி தூது விட்டார். எல்லா விவரங்களும் பேசப்பட்ட நிலையில், பா.ம.கவுடன் ரகசிய பேச்சுவார்த்தையை துவக்கியிருக்கிறது தி.மு.க.'' என்கின்றனர் பா.ம.க. தலைமைக்கு நெருக்கமான அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள்.

பா.ம.க.வை தி.மு.க. பக்கம் கொண்டு வருவதில் துரைமுருகன் முதல் ஸ்டெப் வைக்க, ஐ.பெரியசாமி போன்றவர்கள் ஆதரித்துள்ளனர். ஆனால், பொன்முடி, எ.வ.வேலு, ஆ.ராசா உள்ளிட்டவர்கள் கடுமையாக எதிர்த்ததால் பா.ம.க.வுக்கு க்ரீன் சிக்னல் தரவில்லை ஸ்டாலின். ஆனால், இதில் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் தலைமையின் பார்வை வேறு என்கிறார்கள்.

இது குறித்து தி.மு.க. தரப்பில் நாம் விசாரித்த போது, ""தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணிக்கு ஒரு சீட்டும் கிடைக்கக் கூடாது என திட்டமிடும் ராகுல் காந்தி, அ.தி.மு.க. + பா.ஜ.க. உருவாக்கும் கூட்டணி யின் வெற்றியை தடுக்க வேண்டுமானால் பா.ம.க.வை மட்டும் வெளியே கொண்டுவந்து தி.மு.க. கூட்டணிக்குள் இணைத்துவிட்டால் வட தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறாது என தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் சொன்ன யோசனையை தீவிரமாகப் பரிசீலித்திருக்கிறார்.

தன்னோடு நெருக்கமான தொடர்பிலிருப்பவர்கள் மூலம் ஸ்டாலினுக்கு தகவல் அனுப்பினார் ராகுல். தி.மு.க. நிர் வாகிகள் சிலரும் கூட்டணிக் கணக்கு களைப் போட்டுக் காட்ட, இதனைத் தொடர்ந்தே, பா.ம.க.வுக்கு க்ரீன் சிக்னல் தந்திருக் கிறார் ஸ்டாலின். 4 எம்.பி.தொகுதி, 3 இடைத் தேர்தல் தொகுதி என பேச்சுவார்த்தை நகர்ந்து வருகிறது. அநேகமாக தி.மு.க. கூட்டணிக்குள் பா.ம.க. வந்துவிடும்''’ என்கின்றனர் விவரமறிந்த தி.மு.க. மா.செ.க்கள்.

அ.தி.மு.க.வுடன் கூட்டணி உறுதி செய்யப் பட்ட நிலையில், காங்கிரஸ் மூலம் தி.மு.க. தற் போது அழைப்பதால் ராமதாசுக்கும் அன்புமணிக்கு மிடையே வாதப் பிரதிவாதங்களும் நடந்திருக்கின் றன. அ.தி.மு.க.வை விட தி.மு.க.தான் சரியாக இருக்கும் என நம்பிக்கையுடன் அன்புமணியும், தேர்தலில் கூட்டணி தர்மத்தை தி.மு.க. மதிப்ப தில்லை என்கிற சந்தேகத்தை ராமதாசும் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் 6 எம்.பி.தொகுதி, 3 இடைத்தேர்தல் தொகுதி என உறுதி செய்திருந்த எடப்பாடி, தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. தாவ முயற்சிப்பதை அறிந்து டென்சனாகி யிருக்கிறார்.

cvsanmugamஇதுகுறித்து அ.தி.மு.க.வின் சீனியர் தலைவர் ஒருவரிடம் விசாரித்தபோது, ""வன்னியர் பொதுச் சொத்து நல வாரியத்திற்கு சட்ட அங்கீகாரமும் ஜனாதிபதி ஒப்புதலும் கிடைத்ததால் வன்னியர்கள் மத்தியில் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் மதிப்பு உயர்ந்தது. இதனை பா.ம.க. ரசிக்கவில்லை. திண்டி வனத்தில் ராமதாஸ் கட்டி யுள்ள கல்லூரிகள் உள்ளிட்ட பல சொத்துக்கள் வாரியத்தின் பிடியில் வரும். இந்தச் சூழலில் தான் கூட்டணி அழைப்பை கொடுத்தார் எடப்பாடி.

அதைக்கெட்டியாக பிடித் துக்கொண்ட பா.ம.க., வாரியத்துக்கு தலைவரை நியமிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட 4 கண்டிஷன்களைப் போட்டது. அதனை எடப்பாடி ஏற்றுக்கொண்ட நிலையில்தான் அ.தி.மு.க.-பா.ம.க. கூட்டணி ஆரோக்கியமாக நகர்ந்தது. ஆனால், தற் போது அ.தி.மு.க. கூட்டணியை பா.ம.க. உதற நினைப்பதையறிந்து டென்சனான எடப்பாடி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி சந்தானத்தை வாரியத்தின் தலைவராக நியமித்துவிட்டார். தி.மு.க.வை தவிர்த்துவிட்டு அ.தி.மு.க. பக்கம் பா.ம.க. வரும் பட்சத்தில் வாரியத்தின் செயல்பாடுகள் முடக்கப் படும்'' என்கிறார்கள் மிக அழுத்தமாக.

இதற்கிடையே, பா.ம.க.வை சேர்க்கக் கூடாது என அ.தி.மு.க., தி.மு.க. இரு கட்சிகளிலும் போர்க் கொடி தூக்குவோரின் எண்ணிக்கையும் கூடியுள்ளது.

-இரா.இளையசெல்வன்


 

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்ட நடத்துநர்; அன்புமனி கண்டனம்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani condemns conductor being thrown with his seat in   moving govt bus

ஓடும் பேருந்தில், நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்டதற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே.நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துநர் அமர்ந்திருந்த இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துநரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர்  லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார்.  அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே  திருச்சியில்  பேருந்தின் இருக்கை கழன்று  நடத்துநர்  தூக்கி வீசப்பட்டுள்ளார்.  பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை  தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை  திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதை  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே  ஒப்புக் கொண்டிருக்கிறார்.  15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பேருந்துகள்  12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன.  திமுக  ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும்,   அவற்றை பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாததுதான்  இத்தகைய அவல நிலை  ஏற்படுவதற்கு காரணம் ஆகும்.  இத்தகைய அவல நிலைக்கு திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள்  கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள்  ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள்  வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும்  பேருந்துகள் மட்டும்  15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றிற்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும்.  பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும்,  உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு  போதிய நிதி ஒதுக்கீடு  செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Next Story

“டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது” - ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
“Cancellation of TNPSC Group 2 Interview is welcome says Ramadoss

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது என்றும் நிலையான தேர்வு அட்டவணை, கூடுதல் சீர்திருத்தம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குரூப் 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தேர்வர்கள் நலன் கருதியும், தேர்வுகளை விரைவுபடுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்; அதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பா.ம.க. வலியுறுத்திய சில சீர்திருத்தங்களை தேர்வாணையம்   செயல்படுத்தியுள்ள போதிலும், தேர்வாணையத்தை நவீனப்படுத்துவதற்கு இவை மட்டும் போதுமானதல்ல.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு கூடாது என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இதை கடந்த ஐந்தாண்டுகளாக பா.ம.க.வின் நிழல் நிதிநிலை அறிக்கை மூலம் வலியுறுத்தி வருகிறோம். ஆள்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முதன்மைக் காரணம் நேர்முகத் தேர்வுகள் தான். அவை அகற்றப்பட்டால் தான் நேர்மையான முறையில் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். அப்போது தான் ஏழை, நடுத்தர மக்களுக்கும் வேலை கிடைக்கும்.

மத்திய அரசுப் பணிகளை பொறுத்தவரை குரூப் ஏ, குரூப் பி அரசிதழ் பதிவு பணிகள் தவிர மற்ற அனைத்து பணிகளுக்கும் நேர்காணல் முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆந்திர மாநிலம் அதை விட அடுத்தக்கட்டத்திற்கு சென்று மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்குக் கூட நேர்காணலை ரத்து செய்து விட்டது. ஆந்திராவைப் பொறுத்தவரை அரசு பணிகளுக்கு நேர்காணல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆந்திரத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் முதல் தொகுதி பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை நிரந்தரமாக நீக்க வேண்டும்.

2 ஏ தொகுதியில் இதுவரை இருந்து வந்த நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி ஆகியவை தொகுதி 2 க்கு மாற்றப்பட்டு விட்டன. இவை தவிர 2 ஏ தொகுதியில் உள்ள அனைத்து பணிகளும் சாதாரணமானவை தான். அப்பணிகளுக்காக முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்த வேண்டிய தேவையில்லை. எனவே, 2 ஏ தொகுதி பணிகளுக்கு  இனி ஒரே தேர்வை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான விமர்சனம் தேர்வு முடிவுகளை குறித்த காலத்தில் வெளியிடுவதில்லை என்பது தான். தொகுதி 1, தொகுதி 2 பணிகளுக்கான தேர்வு நடைமுறைகளை பல நேரங்களில் 30 மாதங்கள் வரை ஆகின்றன. இதனால் தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையை மாற்றி குறித்த நேரத்தில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமைப்பணி அதிகாரிகளை தேர்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் அத்தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கை வெளியான நாளில் இருந்து ஓராண்டுக்குள் வெளியிடப்படுகின்றன. அடுத்தத் தேர்வுக்கு தேர்வர்கள் தயாராவதற்காக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி தேர்வுக்கான முடிவுகள் ஒரு முறை கூட தாமதமாக வெளியிடப்பட்டதில்லை. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைப் பின்பற்றி ஒவ்வொரு தொகுதி பணிக்கும் எந்த மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்படும்? எந்த மாதத்தில் தேர்வு நடைபெறும்? எந்த மாதத்தில் முடிவுகள் வெளியாகும்? என்ற விவரங்கள் அடங்கிய நிலையான தேர்வு அட்டவணையை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும்  வெளியிட வேண்டும்.

முதல் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஜூலை மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டு, திசம்பர் மாதத்தில் இறுதி முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இரண்டாம் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும்  இரண்டு முறை தொகுதி 4 பணிகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மார்ச், செப்டம்பர் மாதங்களில் தேர்வுகளை நடத்தி முறையே மே, நவம்பர் மாதங்களில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

பொறியியல் பணிகள், வேளாண் பணிகள், புள்ளியியல் பணிகள் உள்ளிட்ட முதல் 4 தொகுதிகளுக்குள் வராத பணிகளுக்கான அறிவிக்கைகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டு, அடுத்த 5 மாதங்களில் தேர்வுகள் நடத்தி, முடிவுகளை வெளியிட வேண்டும். இதற்கேற்ற வகையில் தேர்வு நடைமுறையில் சீர்திருத்தங்களைச் செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.