Skip to main content

“அண்ணாமலையின் முதலாளிகளுக்கு மு.க. ஸ்டாலின் யார் என்று தெரியும்” - அமுதரசன் 

Published on 23/06/2023 | Edited on 23/06/2023

 

“The bosses of Annamalai know who M.K.Stalin is” - Amudharasan

 

பீகார் தலைநகர் பாட்னாவில் நடக்கும் எதிர்க்கட்சிக் கூட்டம் தொடர்பாக திமுக மாணவர் அணி செயலாளர் வழக்கறிஞர் அமுதரசன் நமக்கு அளித்த பேட்டி:

 

பாட்னாவில் நடக்கும் எதிர்க்கட்சிக் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொள்கிறார். ஆனால், அதனை மத்தியில் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை என அண்ணாமலை கூறுகிறாரே?

 

தமிழ்நாட்டில் அண்ணாமலையை வைத்துக் கொண்டு பாஜகவினர் அரசியல் நடத்தி கொண்டிருக்கிறார்கள். அண்ணாமலை பேசுவதில் 1 சதவீதம் கூட உண்மை இருக்காது. கும்மிடிப்பூண்டியை தாண்டினால் தமிழக முதல்வரை யாருக்கும் தெரியாது என்று கூறிய அதே அண்ணாமலை, மு.க. ஸ்டாலினை பார்த்து இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் பயப்படுகிறார்கள் என்று கூறுகிறார்.  இதுவே பெரிய முரணாக இருக்கிறது. 

 

இன்றைக்கு இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஓர் அணியில் சேர்க்கக் கூடிய வல்லமை படைத்தவர் நம் முதல்வர். காங்கிரஸ், பாஜக கூட்டணியில் இல்லாத மாநில கட்சிகளான எதிர்க்கட்சிகள் கூட இன்றைக்கு மு.க.ஸ்டாலின் எடுக்கும் இந்த முன்னெடுப்பில் கலந்து கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். இது மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. அதைப் பார்த்து பொறுத்துக் கொள்ளாத அண்ணாமலை வாய்க்கு வந்ததை பேசிக் கொண்டிருக்கிறார்.

 

பாட்னா கூட்டம் வரவேற்பை பெற்று வருகிறது என்று கூறுகிறீர்கள். ஆனால் அங்கு தான் ‘கோ பேக் ஸ்டாலின்’ என்று ட்ரெண்ட் ஆகி வருகிறது என்று கூறுகிறார்களே?

 

கும்மிடிப்பூண்டியை தாண்டினால் முதல்வரை யாருக்கும் தெரியாது என்று சொல்கிறார்கள். அப்படிப்பட்டவரை பார்த்து ஏன் பயப்பட வேண்டும். யாருக்கும் தெரியாத முதல்வரை பார்த்து அமைதியாக போக வேண்டியது தானே. அண்ணாமலை போன்றவருக்கு முதல்வரை தெரியாமல் இருக்கலாம். ஆனால், அண்ணாமலையின் முதலாளிகளுக்கு மு.க. ஸ்டாலின் யார் என்றும், திராவிட முன்னேற்றக் கழகம் என்றால் என்ன என்பதும் கண்டிப்பாக தெரியும்.

 

பீகார் தொழிலாளர்கள் தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வருவதை விமர்சிப்பதால் கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் பீகார் முதல்வர் கலந்து கொள்ளவில்லை என்று கூறுகிறார்களே?

 

இதெல்லாம் அவர்கள் கூறும் கட்டுக்கதை தான். மொழியை வைத்தோ இங்கு வரும் புலம்பெயர் தொழிலாளர்களை வைத்தோ திமுக என்றைக்கும் கிண்டல் செய்ததே இல்லை.

 

தன்னுடைய சொந்த கட்சியில் உள்ளவர்கள் உள்பட அனைவர் வீட்டிலும், கழிவறையிலும் கேமரா வைத்து வீடியோ எடுப்பது போன்று மலிவான அரசியலை அண்ணாமலை செய்து கொண்டிருக்கிறார். இன்றைக்கு கூட அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுகவினர் பேசியதை முன்னுக்குப் பின் ஒட்டி வடமாநில தொழிலாளர்களை கேவலமாக பேசுகிறார்கள் என்று புரளியை கிளப்பி வருகிறார். பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்ஸும் இதுபோன்று வேலை தான் பார்ப்பார்கள். அதைத் தான் அண்ணாமலை பார்த்து வருகிறார்.

 

இதுபோன்ற மலிவான பிரச்சாரங்கள் மூலமாகவும், மலிவான அரசியல் யுக்திகள் மூலமாகவும் தேர்தலில் வென்று விடலாம் என்று எண்ணுகிறார்கள். இதையே தான் இவர்களின் முப்பாட்டர்கள் முதற்கொண்டு செய்தார்கள். அதனால் இதையெல்லாம் நாங்கள் அப்போதே பார்த்து விட்டோம். ஆகவே இதுபோன்ற மலிவான பிரச்சாரங்களின் வாயிலாக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை ஒரு போதும் சீர் குலைக்க முடியாது  என்று அண்ணாமலை தெரிந்து கொள்ள வேண்டும்.

 

 

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

செஸ் வீரர் குகேஷுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Chief Minister MK Stalin praises chess player Gukesh

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்தத் தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன் ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து செஸ் வீரர் குகேஷுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “அபாரமான சாதனை படைத்த குகேஷுக்கு வாழ்த்துகள். 17 வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் செஸ் தொடரை வென்ற இளம் வீரர் என்ற வரலாற்றை படைத்துள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக சீனாவின் டிங் லிரனுக்கு எதிரான போட்டியிலும் குகேஷ் வெல்ல வாழ்த்துகள்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை முகாம் அலுவலகத்தில்  இன்று (28.4.2024) பெடே (FIDE) கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூபாய் 75 இலட்சத்திற்கான காசோலை மற்றும் கேடயத்தையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி மற்றும் குகேஷின் பெற்றோர் ஆகியோர் உடனிருந்தனர்.