ADVERTISEMENT

தாதாக்கள், ரவுடிகள், மாஃபியாக்கள் பா.ஜ.க.வில் சேருவார்கள்: மக்கள் அதிர்ச்சியடைந்து பாஜகவை தூக்கி எறிவார்கள்! எஸ்.எஸ்.சிவசங்கர் பதிலடி

04:48 PM Aug 12, 2020 | rajavel

ADVERTISEMENT

ADVERTISEMENT

பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி இன்று காலை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ''தி.மு.க. Vs அ.தி.மு.க. என போன வாரம் வரை நிலைப்பாடு இருந்தது. எம்.எல்.ஏ. கு.க.செல்வம் சேர்ந்த பிறகு பா.ஜ.க. Vs தி.மு.க. என்ற நிலை மாறியிருக்கிறது. இது வளர்ச்சி. நாங்கள் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறோம். கூட்டணிக்கு தலைமை நாங்கள்தான். நாங்கள் தேசிய கட்சி'' என்றார். தி.மு.க.வில் இருந்து வேறு யாராவது பா.ஜ.க.வுக்கு வருகிறார்களா என்ற கேள்விக்கு, ''நாகரீகம் கருதி நாங்கள் சொல்ல மாட்டோம். நிரம்பப் பேர் வருவார்கள். நீங்களே ஆச்சரிப்படுவீர்கள். அவர்கள் அதிர்ச்சிக்குள்ளாவார்கள்'' என்றார்.

வி.பி.துரைசாமியின் பேட்டி குறித்து அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் நக்கீரன் இணையத்தளத்தில் தனது கருத்தினை பகிர்ந்து கொண்டார்.

"தேன்நுகர் வண்டு மதுதனை உண்டு தியங்கியே கிடந்தது", என்று விவேக சிந்தாமணியில் ஒரு பாடல் உண்டு. அது போல், 'தாமரை' மலரில் தேன் குடித்த வண்டாக வி.பி.துரைசாமி இருக்கிறார் போலும். அதனால் தான், "போன வாரம் வரை தி.மு.க Vs அ.திமு.க என இருந்தது. இந்த வாரம் பா.ஜ.க Vs தி.மு.க என மாறி விட்டது", என்று சொல்கிறார்.

ஒரே வாரத்தில் நிலைமை மாறி விட்டதாம், அதுவும் ஆயிரம்விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் தி.மு.கவிலிருந்து பா.ஜ.க.வில் சேர்ந்ததால் இவ்வளவு வேக வளர்ச்சியாம். ஏற்கனவே கு.க.செல்வம் அ.தி.மு.க.வில் இருந்தார், பிறகு தி.மு.க.வில் இருந்தார். இப்போது பா.ஜ.க.வில் சேர்ந்திருக்கிறார். அவர் உடன் இரண்டு பேர் கூட போகவில்லை. ஆனால், வளர்ச்சியாம்.

நாட்டில் இருப்போர் எல்லோருக்கும் "ஆண்ட்டி-இண்டியன்" சர்டிபிகேட் கொடுத்து முயற்சி செய்தும் சாரண இயக்கத்துத் தேர்தலில் தோற்று போய் விட்டார் எச்.ராஜா. இப்போ கு.க.செல்வம் வந்ததால், தாமரை பூத்து குலுங்கப் போகிறதாம்.

பா.ஜ.கவின் புது தலைவர் முருகன் கட்சியில் புதியவர்களைச் சேர்க்கக் கடும் முயற்சி எடுக்கிறார். அப்படித்தான், வி.பி.துரைசாமியையும், கு.க.செல்வத்தையும் சேர்த்தார். எண்கவுண்டருக்கு போலீஸால் தேடப்படும் கல்வெட்டு ரவி, ஆறு முறை குண்டர் சட்டத்தில் சிறைசென்ற சத்யராஜ் ஆகிய வடசென்னை தாதாக்களை பா.ஜ.க.வில் சேர்த்து கட்சியை "வலு"ப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

வி.பி.துரைசாமி சொல்கிறார், "இன்னும் நிரம்ப பேர் வருவாங்க, நீங்க ஆச்சரியப்படுவீங்க, அவங்க அதிர்ச்சிக்குள்ளாவாங்க", என்று.

இரண்டு நாட்களுக்கு முன், பா.ஜ.க. தேசிய செயற்கு உறுப்பினர் பெரம்பலூர் அடைக்கலராஜ் அபின் கடத்தி, போலீஸில் சிக்கி இருக்கிறார். மத்தியில் ஆட்சியில் இருக்கும் தைரியத்தில் தானே இந்தக் கேவலமான வேலையை பா.ஜ.க.வினர் செய்கிறார்கள் என மக்கள் நினைக்கிறார்கள்.

வி.பி.துரைசாமி சொல்வது போல், கல்வெட்டு ரவி, குண்டாஸ் சத்யராஜ், அபின் அடைக்கலராஜ் வழியில் இன்னும் பல தாதாக்கள், ரவுடிகள், போதை மஃபியாக்கள் என நிரம்பப் பேர் பா.ஜ.கவில் சேருவார்கள். மக்கள் அதைக் கண்டு ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைவார்கள். பா.ஜ.க.வை தமிழகத்தை விட்டுத் தூக்கி எறிவார்கள்! இவ்வாறு கூறியுள்ளார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT