Skip to main content

தாதாக்கள், ரவுடிகள், மாஃபியாக்கள் பா.ஜ.க.வில் சேருவார்கள்: மக்கள் அதிர்ச்சியடைந்து பாஜகவை தூக்கி எறிவார்கள்! எஸ்.எஸ்.சிவசங்கர் பதிலடி

Published on 12/08/2020 | Edited on 12/08/2020

 

v p duraisamy bjp

 

பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி இன்று காலை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ''தி.மு.க. Vs அ.தி.மு.க. என போன வாரம் வரை நிலைப்பாடு இருந்தது. எம்.எல்.ஏ. கு.க.செல்வம் சேர்ந்த பிறகு பா.ஜ.க. Vs தி.மு.க. என்ற நிலை மாறியிருக்கிறது. இது வளர்ச்சி. நாங்கள் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறோம். கூட்டணிக்கு தலைமை நாங்கள்தான். நாங்கள் தேசிய கட்சி'' என்றார். தி.மு.க.வில் இருந்து வேறு யாராவது பா.ஜ.க.வுக்கு வருகிறார்களா என்ற கேள்விக்கு, ''நாகரீகம் கருதி நாங்கள் சொல்ல மாட்டோம். நிரம்பப் பேர் வருவார்கள். நீங்களே ஆச்சரிப்படுவீர்கள். அவர்கள் அதிர்ச்சிக்குள்ளாவார்கள்'' என்றார். 

 

வி.பி.துரைசாமியின் பேட்டி குறித்து அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் நக்கீரன் இணையத்தளத்தில் தனது கருத்தினை பகிர்ந்து கொண்டார். 

 

"தேன்நுகர் வண்டு மதுதனை உண்டு தியங்கியே கிடந்தது", என்று விவேக சிந்தாமணியில் ஒரு பாடல் உண்டு. அது போல், 'தாமரை' மலரில் தேன் குடித்த வண்டாக வி.பி.துரைசாமி இருக்கிறார் போலும். அதனால் தான், "போன வாரம் வரை தி.மு.க Vs அ.திமு.க என இருந்தது. இந்த வாரம் பா.ஜ.க Vs தி.மு.க என மாறி விட்டது", என்று சொல்கிறார். 

 

ஒரே வாரத்தில் நிலைமை மாறி விட்டதாம், அதுவும் ஆயிரம்விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் தி.மு.கவிலிருந்து பா.ஜ.க.வில் சேர்ந்ததால் இவ்வளவு வேக வளர்ச்சியாம். ஏற்கனவே கு.க.செல்வம் அ.தி.மு.க.வில் இருந்தார், பிறகு தி.மு.க.வில் இருந்தார். இப்போது பா.ஜ.க.வில் சேர்ந்திருக்கிறார். அவர் உடன் இரண்டு பேர் கூட போகவில்லை. ஆனால், வளர்ச்சியாம்.

 

நாட்டில் இருப்போர் எல்லோருக்கும் "ஆண்ட்டி-இண்டியன்" சர்டிபிகேட் கொடுத்து முயற்சி செய்தும் சாரண இயக்கத்துத் தேர்தலில் தோற்று போய் விட்டார் எச்.ராஜா. இப்போ கு.க.செல்வம் வந்ததால், தாமரை பூத்து குலுங்கப் போகிறதாம். 

 

s. s. sivasankar

 

பா.ஜ.கவின் புது தலைவர் முருகன் கட்சியில் புதியவர்களைச் சேர்க்கக் கடும் முயற்சி எடுக்கிறார். அப்படித்தான், வி.பி.துரைசாமியையும், கு.க.செல்வத்தையும் சேர்த்தார். எண்கவுண்டருக்கு போலீஸால் தேடப்படும் கல்வெட்டு ரவி, ஆறு முறை குண்டர் சட்டத்தில் சிறைசென்ற சத்யராஜ் ஆகிய வடசென்னை தாதாக்களை பா.ஜ.க.வில் சேர்த்து கட்சியை "வலு"ப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். 

 

வி.பி.துரைசாமி சொல்கிறார், "இன்னும் நிரம்ப பேர் வருவாங்க, நீங்க ஆச்சரியப்படுவீங்க, அவங்க அதிர்ச்சிக்குள்ளாவாங்க", என்று.

 

CNC

 

இரண்டு நாட்களுக்கு முன், பா.ஜ.க. தேசிய செயற்கு உறுப்பினர் பெரம்பலூர் அடைக்கலராஜ் அபின் கடத்தி, போலீஸில் சிக்கி இருக்கிறார். மத்தியில் ஆட்சியில் இருக்கும் தைரியத்தில் தானே இந்தக் கேவலமான வேலையை பா.ஜ.க.வினர் செய்கிறார்கள் என மக்கள் நினைக்கிறார்கள்.

 

வி.பி.துரைசாமி சொல்வது போல், கல்வெட்டு ரவி, குண்டாஸ் சத்யராஜ், அபின் அடைக்கலராஜ் வழியில் இன்னும் பல தாதாக்கள், ரவுடிகள், போதை மஃபியாக்கள் என நிரம்பப் பேர் பா.ஜ.கவில் சேருவார்கள். மக்கள் அதைக் கண்டு ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைவார்கள். பா.ஜ.க.வை தமிழகத்தை விட்டுத் தூக்கி எறிவார்கள்! இவ்வாறு கூறியுள்ளார். 

 

 


 

Next Story

ஆவணத்தில் திடீர் சந்தேகம்; தனி அறைக்கு கூட்டிச்சென்று டவுட் கேட்ட ராமதாஸ்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Sudden doubt in the document; Ramdas went to a private room and asked for a dowt

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இத்தகைய சூழலில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக பா.ம.க. தலைமை நிர்வாகக் குழு கூட்டம், உயர்மட்டக் குழு கூட்டம் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தைலாபுரத்தில்  நேற்று (18.03.2024) நடைபெற்றது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ம.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், கூட்டணி விவகாரத்தில் திடீர் திருப்பமாக இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்தது.

நேற்று வரை அதிமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்திய பாமக, எடுத்த இந்த திடீர் முடிவு பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து இன்று காலை தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸிடம் பாஜகவின் தமிழக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். சேலத்தில் இன்று நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது

பாமக-பாஜக கூட்டணியில் பாமகவிற்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாக இருந்த சில நிமிடத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டணி ஒப்பந்தத்திற்கான ஆவணத்தை படித்துப் பார்க்கையில், அதில் அவருக்கு சில சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக இது குறித்து விளக்கம் கேட்க பாஜக தலைவரை தனி அறைக்கு பாமக ராமதாஸ் கூட்டிச் சென்று ஆலோசனை நடத்தினார். பின்னர் மக்களவை தேர்தலுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

Next Story

'தமிழகத்தின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும்'-மோடி ஆரூடம்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
'The election results of Tamil Nadu will surprise everyone'-Modi Arudam

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

தமிழகத்தில் முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதால், தற்போதே தேர்தல் பரப்புரைகளுக்கான தீவிர முயற்சிகளை அரசியல் கட்சிகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில் இன்று சேலத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பாஜக பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பாமக, பாஜக கூட்டணியில் சேர்ந்திருக்கும் நிலையில், இன்று நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ், ஏனைய கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 'தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தப் போகிறது. எங்கள் கட்சி மாநிலம் முழுவதும் வலுவான சக்தியாக உருவாகி வருகிறது. இனி திமுகவை ஆதரிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை. கோயம்புத்தூரில் இருந்து மேலும் சில காட்சிகள் இங்கே' என கோயம்புத்தூரில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சி குறித்த காட்சிகளை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.