Skip to main content

4 டூ 44... பாஜகவின் விஸ்வரூப வெற்றி! சாத்தியமானது எப்படி?

Published on 05/12/2020 | Edited on 05/12/2020

 

ghmc

 

 

நேற்று வெளியான ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் பலருக்கு அதிர்ச்சியை அளித்திருக்கும். தெலங்கானா ராஷ்த்ரிய சமிதி, காங்கிரஸ், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சி தொண்டர்களுக்கு பேரதிர்ச்சியாகவும், பாஜக மற்றும் ஒவைஸியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். போன்ற கட்சிகளின் தொண்டர்களுக்கு இன்பதிர்ச்சியாகவும் அமைந்திருக்கும்.

 

இந்தியாவின் நான்காவது பெரிய மாநகராட்சியாக செயல்பட்டு வருவது ஹைதராபாத். அப்படிப்பட்ட மாநகராட்சி தேர்தலில் வெற்றிபெறுவது என்பது தேசிய கட்சிகள் அந்த மாநில கட்சிகளுக்கு ஒரு முக்கியமானது, கௌரவமானது என்று பல கோணங்களில் எடுத்துக்கொள்ளலாம். இந்த தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்கு இடையே கண்டிப்பாக கடுமையான போட்டி நிலவும், அப்படிதான் இங்கும் நிலவியது. 

 

மொத்தம் 150 வர்டுகளுக்கு நடைபெற்ற இந்த மாநகராட்சி தேர்தலில் 149 வார்டுகளின் முடிவுகள் வெளியாகியுள்ளன. மீதமுள்ள ஒரு தொகுதி தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் அந்த வார்டின் முடிவு வெளியாகவில்லை. இந்தத் தேர்தலில் தெலங்கானா ராஷ்த்ரிய சமிதி 55 வார்டுகளில் வெற்றிபெற்று, அதிக வார்டுகளில் வெற்றிபெற்ற கட்சியாக இருந்தாலும் இது ஒரு மிகப்பெரிய சரிவு. ஆமாம், கடந்த தேர்தலை ஒப்பிட்டு பார்த்தால் 44 வார்டுகள் குறைவாக வென்றுள்ளது. இந்த தேர்தலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பது பாஜக, 48 வார்டுகளில் வெற்றிபெற்றுள்ளது. கடந்த தேர்தலில் வெறும் 4 வார்டுகளில் மட்டும்தான் வெற்றிபெற்றிருந்தது. ஓவைஸியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி 44 வார்டுகளில் வெற்றிபெற்றுள்ளது. கடந்த தேர்தலிலும் அதே எண்ணிக்கையான 44 வார்டுகளில் வெற்றிபெற்றிருந்தது. காங்கிரஸ் வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 

 

பாஜகவின் இந்த அசூர வளர்ச்சி பலரையும் வாய்பிழக்க செய்துள்ளது. பாஜகவின் நட்சத்திர பேச்சாளர்களான அமித்ஷா, யோகி ஆதித்யநாத், தேஜஸ்வி சூர்யா, பிரகாஷ் ஜவடேகர், ஸ்மிருதி இராணி, ஜே.பி. நட்டா ஆகிய அனைவரும் ஹைதராபாத்தில் முகாமிட்டார்கள். எப்போதும் இல்லாத வகையில், இந்தமுறை மாநகராட்சி பிரச்சாரம் சூடுப்பிடித்தது. பாஜக ஒரு பக்கம் இஸ்லாமிய விரோத பிரச்சாரத்தில் ஈடுபட்டது. ஹைதராபாத்தின் பழமை வாய்ந்த பெயரான பாக்யாநகர் பெயர், பாஜக ஆட்சியில் ஹைதராபாத்தை என்ற பெயரை தூக்கிவிட்டு சூட்டப்படும் என்று யோகி ஆதித்யநாத் பேசியது சர்ச்சையானது. சந்திரசேகர் ராவின் மகன் கே.டி.ஆர், நமக்கு எதிரியல்ல என்பதை தெரிந்துகொண்ட பாஜக, ஒவைஸியை தாக்கியே பிரச்சாரம் செய்தது. அதேபோல கே.டி.ஆருக்கு பதிவிடுவதும், ஓவைஸிக்கு பதிவிடுவதும் ஒன்றுதான் என்று பிரச்சாரம் செய்தது. இதன் மூலமாக இந்துக்களின் வாக்கு வங்கியை அள்ளியது. இந்த தேர்தலில் பாஜகவின் இப்படியான பிரச்சாரங்களால் மத அரசியல் நன்கு கலக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், ஹைதராபாத் பல தரப்பு மக்களும், இந்தி, உருது பேசுபவர்களும் அதிகம் இருப்பதனால் வாக்கு அரசியலுக்காக வெறுப்பு பிரச்சாரத்தில் மாநில கட்சிகள் ஈடுபடாது. என்னதான் ஓவைஸியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி குறைந்தளவிலான தொகுதிகளில் போட்டியிட்டு 44 இடங்களில் வெற்றிபெற்றிருந்தாலும், பாஜக வாக்குகளை பிரிப்பதால் அடுத்த தேர்தல்களில் அது அவர்களுக்கு தலைவலியாக மாறலாம்.

 

2014ஆம் ஆண்டு பாஜக மத்தியில் ஆளும் கட்சியான பிறகு மத அரசியல், பிளவு என்பது பல மாநிலங்களில் வெளிப்படுகிறது. அதன்படிதான் தெலங்கானாவில் பாஜக இந்த முக்கியமான தேர்தலில் 12 மடங்கு வளர்ந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தெலுங்கு தேசம் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பெரிதாக தங்களின் பிரச்சாரங்களிலும் ஈடுபடவில்லை, மக்களுக்கும் அவர்கள் மீது நம்பிக்கையின்றி இருப்பதன் வெளிப்பாடாகவே இந்த தேர்தலின் முடிவுகள் தெரிவிக்கிறது. மத்தியில் பாஜகவுக்கு எதிர்கட்சியாக இருக்கும் காங்கிரஸ், ஏற்கனவே வலுவாக இருந்த ஓர் மாநிலத்தில் மிகவும் மோசமாக வலுவிழந்திருக்கிறது. தலைவர் யார்? உட்கட்சி பூசல், ஜூனியர் சீனியர் மோதல் என்று நாட்டு பிரச்சனைக்கு சமமாக கட்சிக்குள்ளும் ஒரு பிரச்சனையை வைத்திருக்கிறது காங்கிரஸ், அதன் வெளிபாடுதான் காங்கிரஸின் தொடர் தோல்வி. அப்படியே அவர்கள் வெற்றிபெற்றாலும் சூழ்ச்சியில் விழும் அளவிற்குதான் தங்கள் கட்சி வேட்பாளர்கள் சிலரை வைத்திருக்கிறது. தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டதிலிருந்து வலுவாக இருந்த டி.ஆர்.எஸ். கட்சியின் பலத்தை சோதித்துபார்த்த பாஜக, அவர்களின் 2023ஆம் ஆண்டு தேர்தல் வெற்றி கனவை சின்னாப்பின்னமாக உடைத்திருக்கிறது.

 

தற்போது நடைபெற்ற மாநகராட்சி தேர்தல் நடைபெற்ற பகுதிக்குள் 24 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. மொத்தம் 120 தொகுதிகள் எனும்போது, இந்த பகுதிக்குள் 20 சதவீத தொகுதிகள் அடங்குகிறது. தற்போதைய மாநகராட்சி தேர்தல் வெற்றியை பார்க்கும்போது, பாஜக இந்த பகுதிகளுக்குள் 7 முதல் 8 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலில் அதிலாபாத், கரிம் நகர் மற்றும் நிஜாமாபாத் உள்ளிட்ட வட தெலங்கானா பகுதி தொகுதிகளில் வெற்றிபெற்று வலுவான நிலையில் இருப்பதன் மூலம் பாஜக வளர்ச்சியடைந்துகொண்டுதான் இருக்கிறது. தெலங்கானாவில் கடந்த இரண்டு வருடங்களில் பாஜக நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது. அதற்கு முக்கிய காரணியாக இருப்பது கடந்த 2014ஆம் ஆண்டிற்கு பிறகு ஹைதராபாத்தில் ஆர்.எஸ்.எஸின் வளர்ச்சி. அதற்கு ஒரு உதாரணம் 2019ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் ஹைதராபாத் வந்தபோது நடந்த பேரணியைக் குறிப்பிடலாம்.

 

மேற்கு வங்கத்தில் மாநகராட்சி தேர்தலில் இரண்டாம் நிலையை எட்டியது பாஜக, அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் விஸ்வரூபம் எடுத்து 18 தொகுதிகளில் வெற்றியைக் கண்டது. இதற்கும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸின் திட்டமிட்டுதல், பிரச்சாரங்கள், வெறுப்பு அரசியல் போன்று அவர்களின் அடிப்படை விஷயங்கள் காரணமாக அமைந்தது. அந்த மாநிலத்தில் யாராலும் அசைக்க முடியாத ஒரு அரசியல் தலைவராக பார்க்கப்பட்ட மம்தாவை பாஜக அசைத்து பார்த்திருக்கிறது. திரிணாமூல் vs காங்கிரஸ் என்பதை திரிணாமூல் vs பாஜக என்று அனைத்துவிதமான களத்திலும் மாற்றி அமைத்திருக்கிறது.

 

கலவரத்தில் தொடங்கி தேர்தல் களம் வரை இருவரும் எதிர், எதிர் என்றாகிவிட்டது. அடுத்த வருடம் நடைபெற உள்ள மேற்குவங்க சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறது பாஜக. இதேதான் ஒடிஷா மாநிலத்திலும் சட்டமன்ற தேர்தலில் பாஜக எதிர்கட்சியாக இருக்க காரணம் என்று புரியவைக்கிறது. எங்கெல்லாம் காங்கிரஸ் இரண்டாம் நிலையில் இருந்ததோ, அங்கெல்லாம் பாஜக தற்போது இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

 

 

Next Story

தமிழக பா.ஜ.க.வினருக்கு பிரதமர் மோடி பாராட்டு! 

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Prime Minister Modi praises Tamil Nadu BJP

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் இந்த மக்களவை தேர்தலில் திருவள்ளூர், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, கரூர், சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 19 தொகுதிகளில் பா.ஜ.க. நேரடியாக போட்டியிடுகிறது. தாமரை சின்னத்தில் புதிய நீதிக்கட்சி வேலூர் தொகுதியிலும், இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் தொகுதியிலும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் சிவகங்கை தொகுதியிலும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தென்காசி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

மேலும் பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் இராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அ.ம.மு.க. பிரசர் குக்கர் சின்னத்தில் திருச்சி மற்றும் தேனி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பா.ம.க காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

Prime Minister Modi praises Tamil Nadu BJP

இந்நிலையில் பிரதமர் மோடி நமோ செயலி (NAMO APP) மூலம் ‘எனது பூத், வலிமையான பூத்’ என்ற தலைப்பில் தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகிகளுடன் உரையாடினார். அப்போது அவர் பேசுகையில், “தமிழக பாஜகவின் அனைத்துத் தொண்டர்களும் மிக நீண்ட காலமாக நன்றாக தேர்தல் பணிகளைச் செய்து வருகின்றனர். ‘எனது பூத், வலிமையன பூத்’ என்றால் எனது வாக்குச் சாவடி வலிமையானது என்று பொருள். இந்த திட்டம் அனைத்து பா.ஜ.க. தொண்டர்களையும் இணைப்பதுடன் ஒருவருக்கொருவரும் கற்றுக்கொள்ள உதவும்.

தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் வணக்கத்தோடு பேசத் தொடங்குகிறேன், ஆனால் இன்றைய வணக்கம் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் ஒரு தொண்டர் மற்றொரு தொண்டரை வாழ்த்துகிறார். வணக்கம் என்றவுடன், தொண்டர்களுக்குள் ஒரு உணர்வு வரும். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், பள்ளி நண்பர்களை சந்திக்கும் போதெல்லாம், 25, 30 வருடங்கள் கடந்தாலும், சிறியவர், பெரியவர் என்று யாரும்  பாராமல் ஒருவரை ஒருவர்  மகிழ்ச்சியுடன் சந்திக்கிறார்கள். அதேபோல், இது தேர்தல் பணி தொடர்பான ஒரு திட்டம் என்பதால் நானும் மகிழ்ச்சியில் நிரம்பி வழிகிறேன். உங்கள் எல்லோரையும் போல என் வாழ்வின் பெரும்பகுதியை ஒரு தொண்டனாகவே உழைத்திருக்கிறேன், அதனால்தான் இன்று நான் மிகவும் நன்றாக உணர்கிறேன்.

Prime Minister Modi praises Tamil Nadu BJP

மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் நடந்து வருவதால் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பொது நிகழ்ச்சிகளுக்காக கடந்த முறை தமிழகம் வந்தபோது தமிழக மக்களின் ஆசிர்வாதம் கிடைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. தொண்டர்களின் கடின உழைப்பைப் பார்க்க முடிந்தது, அப்படிப்பட்ட தொண்டர்களைப் பெற்றதை பெருமையாக உணர்ந்தேன். பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை முன்மாதிரியாக கொண்டு பா.ஜ.க. செயல்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றுவதும், அதில் பெண்கள் முக்கியப் பங்காற்றுவதும் எங்களது உறுதி. பா.ஜ.க.வின் பெண் தொண்டர்கள் கடுமையாக உழைத்து வருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

போதைப்பொருட்கள் நம் குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் வாழ்க்கையை அழிக்கும். கடந்த நாட்களில் கைப்பற்றப்பட்ட அனைத்து போதைப்பொருள் பதுக்கல்களும், அதற்கு முக்கிய காரணமானவர்கள் தமிழ்நாட்டுடன் தொடர்புடையவர்கள். இது மிகவும் கவலைக்குரிய விஷயம். எனவே நீங்கள் அனைவரும் நம் குடும்பங்களையும், குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டும் என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்” எனப் பேசினார். 

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.