Skip to main content

ராமர் கோயில் கட்டிவிட்டால் எப்படி அரசியல் பண்றது... பாஜகவின் அரசியல் திட்டம்... அதிர வைக்கும் ரிப்போர்ட்!

Published on 06/12/2019 | Edited on 06/12/2019

அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கரசேவை என்ற பெயரில் இடிக்கப் பட்ட நிலையில்... நீண்டகால வழக்கு விசாரணைக்குப் பின் அந்த இடத் தில் ராமர் கோயில் கட்ட உத்தர விட்டது உச்சநீதிமன்றம். மத்திய அரசு அதற்கான குழுவை அமைக்க வேண்டும் என்றும் கூறியது. ஆனால் மத்திய பா.ஜ.க. அரசு மாநிலத் தேர்தல்களில் கவனம் செலுத்தி வருவதால் ராமர் கோயில் பற்றி நினைக்கவில்லை. அதாவது ராமருக்கு கோயில் கட்டிவிட்டால் அதன் பிறகு இந்தியாவில் ராமரை வைத்து அரசியல் செய்ய முடியாது என்பதால் கோயில் கட்டும் பணியில் சுணக்கம் காட்டிவருவதாக காவி கட்டிய பக்தர்கள் குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளனர்.

 

bjp



கடந்த 20 வருடங்களுக்கு மேலாக ராமர் கோயில் கட்ட நிதி வேண்டும் என்று பல்வேறு இந்து அமைப்புகளும் கரசேவை புரத்தில் முகாமிட்டு வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கின்றன. அந்த வசூலுக்கு வரவு-செலவு கணக்குகளே இல்லை. இந்த நிலையில் தான்... "ராமர் கோயில் கட்டுமானப் பணிக்குழுவில் அமித்ஷாவையும், ஆதித்யநாத்தையும் சேர்க்க வேண்டும்' என்று ஆர்.எஸ்.எஸ். சொல்லிவருகிறது. "கரசேவைக்காக அமித்ஷா போன்றவர்கள் என்ன செய்தார்கள்? ஏன் அவர்களை சேர்க்க வேண்டும். இதுவரை ராமர் பெயரை வைத்து அரசியல் செய்தது போதும். இதன் பிறகாவது அரசியல் செய்வதை விட வேண்டும்' என்றும் காவிகள் பலமாக குரல் உயர்த்தி வருகின்றனர்.
 

bjp



பட்டுக்கோட்டையில் இருந்து அயோத்திக்கு செங்கல் கொண்டு போய் கொடுத்துவிட்டு வந்துள்ள அகில பாரத ஸ்ரீராம் சேனா தேசிய பொதுச்செயலாளர் ஆதி மதனகோபாலை சந்தித்தோம்...

"சுப்பிரமணியசுவாமி தனது பிறந்த நாளை அயோத்தியில் நித்திய கோபால் தாஸ் தலைமையில் கொண்டாடினார். அப்போது, "நவம்பரில் தீர்ப்பு வரும். அந்த தீர்ப்பு நமக்கு சாதகமாக வரும்' என்று சொன்னார். ஏனென்றால் அவரும் இந்த வழக்கில் இணைந்து வழக்கை துரிதமாக கொண்டுவந்தவர். அவர் சொன்னபடியே நடந்துவிட்டது. அதனால்தான் அவர் சொன்னதை நம்பி செங்கல் பூஜை செய்துகொண்டு போனோம்.

அங்கே போய் ரயிலை விட்டு இறங்கியதும், எங்களை பாதுகாப்பாக போலீசார் கரசேவைபுரத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே நாங்கள் கொண்டு சென்ற செங்கற்களை ஒப்படைத்தோம். அங்கே கண்ட இடத்திலும் ரசீது புத்தகம் வைத்துக்கொண்டு, ரசீது இல்லாமலும், உண்டியல் வைத்துக்கொண்டும் "ராமர் கோயில் கட்ட நிதி கொடுங்கள்' என்று வசூல்வேட்டை நடந்துகொண்டிருக்கிறது. அதைப் பற்றிக் கேட்டால், "20 வருடங்களுக்கு மேலாக இப்படி ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் வசூல் செய்து வருகின்றன என்றும் அதற்கு இதுவரை கணக்கே காட்டவில்லை' என்றும் சொல்கிறார்கள். ஆனால், இப்ப ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் "பண மில்லை நிதி கொடுங்கள்' என்று கேட்கிறார்கள். இதைப் பார்க்கும்போது அதிர்ச்சியாக உள்ளது.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வருகிறார்கள். அவர்களிடமும் வசூல் அதிகமாக நடக்கிறது. ஆனால் எதற்கும் கணக்கு இல்லை. அப்படியானால் அந்தப் பணம் எங்கே செல்கிறது? தீர்ப்புக்குப் பிறகுகூட குறிப்பிட்ட இடம் பழைய பந்தலில்தான் இருக்கிறது. அதைக்கூட மாற்றி அமைக்கவில்லை.


இந்த நேரத்தில்தான் ஆர்.எஸ்.எஸ். செய்தித் தொடர்பாளர் சரத்சர்மா, "பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, முதல்வர் ஆதித்யநாத் போன்றவர்களை திருப்பணிக்குழுவில் இணைக்க வேண்டும்' என்றும் சொல்லி இருக்கிறார். ஆனால் "அமித்ஷாவை சேர்க்கக்கூடாது' என்று நாங்கள் சொல்கிறோம். அவரைச் சேர்த்தாலோ, ஆதித்யநாத்தை சேர்த்தாலோ பிரச்சினைகள் வரும். அதனால் கோயில் கட்டமாட்டார்கள். இதைவைத்து மறுபடியும் பா.ஜ.க. அரசியல்தான் செய்யும். அப்படி அவர்களைச் சேர்த்தால் சுப்பிரமணியசாமியையும் சேர்க்கவேண்டும். பல வருடங்களாக ராமர் கோயில் கட்ட அயோத்தியிலேயே தங்கி உள்ள நித்தியகோபால் தாஸை தலைவராகப் போடவேண்டும். இந்தியாவில் உள்ள முதல்வர்கள், கரசேவையில் ஈடுபட்டவர்கள், உயிரிழந்தவர்களின் குடுபத்தினரையும் இணைக்க வேண்டும்.

மத்திய அரசு குழு அமைத்து கோயில் கட்ட நினைக்கிறதோ இல்லையோ, 2020 ஏப்ரல் 2-ந் தேதி ராமநவமி அன்று அயோத்தியில் ராமர்கோயில் கட்ட அடிக்கல் நாட்டவிருக்கிறோம். அதில் பிரதமர் மோடி கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்புக் கொடுக்கிறோம். அவர் வந்து கலந்துகொள்வார் என்றும் நம்பு கிறோம். அதற்காக மார்ச் 29-ந் தேதி ராமேஸ் வரத்தில் இருந்து புறப்படுகிறோம். இனிமேலும் ராமர் பெயரைச் சொல்லி பா.ஜ.க. அரசியல் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும்'' என்றார்.

 

 

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.